தேவையான பொருட்கள்
* ரவை - கால்கிலோ
* கொத்துக்கறி - 100 கிராம்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னரை டீஸ்பூன்
* கரம்மசாலா - கால்ஸ்பூன்
* பட்டை - சிறிய துண்டு
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* மிளகாய் - 2
* சில்லி பவுடர் - கால்ஸ்பூன்
* மஞ்சல் பொடி - கால் ஸ்பூன்
* எண்ணெய் நெய் - 3 டேபிள்ஸ்பூன்
* மல்லி புதினா - கொஞ்சம்
* உப்பு - தேவைக்கு
செய்முறை
* ரவையை நன்கு மணம் வருமாறு வறுத்துக்கொள்ளவும்.கறியை கழுவி வடிகட்டிக்கொள்ளவும்.
* வெங்காயம்,தக்காளி,மல்லி ,புதினா கட் செய்து கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் நெய் விட்டு,பட்டை, வெங்காயம் தாளித்து,இஞ்சி பூண்டு,கரம்மசாலா,தக்காளி,மல்லி புதினா,உப்பு,சில்லிபவுடர்,மஞ்சல் பொடி,கறி சேர்த்து,தண்ணீர் தெளித்து 2-3 விசில் வைக்கவும்.
* ஆவி அடங்கியதும் திறந்து ரவைக்கு இரு மடங்கு தண்ணீர் சேர்க்கவும்,ஏனெனில் கறியில் நீர் நிற்கும்.உப்பு சரி பார்க்கவும்.
* கொதிவந்தவுடன் வறுத்த ரவையை போட்டு கட்டி பிடிக்காமல் கிளரவும்.உப்புமா பதம் வந்தவுடன் இறக்கவும்.
* சுவையும் மணமுமான கறி உப்புமா ரெடி.