மழையே வா ! வா ! வா !
மாதம் மும்மாரி பொழிந்தாய் ! பின் மாறி
மாதம் ஒரு முறை பொழிந்தாய்! பின்
மாதங்கள் பல கடந்தும் நீ பொழியவில்லை !!
மலைமேல் மலைத்து நிற்கும் எம் மக்களுக்காக மட்டுமல்ல
மண்ணில் உள்ள எல்லா உயிர்களும் உள்ளம் குளிர ...
மழையே வா ! வா ! வா !உன்னை வரவேற்க ...
மண் வாசனை எனும் வத்தியை ஏற்றி!
மின்னல் எனும் தீபத்தை ஏற்றி !
இடி முழக்கம் எனும் தாளத்தை தட்டி !
காற்று எனும் சாமரத்தை வீசி!
உன்னை வரவேற்றால் ... நீ
வருவது போல் எங்களுக்கு விளையாட்டு காட்டுகிறாய்!!
இது மட்டுமா உன்னை வரவேற்க நங்கள் செய்தோம் .
.இன்னும் பல பல ..சொல்கிறேன் கேள் ...
உன்னை வரவேற்க எங்களின் தேசிய பறவையை தோகை விரித்து ஆட வைத்தோம்!எங்களின் தேசத்தில் உள்ள அத்தனை மரத்தின் இலைகளும் உன்னை ..வா ! வா ! வா! என அசைந்து ...அழைக்க வைத்தோம்! நீ ஒரு முறையாவது வந்து எங்களின் மண்ணையும்,மனதையும் குளிர்விப்பாய் !
இந்த கோடையின் உக்ரத்தை கொஞ்சம் நீ தணிப்பாய் .
இந்த பூமி எனும் காதலி ...மழை எனும் காதலன் வந்து கையணைக்க காத்திருக்கிறாள் ,அதற்காகவாவது நீ வா ! வா ! வா !!!