Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: பொது அறிவு வினா-விடை Sat Apr 03, 2010 8:25 pm | |
| 121. பின்வருவனவற்றில் எது மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?
அ. அரிசி ஆ. சோளம் இ. பார்லி, கோதுமை ஈ. மில்லட்
122. சமஸ்கிருத மொழி வார்த்தையான இந்து எதைக் குறிக்கிறது?
அ. மொழி ஆ. ஆறு இ. மதம் ஈ. ஜாதி
123. கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
அ. இரும்பு ஆ. செம்பு இ. வெண்கலம் ஈ. தகரம்
124. அசோகரின் கல்வெட்டுக்கள் 1837ல் யாரால் விளக்கப்பட்டன?
அ. ஜேம்ஸ் பிரின்செப் ஆ. வில்லியம் ஜோன்ஸ் இ. வின்சென்ட் ஸ்மித் ஈ. மேக்ஸ் மியூலர்
125. ரஷ்யாவின் போல்ஷ்விக் புரட்சி எவ்வாறும் அழைக்கப்படுகிறது?
அ. அக்டோபர் புரட்சி ஆ. நவம்பர் புரட்சி இ. டிசம்பர் புரட்சி ஈ. ஜனவரி புரட்சி
126. சிந்து சமவெளி நாகரீகம் எங்கு பரவியிருந்தது?
அ. பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், குஜராத் ஆ. பஞ்சாப், சிந்து, வங்காளம், பீகார் இ. பஞ்சாப், சிந்து, ஜம்மு காஷ்மீர், ஒரிசா ஈ. சிந்து, கங்கை கரையோரப் பகுதிகள்
127. பின் வேத காலம் என்பது
அ. ரிக் வேத காலம் ஆ. இதிகாச காலம் இ. உலோக காலம் ஈ. மேற்கண்ட அனைத்தும்
128. ரிக் வேதத்தில் சாதிகளைப் பற்றிய குறிப்பு உள்ள பாடல்
அ. கிரகஸ்தம் ஆ. புருஷசூக்தம் இ. கோஷோலிங்கம் ஈ. மனிஷ்தம்
129. சிந்து சமவெளி நகரான மொஹஞ்சதாரோவைக் கண்டுபிடித்தவர்
அ. சர் ஜான் மார்ஷல் ஆ. ஆர்.டி. பானர்ஜி இ. தயாராம் ஷானி ஈ. சர்மார்டிமர் வீலர்
130. பின் வேத காலத்தில்
அ. பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர் ஆ. பலதார மணம் நடைமுறையில் இருந்தது இ. குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன ஈ. பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது
விடை: 121. ஆ 122. ஆ 123. ஆ 124. அ 125. அ 126. அ 127. ஆ 128. ஆ 129. ஆ 130. ஆ | |
|