தேவையான பொருள்கள் :
கோழிக்கறி - 1/4 கிலோ
குடைமிளகாய் - 50 கிராம்
(பெல் பெப்பர்)
பெரிய வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 10 கிராம்
ஸோயா சாஸ் - 1 தேக்கரண்டி
மக்காச்சோள மாவு - 50 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
முட்டை - 1
சர்க்கரை - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு - தேவையான அளவு
அஜினோமோட்டோ - 1/4 தேக்கரண்டி
செய்யும் முறை
வெங்காயத்தில் பாதியை வட்டமாகவும் மீதியை சிறு சிறு துண்டுகளாகவும் வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு குடை மிளகாயை நான்காகக் கீறிக்கொள்ள வேண்டும்.
கோழியில் எலும்பை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.
மிளகாய்த் தூளைத் தண்ணீரோடு சேர்த்து பேஸ்ட் மாதிரி ஆக்கிக் கொள்ளவும்.
கோழிக்கறியோடு கொஞ்சம் மைதா மாவு, மக்காச்சோள மாவு, அடித்த முட்டை, உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கிளறி எண்ணெயில் பொரித்துத் தனியே எடுத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டுப் பொடியாக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கிக் கொள்ளுங்கள்.
இதில் தண்ணீர், ஸோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள், குடை மிளகாய், வெங்காயம், அஜினமோட்டா, மிளகாய்த்தூள், சர்க்கரை ஒரு ஸ்பூன், மக்காச்சோள மாவு என்று எல்லாவற்றையும் சேர்த்து இன்னொரு முறை லேசாகக் கொதிக்க விடவும்.
பிறகு அதில் பொரிக்கப்பட்ட சிக்கன் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி எடுக்கவும்.