அழகைக் கண்டு
பழகும் காதல்
இளமை முடிந்தால்
விலகிப் போகும்!
மனதைப் பார்த்து
உணரும் காதல்
குணம் மாறினால்
ரணமாய் விடும்!
செல்வம் கண்டு
கொள்ளும் காதல்
செல்வம் போனால்
சேர்ந்தே போகும்!
ஆத்மார்த்தமாய்
பூத்திடும் காதல்
நீத்திடும் உயிர்வரை
நீங்காது
வாழ்ந்திடும்!
வந்த காதல்
எந்த நாள்வரை?
இந்தக் கணக்கினில்
அறிந்து கொள்வீர்!