Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: பொது அறிவு வினா-விடை Sat Apr 03, 2010 2:51 pm | |
| 41. ரக்திகா என்பது
அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு இ. பண்டைய இந்தியாவின் எடை முறை ஈ. இவை எதுவும் சரியல்ல
42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?
அ. மாவீரர் சிவாஜி பற்றியது ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது இ. நமது வேதங்களைப் பற்றியது ஈ. இவை அனைத்துமே சரி
43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி
அ. சமஸ்கிருதம் ஆ. பிராக்கிருதம் இ. தெலுங்கு ஈ. இவை அனைத்தும்
44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்
அ. தாங்கர் ஆ. கீர்த்திவர்மன் இ. யசோதவர்மன் ஈ. உபேந்திரர்
45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது
அ. தீயினை உருவாக்க ஆ. விலங்குகளை வளர்க்க இ. சக்கரங்களை செய்ய ஈ. தானியங்களை வளர்க்க 46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை
அ. தியானம் ஆ. அறியாமை அகற்றுதல் இ. நோம்பு ஈ. திருடாமை
47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்
அ. கபில வஸ்து ஆ. சாரநாத் இ. கோசலம் ஈ. பாடலிபுத்திரம்
48. ஹர்ஷ சரிதம் எழுதியவர்
அ. ஹர்ஷர் ஆ. பாணர் இ. ஹரிசேனர் ஈ. தர்மபாலர்
49. சரக சமிதம் என்பது
அ. வானவியல் நூல் ஆ. புத்த இலக்கியம் இ. மருத்துவ நூல் ஈ. கணித நூல்
50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்
அ. குந்தல்வனம் ஆ. பெஷாவர் இ. கனிஷ்கபுரம் ஈ. கோட்டான்
விடை: 41. இ 42. ஆ 43. ஆ 44. இ 45. அ 46. ஆ 47. ஈ 48. ஆ 49. இ 50. அ | |
|