tamilkings88
Posts : 85 Points : 255 Join date : 2011-03-26 Age : 35 Location : Erode
| Subject: *~*தமிழ்த் திரையுலகை கவுரவித்த ஃபிலிம் பிரான்ஸ்*~* Sun Apr 10, 2011 2:20 am | |
| தமிழ்த் திரையுலகை கவுரவித்த ஃபிலிம் பிரான்ஸ் ஃபிலிம் பிரான்ஸ் என்றழைக்கப்படும் பிரஞ்ச் திரைப்பட வாரியத்தின் பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்தார்கள். இந்த ட்ரிப் இரண்டு விஷயங்களுக்காக அமைந்தது. ஒன்று- இங்கிருக்கும் தயாரிப்பாளர்களை தங்கள் நாட்டுக்கு படமெடுக்க அழைப்பது. மற்றொன்று- அப்படி படம் எடுத்த இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் கவுரவித்து ஊக்குவிப்பது. ஜெர்மனியில் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் 'சங்கம்'. இப்படத்தின் நாயகி வைஜெயந்திமாலா பாலி. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இவரை மேடைக்கு அழைத்து பிரான்ஸ் நாட்டின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இவரை தொடர்ந்து கமல்ஹாசன், கே.எஸ்.ரவிகுமார் இருவருக்கும் 'மன்மதன் அம்பு' சார்பாக நினைவுப்பரிசு வழங்கினார்கள். படத்தின் நாயகி த்ரிஷா அழைக்கப்பட்டிருந்தும் ஏனோ மிஸ்சிங். இவராவது பரவாயில்லை. 'எங்கேயும் காதல்' படப்பிடிப்பு அங்கு நடந்ததால் அப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், டைரக்டர் பிரபுதேவா, ஹீரோ ஜெயம் ரவி, ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி ஆகிய யாருமே அந்த பக்கம் தென்படவில்லை. (எப்படியாவது வந்துவிட வேண்டும் என்று நினைத்த ஹன்சிகா மட்டும் மாப்பிள்ளை பிரமோஷன் காரணமாக சன் டி.வியில் சிக்கிக் கொண்டார்) அப்படியே 'அசல்' படத்தின் சார்பாக டைரக்டர் சரணுக்கும் இந்த நினைவுப்பரிசை வழங்கினார்கள். அஜித்துக்கு அழைப்பே இல்லை. இப்படத்தில் நடித்திருந்த யூகி சேதுவும் கவுரவிக்கப்பட்டார். இவர் பிரஞ்ச் சினிமாவை ஆராய்ச்சியும் செய்து கொண்டிருக்கிறாராம். விழாவில் கொடுக்கப்பட்ட நினைவு பரிசுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சில் உள்ள ஒவெர்னு என்ற இடத்தில் விழுந்த எரிமலை கற்களால் செய்யப்பட்டதுதான் இந்த பரிசு! விலையேறப்பெற்ற பரிசுதான்! | |
|