கலையும், இலக்கியமும்
கைகோர்க்கும் நேரம்...
காடு, மலைகளில் அலைந்து திரிந்த மனிதன் களைப்போடு காலாற அமர்ந்து, கொஞ்-சம் யோசித்தபோது கலையும். கலாச்சாரமும் பிறந்தன.
பாடினான் - இசை வந்தது. ஆடினான் - நடனம் பிறந்தது. கிறுக்கினான் - ஓவியம் உருவெடுத்தது.
மனிதனுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு தான் கலை. மொழிகள் உ-ரு-வா-கி - வ-ளர்ந்-த போது, நிழலாக கலாச்சாரமும் உடன் நடந்-த-து.
தமி-ழர்-கள் தங்--கள் மொழி-யை-யே இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவாக பிரித்துக் கொண்டனர். சங்கம் வைத்து தமிழையும், கலையையும் வளர்த்தனர். முத்தமிழ் சங்கம் கண்டது மூதூர்மதுரை.
கலையும், பண்பாடும் தமிழகத்தை அலங்கரித்தன. ராஜ நடை போட்ட கலைகளை, மன்னர்கள் போட்டி போட்டு வளர்த்தனர். கோவில்கள், கட்டடங்கள், அவரவர் கலைகளைப் பிரதிபலிக்கத் துவங்கின.
கலை, கலாச்சாரம் மட்டுமல்லாது, இலக்கியமும் தமிழகத்தில் பீடு நடை போட்டு வந்துள்ளது. சங்க காலத்து இலக்கியங்கள் இன்னும் சந்தம் குறையாமல் வாசம் வீசிக்கொண்டுள்ளன.
அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு எனத் துவங்கிய இந்த இலக்கியங்கள் இன்றும் திருக்குறள், பாரதியார் பாடல்கள் எனத் தொடர்ந்து கொண்டுள்ளன.
கலைக்-கு அழி-வில்-லை. நாட-க-மா-க, சினி-மாவாக-வும் வளர்ந்த-து. இன்-று "டிஜிட்-டல்" யு-கம். கலை இதை-ப் பார்த்-து ஓடிப்-போய்-வி--ட-வில்-லை. அண்-ட-வெ-ளி-யாய்பர-வி-வ--ரும் "-விர்ச்-சு-வல்" வெளி--யை-யும் கலை-கள் எட்-டிப் பிடித்-து வ-ரு-கின்-ற-ன.
வேலை, ஓட்-டம், பணம், வேகம், வளர்ச்-சி, வியர்-வை, -போட்-டி, களை-ப்-பு என்-று வாழ்க்-கை மு-டிந்-து-வி-டா-மல் த-டுப்-ப-து தான் கலை.
கலையும், கலாச்சாரமும், இலக்கியமும் ஒன்றுக்குள், ஒன்றாக இரண்டற கலந்து பிரித்துப் பார்க்க முடியாத பந்தத்தில் உள்ளவை.
இந்தப் பகுதிக்குள் வந்துள்ள நீங்கள் இனிமேல் இவை மூன்றையும் ஒவ்வொன்றாக நுகர்ந்து விட்டு அடுத்த பக்கம் போகலாம்.
-இந்-தப் ப-கு-தி-யில் வாரத்-திற்-கு கு-றைந்-த--பட்-சம் மூன்-று பு-தி-ய விஷ-யங்-க-ளை உங்-க-ளு-டன் பகி-ர்ந்-து கொள்-வோம்.
வாருங்கள்,
இலக்கியத்துடன் கை குலுக்குவோம்...
காற்-று-டன் -க-லை--யை-யும் சு-வா-சிப்-போம்...