தேவையானப்பொருட்கள்:
புழுங்கலரிசி - 2 கப்
பச்சை அரிசி - 1/4 கப்
துவரம்பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெங்காயம் - 1
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணை - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீரில் குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தைப்பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய்த்துருவல், கறிவேப்பிலைஆகியவற்றையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவைப்பட்டால், சிறிதுதண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். உப்பு சரி பார்த்து, தேவையானால் இன்னும் சிறிது உப்பைச்சேர்க்கலாம்.
தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணைத் தடவி ஒருபெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றிஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறுபுறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.
இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது அவியல், வெல்லம், வெண்ணை ஆகியவற்றுடனும் பரிமாறலாம்.