தேவையான பொருட்கள்
* இடியாப்பம் - 10
* உருளைக்கிழங்கு - 3 சிறியது
* தக்காளி - 2 சிறியது
* நறுக்கிய கோஸ்,கரட் கலவை - 1 கப்
* ஊறவைத்த சோயாமீற் - 1/2 கப்
* அவித்த கடலை - 1 கப்
* நீளமாக வெட்டிய வெங்காயம் - 1/2 கப்
* நீளமாக வெட்டிய உள்ளி - 1/2 கப்
* நீளமாக வெட்டிய பச்சை மிளகாய் - 3
* குறுணலாக வெடிய இஞ்சி - 1 தேக்கரண்டி
* கராம்பு - 4
* ஏலம் - 3
* கறுவா - 2" துண்டு
* கஜு - 20 கிராம்
* ரெய்சின் (Raisin) - 15 கிராம்
* கடுகு - சிறிது
* பெரிய சீரகம் - சிறிது
* வெந்தயம் - சிறிது
* மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
* மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
* சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
* பட்டர் - 1 மேசைக்கரண்டி
* கறிவேப்பிலை/கொத்தமல்லித்தழை - சிறிது
செய்முறை
* இடியாப்பத்தை உதிர்த்து வைக்கவும். உருளைக்கிழங்கு, தக்காளி, ஊறவைத்த சோயாமீற்றை சிறு துண்டுகளாக வெட்டவும்.
* கராம்பு, ஏலம், கறுவா என்பவற்றை வறுத்து பொடியாக்கி வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பெரிய சீரகம், நீளமாக வெட்டிய வெங்காயம், உள்ளி, பச்சை மிளகாய், உருளை, சோயாமீற் என்பவற்றை போட்டு வதக்கவும். பின் அவித்த கடலை, நறுக்கிய கோஸ்,கரட் கலவையை சேர்த்து வதக்கவும்.
* கலவை ஓரளவு வதங்கியதும் 1 கப் நீர் விட்டு மூடி அவிய விடவும்.
* பின்னர் வெட்டிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் அவிய விடவும்.
* கலவை நன்கு அவிந்து ஓரளவு நீர் வற்றியதும் குறுணலாக வெடிய இஞ்சி, வெந்தயம் சேர்த்து கிளறவும்.
* கலவை நன்கு நீர் வற்றி சுருண்டதும் பொடியாக்கிய ஏல கலவையை போட்டு கிளறி மூடி 2 நிமிடங்கள் மெல்லிய நெருப்பில் வைக்கவும்.
* பின்னர் உதிர்த்த இடியாப்பத்தைக் கொட்டி கறியுடன் சேரும்வரை நன்கு கிளறவும்.
* இடியாப்ப கொத்து தயார். இதனை பரிமாறும் தட்டில் கொட்டி பரவி பட்டரில் வறுத்த கஜு, ரெய்சின் மற்றும் கறிவேப்பிலை/கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.