Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: பொது அறிவு வினா-விடை Sun Apr 04, 2010 11:28 am | |
| 11. தாஸ் கேபிடல் என்னும் புத்தகத்தத எழுதியவர் யார்?
அ. கார்ல் மார்க்ஸ் ஆ. பிரடக் எங்கெல்ஸ் இ. செயிண்ட் சைமன் ஈ. ராபர்ட் ஓவன்
12. பாஸ்டன் தேனீர் விருந்து என்பது எதோடு தொடர்புடையது?
அ. பாஸ்டன் நகரத்தில் நடைபெற்ற தேனீர் விருந்து ஆ. தேயிலை மீதான வரி இ. பாஸ்டன் நகர சீரமைப்பு ஈ. பாஸ்டன் நகர மேயரின் இல்லப் பெயர்
13. பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ. கார்ல் மார்க்ஸ் ஆ. ஆல்பிரட் மார்ஷல் இ. கார்டோ ஈ. ஆடம் ஸ்மித்
14. வளர்ச்சி குறைந்த நாடுகளின் தன்மை என்ன?
அ. மிக அதிக முதலீடு உருவாகுதல் ஆ. மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் இருப்பது இ. உயர்ந்த தனி நபர் வருமானம் ஈ. வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமானோர் இருப்பது
15. வளர்ச்சியின் 5 நிலைகள் என்னும் கோட்பாட்டைத் தந்தது யார்?
அ. ஜே.எம். கெய்ன்ஸ் ஆ. கால்பிரைத் இ. நர்க்ஸ் ஈ. ராஸ்டோவ்
16. நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட 2 தொழில்கள்
அ. ஜூட் மற்றும் பருத்தி ஆ. சர்க்கரை மற்றும் ரப்பர் இ. பேப்பர் மற்றும் இரும்பு ஈ. இன்ஜினியரிங் மற்றும் சிமென்ட்
17. இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
அ. ம.பி. ஆ. உ.பி. இ. பீகார் ஈ. ராஜஸ்தான்
18. இந்திய திட்டக் குழுவிற்கு தலைவர் யார்?
அ. பிரதமர் ஆ. ஜனாதிபதி இ. ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் ஈ. ஏதாவது ஒரு மத்திய அமைச்சர்
விடை: 11. அ 12. ஆ 13. ஈ 14. ஈ 15. ஈ 16. அ 17. ஆ 18. அ | |
|