BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதுவாரகியின்  கவிதை மழை Button10

 

 துவாரகியின் கவிதை மழை

Go down 
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

துவாரகியின்  கவிதை மழை Empty
PostSubject: துவாரகியின் கவிதை மழை   துவாரகியின்  கவிதை மழை Icon_minitimeTue May 29, 2012 9:56 am

மழையே வா ! வா ! வா !
மாதம் மும்மாரி பொழிந்தாய் ! பின் மாறி
மாதம் ஒரு முறை பொழிந்தாய்! பின்
மாதங்கள் பல கடந்தும் நீ பொழியவில்லை !!

மலைமேல் மலைத்து நிற்கும் எம் மக்களுக்காக மட்டுமல்ல
மண்ணில் உள்ள எல்லா உயிர்களும் உள்ளம் குளிர ...
மழையே வா ! வா ! வா !உன்னை வரவேற்க ...
மண் வாசனை எனும் வத்தியை ஏற்றி!
மின்னல் எனும் தீபத்தை ஏற்றி !
இடி முழக்கம் எனும் தாளத்தை தட்டி !
காற்று எனும் சாமரத்தை வீசி!
உன்னை வரவேற்றால் ... நீ
வருவது போல் எங்களுக்கு விளையாட்டு காட்டுகிறாய்!!

இது மட்டுமா உன்னை வரவேற்க நங்கள் செய்தோம் .
.இன்னும் பல பல ..சொல்கிறேன் கேள் ...
உன்னை வரவேற்க எங்களின் தேசிய பறவையை தோகை விரித்து ஆட வைத்தோம்!எங்களின் தேசத்தில் உள்ள அத்தனை மரத்தின் இலைகளும் உன்னை ..வா ! வா ! வா! என அசைந்து ...அழைக்க வைத்தோம்! நீ ஒரு முறையாவது வந்து எங்களின் மண்ணையும்,மனதையும் குளிர்விப்பாய் !

இந்த கோடையின் உக்ரத்தை கொஞ்சம் நீ தணிப்பாய் .
இந்த பூமி எனும் காதலி ...மழை எனும் காதலன் வந்து கையணைக்க காத்திருக்கிறாள் ,அதற்காகவாவது நீ வா ! வா ! வா !!!

Back to top Go down
 
துவாரகியின் கவிதை மழை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தீபிகாவின் கவிதை மழை
» கவிதை நேரம்
» கவிதை நேரம்
» கவிதை நேரம்
» கவிதை நேரம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: