இந்த வாரம் கவிதைநேரத்தில் நமது நண்பர்கள் அளித்த கவிதைகள் உங்கள் பார்வைக்கு
New-_dust :
நித்தம் தேடி உன்னை நினைத்து..,
என்னை நானே உயிர்ப்பித்து..,
அரைகுறையாய் உண்டு முடித்து.,
அன்னையிடம் அர்ச்சனை வாங்கி.,
கதவோரம் முழங்கால் இடித்து,
தெருவெல்லாம் கடிவாளம் அணிந்து.,
மூச்சிரைக்க உன் முகம் பார்த்து.,
கண்டேன் உன் இதழ் திறக்கும்
புன்னகையை !!
புத்தம் புதிதாய் பூத்து குலுங்கினேன் !!
----
anuraga:
.
1.நின் புன்னகையால்
பூத்த இந்நாளில் தான்
என் மனச்சுமைகள் லேசாக மறைகின்றன .
பன்னீர் பூவே நின் இதழின்
பூத்த அந்த புன்னகை அப்படியே
இருக்கட்டும்....!!
.
2.பெண் புன்னகைக்க
தாய் கொடுத்தால் பொன் நகை..!
.இதில் மின்னுவது பொன் நகையா
பெண்ணின் புன்னகையா ?!
3 .எதனை வலி வந்தாலும்
புன்னகைக்க முடியுமா ? அனால் உன்னை சுமந்து உன் ரோஜா போன்ற முகத்தை பார்த்த நொடி என் வலி எல்லாம் மறந்து புனகைக்க மட்டுமே முடிந்தது .
---------
karthis :
புன்னகை
வாழ்வை பிரகாசமாக்குகிறது
துக்கத்தில் கூட ஊக்கம் அளிக்கிறது
பிரபஞ்சம் பிரகாசிக்கும் ஒரு சூரிய ஒளி போன்றது!
புன்னகை
ஒரு மகிழ்ச்சியான தொற்றுநோய்
யாரோ புதிய நபர் என்னைப்பார்த்து சிரித்தால் நானும் சிரிக்கிறேன்!
புன்னகை
மகிழ்ச்சியின் அடையாளம்
ஒவ்வொரு நாளும் சிரிப்போம்
புன்னகையுடன் வாழ்க்கையை கொண்டாடுவோம்!
-------------
mugilkutty :
எத்தனையோ குரலை
கேட்டு இருக்கிறேன்..
ஆனால் உன் குரலை கேக்கும் போது
என் முகத்தில் மலரும் புன்னகையை
என்னவென்று சொல்வது, அது
விலை மதிப்பில்லாத பொன் நகை !!
Madhan:
1.பெண்ணே நீ பொன் நகைக்கு ஆசைபட்டு புனைகை மறந்து விட்டாய்
இப்போது எல்லாம் !!.
உனக்கு தெரியுமோ தெரியாதோ
பொன் நகை வரும் முன்னே புன்னகை பிறந்து விட்டது!
2.எந்த உலகம் வேண்டினது உன்
புன்னகை பார்க்க தானோ ...
சூர்யனுக்கு தெரிய வில்லை ..
உன் புன்னகை சூர்ய ஒளியை விட சக்தி ஆனது என்று ..
kaviasmi:
உதாரணக் கவி சொல் என்றேன்
ஒரு புன்னகை உதிர்த்து சென்றான் ..
அடடா!!! இந்த
புன்னகை கவிதைக்கு முன்னால்
கவிதை எழுத முடியுமா என்னால் ??
keerthana:
பூக்கள் பூக்கட்டும் உன் புன்னகை பார்த்து..
கவிதைகள் பிறக்கட்டும் உன் குரல் கேட்டு
நிலாவும் விழிக்கட்டும் உன் முகம் பார்த்து
அன்பு தொடரட்டும் நம்மை பார்த்து.. !!
maddy123:
பார்வையால் பரிசளித்தது உன்
கண்கள் , புன்னகையை
மாறுதடி உன் உதடுகள்
ishubena:
உன் சிரிப்பு.,
இதழ் ஓரம்
தீட்டிய வண்ணம்...
போதை தரும் இந்த வர்ணம்,
பார்க்கும் போது எல்லாம்
ஈர்க்கும் ...
பாவைகளுக்கு
அழகுசேர்க்கும்
DubaiSurya:
மனம் உவந்து
சிரித்தால் அது
புன்னகை
மனம் நொந்து
சிரித்தால் அது புண்(ன்)னகை
StartMusic:
உன் கண்கள் இல்லாமல் இந்த உலகில்
வேறு என்ன இருக்கும் ....
அது திறக்கும்போது ...பகல் விடியும் ,,,
மூடும்போது இரவு புலரும் ....
என் வாழ்வும் சாவும் ..
உன் பார்வையில் தான் இருக்கும்...
Ramya:
செடியின் புன்னகை மலர்
இதழின் புன்னகை சிரிப்பு
மலரைப் பார்த்ததும் சின்னசிறு
குழந்தையாய் மனம் ஆர்பரிக்கும்
இதழில் புன்னகை மலர்ந்தால்
அகத்தின் துன்பம் மறைந்து
ஆகாயத்தில் துள்ளித்திரிவோம்
புன்னகை இறைவனின் வரம்
வரத்தை அனுபவித்து
வாழ்வை இன்பமயமக்குவோம் ....