அன்பு செல்வி:
தன்னை தோண்டும் மனிதரையும்
தாங்குகின்ற தாய் இவளே
மண்ணிலே பிறக்கின்ற மண்ணுயிர் அனைத்தையும் வாழ வைக்கும் பூமிமாதா
மறைந்த உயிர்களையும் உன்னுள்
உறங்க வைப்பாய் ….
உயிரின தொடக்கமும் நீயே முடிவும் நீயே
உண்ண உணவும் பருக நீரும் ,
உறைவிடமும் தருபவளே
உன்னை போற்றி பாதுகாத்தால்
உயர்வு தான் என்றுமே …
மரங்களின் வேர்கள் உன்னுள் மறைந்தாலும்
கிளைகளின் மூலம் நீ விண்ணை தொடுவாய்
பாறைகள் எல்லாம் மலைகளாய் மாறலாம்
மலைகளும் ஒரு நாள் பாறையாக மாறலாம்
மாற்றம் உள்ள வாழ்கை இது
மானுடமே உணர்ந்து விடு
பாறையை இருந்த நீ மனம் கனிந்து மன்னணாய்
உன்னை நாங்கள் மாசுபடுத்துவதால்,
மனம் நொந்து பாறை ஆனாய்
உன் தகடுகள் குலுங்குவதால்,
நாங்கள் நடுங்குகிறோம்
உன் ஆட்டத்தை நிறுத்தி விடு நாங்கள் மகிழ்சியில் ஆடிடுவோம்.