தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு : 1/4 கிலோ
பாசிப்பயிறு : 1/4கிலோ
தட்டப்பயிறு : 1/4கிலோ
பட்டாணிக்கடலை :100
காணப்பயிறு : 200கிராம்
செய்முறை
பட்டாணிக் கடலையை 48 மணி நேரம் நனைய வைக்க வேண்டும். பாசிப்பயறு, தட்டப்பயிறு,காணப்பயிறு மூன்றையும் 24 மணி நேரம் நனைய வைக்கவும். கடலைப்பருப்பை முந்தின நாள் இரவு நனையவைக்கவும். 12 மணி நேரத்திற்கு ஒரு தடவை தண்ணீரை மாற்றி வேறு தண்ணீர் ஊற்றி வைக்கவும். பயிறு வகைகள் சுருக்கம் இல்லாமல் முளை கிளம்பும் பக்குவம் வரை நனையவேண்டும். பின்பு நனைந்த பயிறு வகைகளைக் களைந்து, தனித்தனியாகக் கொட்டானில் தண்ணீர் வடியவைத்து எண்ணெயில் ஒவ்வொன்றாக கொஞ்சம், கொஞ்சம் போட்டு பொரித்து எடுத்து தாளில் போட்டு எண்ணெய் வடியவைத்து எல்லாவற்றையும் கலந்து கருவேப்பிலை பொரித்து போட்டு தேவையான வற்றால் தூள்,உப்புத்தூள்,கொத்தமல்லி சீரகத்தூள் கலந்து உபயோகிக்கலாம்.