Click "Like" Button To Join | |
| | மீன் கட்லெட் | |
| | Author | Message |
---|
J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: மீன் கட்லெட் Sat Jun 26, 2010 2:10 pm | |
| மீன் கட்லெட்
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ பொடியாக நறுக்கிய இஞ்சி&பூண்டு - 1 கரண்டி வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 முட்டை - 1 ப்ரெட் க்ரம்ப்ஸ் - 3/4 கப் கறிவேப்பிலை - 2 உருளை கிழங்கு வேக வைத்து மசித்தது - 1 உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி இலை - 1/4 கப் பொடியாக நறுக்கியது எண்ணை பொரிக்க - 1/2 கப்
செய்முறை:
செய்முறை மீன் துண்டுகளில் மஞ்சள், மிள்காய்த் தூள், உப்பு தேவைக்கு சேர்த்து பாதி வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும். பிறகு எண்ணை 2 கரண்டி காயவைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நல்ல பொன்னிறத்துக்கு வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி மற்றும் பூண்டு நறுக்கியது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்க வேண்டும். பிறகு பொரித்து சிறு சிறு துண்டுகளாக பிய்த்துப் போட்ட மீனை சேர்த்து மேலும் வதக்க வேண்டும்.
கொத்தமல்லி இலை சேர்த்து, மசித்த உருளைக் கிழங்கும் சேர்த்து கலக்கி கைய்யில் வடை போல் தட்ட வேண்டும். முட்டையை கட்டியில்லாமல் மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். ப்ரெட் க்ரம்ப்ஸை ஒரு பரந்த பாத்திரத்தில் பரவலாக கொட்டி வைக்க வேண்டும். பின்பு தட்டிய மீன் வடைகளை முட்டையில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் பொதிந்து எடுக்க வேண்டும். இப்படி எல்லா வடைகளையும் பிரட்டி எடுத்து ஃப்ர்ரிசரில் 10 நிமிடம் வைத்தால் ப்ரெட் க்ரம்ஸ் வடைகளோடு நன்கு ஒட்டியிருக்கும். பின் எண்ணை 1/4 கப் காயவைத்து நான் ஸ்டிக் பானில் ஆறோ அல்லது அதற்கும் மேற்பட்ட வடைகளையோ இட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாற வேண்டும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: சிக்கன் பாஸ்தா Sat Jun 26, 2010 2:11 pm | |
| சிக்கன் பாஸ்தா
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 2 கப் சிக்கன் - 1கப் சீஸ் - 100 கிராம் தக்காளி - 1 வெங்காயம் - 1 குடை மிளகாய் - சிறியது 1 மஞ்சள் - 2 மேஜைக்கரண்டி சீரகம் பவுடர் – 2 மேஜைக்கரண்டி மிளகு பவுடர் - 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி எண்ணெய், உப்பு, மல்லி இலை – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்க வேண்டும். சிக்கனை சிறிய துண்டுகளாக கட் செய்து கழுவி நீர் இல்லாமல் வைக்க வேண்டும். தக்காளி, வெங்காயம், குடை மிளகாய், மல்லி இலை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி,சிக்கன் ,மஞ்சள்,சீரகம்,மிளகு,உப்பு சிறிது போட்டு வெந்தவுடன், குடை மிளகாய் போட்டு கிளறி இறக்க வேண்டும்.
பேக்கிங் பவுலில் எண்ணெய் சிறிது தடவி பாஸ்தா, வேக வைத்த சிக்கன், அதன் மேல் செடார் சீஸ் போட்டு அவனில் 200 டிகிரியில் 15 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். மல்லி இலை தூவினால் சிக்கன் பாஸ்தா ரெடி. | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: குண்டூர் சிக்கன் Sat Jun 26, 2010 2:12 pm | |
| குண்டூர் சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 500 கிராம் காய்ந்த சிவப்பு மிளகாய் - 5 கடுகு – அரை தேக்கரண்டி வெந்தயம் – கொஞ்சம் தேங்காய் துருவல்– 3 தேக்கரண்டி மல்லி – 3 தேக்கரண்டி மிளகு – 1 தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி எண்ணெய் – 4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 தேக்கரண்டி ஏலம் பட்டை கிராம்பு கலவை – 1 தேக்கரண்டி வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 150 கிராம் புளிக்காத தயிர் – 2 தேக்கரண்டி மல்லி இலை – சிறிது
செய்முறை:
சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி நீர் இல்லாமல் எடுத்து வைக்க வேண்டும். காய்ந்த மிளகாய், முழுமல்லி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பு நிறம் வரும்வரை வறுத்து எடுக்க வேண்டும்.
ஆறியவுடன் பொடி செய்து, பின்பு அத்துடன் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ள வேண்டு. ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கி மணம் வந்தவுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் அரைத்த மசாலா, தயிர் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்பு சிக்கனை சேர்த்து, பிரட்டி விட வேண்டும். சிறிது கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் சிம்மில் வேக விட வேண்டும். அடிக்கடி பிரட்டி விட வேண்டும். எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும். சிக்கன் வெந்தபின்பு மல்லி இலை தூவ வேண்டும்.
இப்போது குண்டூர் சிக்கன் ரெடி. | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: மட்டன் ஸ்பிரிங் ரோல் Sat Jun 26, 2010 2:13 pm | |
| மட்டன் ஸ்பிரிங் ரோல்
தேவையான பொருட்கள்:
கறி - 1/2 கிலோ பெரிய வெங்காயம் - 2 முட்டை - 1 இஞ்சி,பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன் கார்ன் ஃப்ளார் - 150 கிராம் மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன் பச்சரிசிமாவு - 200 கிராம் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 1 ஸ்பூன் தக்காளி சாஸ் - 1ஸ்பூன் அஜினோமோட்டோ - 2 சிட்டிகை
செய்முறை:
கறியை உப்பு,மஞ்சள்தூளுடன் சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணைய் ஊற்றி இஞ்சி,பூண்டு விழுது சேர்த்துவதக்கவும். அடுத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் கறி, சோயா சாஸ்,தக்காளி சாஸ் சேர்த்து சுண்ட வதக்கவேண்டும். சோளமாவு,பச்சரிசி மாவுடன் முட்டை, மிளகுத்தூள் ,அஜினோமோட்டோ சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் சிறு சிறு தோசைகளாக ஊற்றி 10 லிருந்து 15 தோசைகள் ஊற்றிக்கொள்ளவும். ஒவ்வொரு தோசைக்குள்ளும் வதக்கிய காய்கறி கலவைகளை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து ரோல் செய்து இரண்டு ஓரங்களையும் மாவு கொண்டு ஒட்டவும் இந்த ரோல்களை எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து உண்ணலாம். மட்டம் ஸ்ப்ரிங் ரோல் ரெடி | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: கோவா சிக்கன் கறி Sat Jun 26, 2010 2:15 pm | |
| கோவா சிக்கன் கறி
தேவையான பொருட்கள்:
கோழி - 1 தேங்காய் - ஒன்று மஞ்சள் - ஒரு அங்குலத் துண்டு உலர்ந்த மிளகாய் - 10 மிளகு - 6 பட்டை - இரண்டு அங்குலத்துண்டு ஏலக்காய் - 4 இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு சீரகம் - ஒரு தேக்கரண்டி பூண்டு - 10 பல் கிராம்பு - 4 புளி - சிறு எலுமிச்சை அளவு வினிகர் - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி பெரிய வெங்காயம் - 2 உப்பு - தேவையான அளவு சீனி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
கோழிக்கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். கறியுடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும். புளியை அரை கோப்பை நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
மஞ்சள், உலர்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் கோழித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து கறி மிருதுவாகும் வரை நன்கு வேகவிடவும்.
கறி வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தேங்காய் பால், புளிக் கரைசல், வினிகர், ஒரு தேக்கரண்டி சீனி மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் மேலும் சில நிமிடங்களுக்கு வேகவிடவும். நன்கு வெந்து குழம்பாய் வந்தவுடன் இறக்கி பரிமாறவும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: மீன் மன்சூரியன் Sat Jun 26, 2010 2:16 pm | |
| மீன் மன்சூரியன்
தேவையான பொருட்கள்:
பெரிய வகை மீன் - 10 துண்டுகள் மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் உப்பு - தே.அ எண்ணை - 6 ஸ்பூன் க்ரேவிக்கு பூண்டு – 7, வெங்காயம் – 3, குடை மிளகாய் – 1 ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் தக்காளி சாஸ் - 4 ஸ்பூன் கறிவேப்பிலை - 8 இலைகள் ப்ரெட் டோஸ்டிற்கு ப்ரெட் ஸ்லைஸ் - 10 நெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
மீனில் மஞ்சள், மிளகாய்,உப்பு தூள் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் அதிலிருந்து 2 துண்டு மீனை மட்டும் முள் நீக்கி தனியே எடுத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள 8 துண்டு மீனையும் எண்ணையில் முக்கால் பாகம் வேகும் அளவுக்கு பொரித்து எடுத்து வைய்யுங்கள்
இப்பொழுது மீதமுள்ள எண்ணையில் பூண்டு இட்டு 2 நிமிடம் வறுத்து(கரியக் கூடாது) அதில் வெங்காயம் ,கறிவேப்பிலை இட்டு நன்கு வதக்கி வெங்காயம் நன்கு வெந்து உடைந்ததும் குடைமிளகாயும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள்
பின் தக்காளி சாஸ் சேர்த்து வதக்குங்கள்..சாஸ் சேர்த்ததும் ஒருமாதிரி வாடை வருவது போல தோன்றும்..பயப்பட வேண்டாம் 2 நிமிடம் வெங்காயக் கலவையுடன் கலந்து வதங்கியதும் அந்த வாடை போய் நல்ல மஞ்சூரியன் மணம் வரும்
பின் அதில் தனியே வைத்த முள் இல்லாத மீன் துண்டுகள் சேர்த்து உடைத்து விடவும்
பின் அதில் 1 ஸ்பூன் கார்ன் ஃப்லாரை 3/4 கப் தண்ணீரில் கரைத்து, தேவைக்கு உப்பும் சேர்த்து கொதிக்க விடுங்கள்
இப்பொழுது நன்கு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்து வைத்த மீனையும் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்
இது சூடாக சாப்பிடுவதை விட 1 மணிநேரத்திற்கு பின் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
ப்ரெட் டோஸ்டிற்கு தவாவில் 1/4 ஸ்பூன் நெய்யை சுற்றி தடவி அதில் 3 ப்ரெட் வைத்து 1 நிமிடம் இருபுறமும் திருப்பி விட்டு சுட்டு எடுத்து சூடாகவே க்ரேவியுடன் பரிமாறுங்கள்..மிகவும் சுவையாக இருக்கும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: நண்டு மசாலா Sat Jun 26, 2010 2:17 pm | |
| நண்டு மசாலா
தேவையான பொருட்கள்:
நண்டு – 10 காய்ந்த மிளகாய் - 2 பச்சைமிளகாய் - 2 வெங்காயம் - ஒரு கப் இஞ்சி, பூண்டு விழுது - 5 மேசைக்கரண்டி மிளகாய்த்தூள் - அரைத்தேக்கரண்டி மஞ்சள்தூள் - அரைத்தேக்கரண்டி தக்காளி - 2 கப் (நறுக்கியது) தேங்காய்த்துருவல் - ஒரு கப் கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு தண்ணீரில் நன்கு அலசி, இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் கழுவி சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும், கொத்தமல்லியையும் கழுவி, கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயின் காம்புகளை நீக்கி, நறுக்கி, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சற்று பெரிய வாணலியாக எடுத்துக் கொண்டு, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் காய்ந்த மிளகாயினைப் போட்டு ஐந்து விநாடிகள் வதக்கி அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினையும் சேர்த்து நன்கு வதக்கவும். விழுதுகளின் நீர் ஆவியாகும் வரை வதக்கி, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு, அடிப் பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் ஊற்றி, தீயின் அளவைக் கூட்டி நன்கு வதக்கவும்.
எண்ணெய் விடும் வரை வதக்கவும். அதன் பின் தீயின் அளவைக் குறைத்து தேங்காய் விழுதினைச் சேர்க்கவும். சுமார் இரண்டு நிமிடங்கள் புரட்டிய பின் நண்டுகளையும், கறிவேப்பிலையையும் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தீயின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். அவ்வபோது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையினைத் தூவி பரிமாறவும். | |
| | | J A N U
Posts : 1007 Points : 1364 Join date : 2010-06-06
| Subject: சில்லி சிக்கன் டிக்கா Sat Jun 26, 2010 2:18 pm | |
| சில்லி சிக்கன் டிக்கா சில்லி சிக்கன் டிக்கா
தேவையான பொருட்கள்: கோழிக்கறி - அரைக் கிலோ (எலும்பில்லாதது) மிளகு - 15 பச்சை மிளகாய் - 3 பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு பூண்டு - 6 பல் குடை மிளகாய் - ஒன்று தயிர் - ஒரு கப் ப்ரஷ் க்ரீம் - 3 மேசைக்கரண்டி கார்ன்ஸ்டார்ச் - ஒரு மேசைக்கரண்டி முட்டை - ஒன்று (வெள்ளைக் கரு மட்டும்) கரம் மசாலாத்தூள் - அரைத் தேக்கரண்டி ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி எண்ணெய் - 4 மேசைக்கரண்டி வெண்ணெய் - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை: கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து கொண்டு, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நீரில்லாமல் சற்று உலரவிடவும். மிளகினை வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பூண்டினைத் தோலுரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டினை காம்பு நீக்கின பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, எண்ணெய்யை வடித்து பிறகு மையாக அரைத்துக் கொள்ளவும். குடைமிளகாயை கழுவி, விதைகளை நீக்கி, ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தயிரினை ஒரு மெல்லியத் துணியில் கட்டித் தொங்கவிட்டு, நீர் எல்லாவற்றையும் வடித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது, தயிர், ப்ரஷ் க்ரீம், கார்ன்ஸ்டார்ச், முட்டையின் வெள்ளைக்கரு, நறுக்கின குடைமிளகாய் துண்டுகள், மிளகுத் தூள், ஏலப்பொடி, தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து, ஒன்றாய் கலக்கவும். பிறகு அதில் கோழித் துண்டங்களைப் போட்டு நன்கு பிரட்டி சுமார் ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நன்கு ஊறவிடவும். ஒரு சொருகு கம்பியில் கோழித்துண்டங்கள், குடைமிளகாய் துண்டங்கள் என மாற்றி மாற்றி சொருகி, தந்தூரி அடுப்பில் வைத்து கருகாமல் வேகவிட்டு எடுக்கவும். | |
| | | Sponsored content
| Subject: Re: மீன் கட்லெட் | |
| |
| | | | மீன் கட்லெட் | |
|
Similar topics | |
|
| Permissions in this forum: | You cannot reply to topics in this forum
| |
| |
| |