ANAND Administrator
Posts : 631 Points : 1803 Join date : 2010-03-11 Age : 41
| Subject: மனதில் உறுதி வேண்டும் Fri Aug 23, 2013 11:59 am | |
| சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பின், தென்னாப்ரிக்காவில் நடந்த உலக போட்டியில், வட்டு எறிதலில் தங்கம் வென்ற, ஹரிகுமார்: சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்ததால், பல பரிசுகள் பெற்றிருக்கிறேன். நன்கு படித்து, சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினேன். கல்லூரி காதல், அலுவலகம் வரை தொடர்ந்தது. அப்பெண்ணையே திருமணமும் செய்து கொண்டேன். திருமணம் ஆன ஒரு மாதத்தில், அடிக்கடி தலைவலி, பிளட் பிரஷர் என, உடல் நிலை ஏகத்துக்கும் மோசமானது. மருத்துவ சோதனையில், சிறுநீரகம் செயலிழந்ததாக கூறினர். சிறுநீரகம், 5 சதவீதம் மட்டுமே வேலை செய்தாலும், வெளியில் எதுவும் தெரியாது என்பதே, பிரச்னை பெரிய அளவிற்கு முற்ற காரணம். வாரம், மூன்று முறை, "டயாலசிஸ்' செய்து வந்ததால், அந்த ஆண்டு முழுவதும் நரக வேதனையாக இருந்தது. என்ன தான் திருமணம் செய்தாலும், மனைவியுடன் வாழ்ந்தது, ஒரு மாதம் மட்டுமே. இருந்தாலும் எனக்காக, தன் சிறுநீரகத்தையே தானமாக தந்து உதவினாள். அனைத்து மருத்துவ சிகிச்சைகளும், மேற்கொண்டு விரைவாக நடக்க உதவி, குறுகிய காலத்திற்குள் என்னை, "நார்மல்' இளைஞனாக மாற்றினாள். நான், உடல் மற்றும் மனதளவில் புத்துணர்ச்சி பெற, விளையாட்டில் ஈடுபடுத்தினாள். அப்படி விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் போது தான், மாற்று இதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகத்தை தானமாக பெற்ற பிறகும், நீண்ட காலம் நார்மல் வாழ்க்கை வாழலாம் என்பதற்காக, விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதாக அறிந்தேன். அதனால், "சேப்பியன் பவுண்டேஷன்' மூலம், முறையாக பயிற்சி பெற்று, தென்னாப்பிரிக்க நாட்டின், டர்பன் நகரத்தில் நடந்த, உடல் உறுப்பு தானம் பெற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றேன். இந்தியாவிலிருந்து, நான்கு வீரர்கள் என, உலகளவில், 1,500 பேர் அதில் பங்கேற்றனர். அங்கு நடந்த போட்டியில், வட்டு எறிதலில் தங்க பதக்கமும், ஓட்டப் பந்தயத்தில் வெண்கல பதக்கமும் பெற்று, உடல் சோர்விலும், மன தைரியத்துடன் சாதித்து காட்டினேன். | |
|