"வாருங்கள் அன்பு செய்வோம்"
தோட்டத்திலே
தொலைந்த தூரத்திலே
தோண்டி இட்ட மடுவினிலே;
நட்ட நல்ல மரமது
நல்லாக்காய் காச்சிருக்க;
கிளைகளெலாம் ஆங்கே;
ஆகாயத்தை அழகாக்கும்
குருவிகளும், குஞ்சுகளும்
கூடியிருக்கும் கூடு கட்டி
கூட்டமாய் கூடியங்கே
கிளையதனில் கிளியும் சேர்ந்து.
நானும் கூட அமர்ந்திருக்கன்
மெல்ல நல்ல வெயிலினிலே
நிழல் தேடி அலைகிலே.
மாமரத்தடி தேடி, ஓடி.
காச்சோன்ச மரமுமல்ல ~ அது
மண்ணில் மனிதன் தின்ன
காய், கனி சொரியும்
மா மரமது
மாமரத்து அருகினிலே
ஆறேழு நாளாக
அரும்பு விட்ட சிறுகொடி;
ஆசையாய் அந்த மரம் தொட்டு
அரும்பு விட்ட சிறுகொடி;
விருப்புடன் விருட்சம் சுற்றி
விரிந்து, நுளைந்து பற்றியதில்
பத்துமாதம் பக்கமாய் நிக்கயிலே
பரந்து பற்றை ஆகிடிச்சி
பச்சை இலை நாலிருந்த
பசுமையான பச்சைக்கொடி.
புல்லு வெட்ட வந்த பயல்
காச்ச காய் ஒளிஞ்சிருக்க ~ கவலைலே
வீச்சு வாளெடுத்து
வீணாக்கொடியொன்னு;
விருட்சம் தொட்டு,
விண்ணொளி மறச்சு,
வீராப்பாய் படருதுன்னு ~ நஞ்சு
விழுங்கிய பேச்சோடு
விசமானான் கொடிக்கு.
வீச்சுவாள் வலிமை தந்த
கொடுமை கொடிக்கே!
வெட்டிய கொடியுமது வேரிழந்து,
வேர்தொட்ட நீரிழந்து;
வெட்டாறு வெயிலினிலே
வெகுவாக வெதும்பிரிச்சி, Crying
வெதும்பி நாலு நாளாகுமுன்னே
மாண்டிருச்சி மாமரமும்
தன்னுயிரை மாச்சிக்கொண்டே.
மாமரத்து வேரோரம்
வற்றாத நீரிருக்க
வயலும் கூட செளிச்சிருக்க
தனிச்சிருந்த மாமரமும்
தன்னுயிர் துறந்த மாயமென்ன?
தன்கூட நின்ன ஒன்னு
தனியாக இறந்திருச்சே
பாதாள வேரும் இணஞ்சே
என்கூட எழுந்த கொடி,
என் மேலே படர்ந்த கொடி
பட்டினி கிடைக்கிலே;
பார்த்தனானும் பாவியனேனே
என்றெண்ணம் வந்திடிச்சோ?
தனியா தவி தவி தவிச்சிரிச்சோ?
கொடி இறந்த கவலையிலே
தன்னைதானே அழிச்சிருச்சோ?
தன்னுயிர் துறந்திருச்சோ?
வாயில்லா ஜீவனுக்கும்
வற்றாத அன்பிருக்கு