வணக்கம் அனைவருக்கும்,
இன்னிசை குரல் தேடலுக்கான, நமது BTC யின் "இன்னிசை குரல் -2013" பத்து வாரங்கள், ஒவ்வொரு வெள்ளி இரவு நடைபெறும் இணைய இசைபோட்டியின் முக்கிய நோக்கமும், எப்படி நடை பெற உள்ளது என்பதற்கான விளக்கம்.
1. இந்த போட்டியில் பங்குபெற்று பெறப்போகும் மதிப்பெண்கள் (rhythm,shruthi, feel, voice, presentation ) அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும். நீங்கள் எந்த பகுதியில் உதாரணமாக ஸ்ருதி அல்லது தாளம் பகுதியில் உங்கள் மதிப்பெண் குறைவாக இருக்கிறதென்றால், அந்த பகுதியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி பாடும் திறனை மெருகேற்றி கொள்ள அருமையான வாய்ப்பாக இந்நிகழ்ச்சியை பயன்படுத்திகொள்ளுங்கள்
2. நீங்கள் பாடி முடித்தவுடன் சிறப்பாக பாடுவதற்கான நுணுக்கங்கள், வழிமுறைகளை போட்டியின் நடுவர்கள் வழங்கிவருவது மேலும் உங்கள் பாடும் திறனை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை
3. இனிவரும் வாரங்களில் ஒவ்வொரு வாரம் ஒரு தலைப்பு(i.e theme - like folk, fast beat etc) மையப்படுத்தி இசை போட்டிகள் இருக்கும்..உங்கள் குரல் எந்த மாதிரியான பாடலில் அதிக மதிப்பெண்ணை பெற்று தந்திருக்கிறது என்னும் உங்களின் தனித்திறனை அறிந்து கொள்ள அருமையான வாய்ப்பு.எனவே இனிவரும் அனைத்து வாரமும் உற்சாகமாக, தவறாது கலந்துகொண்டு சிறப்பியுங்கள்
இந்த இன்னிசை குரல் -2013 இசை போட்டிகள் நிறைவு விழாவில், தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பாடகர்கள், பிரபலமான தமிழ் பின்னணி பாடகர் ஒருவர் முன்னிலையில் பாடுவதன் மூலம் கவுரவிக்கபடுவார்கள்.
"சிறந்த பாடகர்கள்" தேர்வு என்பது (ஏதாவது ஒரு வாரத்தில் முதல் ஐந்து இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர்கள் மற்றும் அனைத்து வார போட்டிகளில் கலந்துகொண்டு பெறப்படும் மொத்த மதிப்பெண்கள் வரிசையில் முதல் 12 இடத்தை பிடிப்பவர்கள்)
இந்நிகழ்ச்சிக்கு பெருந்துணையாக செயல்படும் போட்டியின் நடுவர்கள்,
நிகழ்ச்சியை மிக சிறப்பாக தொகுத்து வழங்கி சிறப்பிக்கும் தொகுப்பாளர் திரு வெங்கட் ,
பங்குபெறும் பாடகர்களை வரிசைபடுத்தி உதவும் செல்வி அனுஷா, இன்னிசை குரல் -2013 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி.சிவப்ரியா,கலந்துகொண்டு சிறப்பிக்கும் பாடகர்கள், BTC நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து BTC உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
இந்த வார நிகழ்ச்சியின் முடிவுகள்: