இந்த வார கவிதை நேரத்தில் இதயத்தை தொட்ட அனைத்து கவிதைகளயும் உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறோம்
anbuselvi20052000:
இதயம் கைப்பிடி அளவு
எண்சான் உடம்பை இயக்கம் விசை
தலைமை செயலகமாம் மூளையை
உயிர்பெறவைக்கும் மூலம்
சிவப்பணு படகில் ஆக்சிஜன் இலச பாட
செல்லிற்கு உயிர்கொடுக்கும் குருதி இயந்திரம்
உயிரற்ற உடலாம் சவத்திலிருந்து
சீவனுள்ள சிவமாக மற்றும் மந்திரம்
யாருக்கும் கட்டுபடாமல் தானே இயங்கும்
தசை படலம்காதலர்களின்
காதல் சின்னம் மென்மையான
உணர்வுகளின் பிறப்பிடம் மனிதாபிமானமுல்லா
மனிதத்தின் அடையாளம்
தெய்வமான மனிதர்களின் நினைவு வாழுமிடம்
new_dust:
கண்களில் காதல் மயக்கம் .,
மேன்னேற உள்ளத்தில் ஏகப்பட்ட தயக்கம் ..,
மனதுக்குள் முள் தைத்த அவஸ்தை ..,
இது தான் இதயத்திற்கு காதல் வைத்த பரீட்சை.நொடிக்கு எத்துனை துடிப்பு துடிக்குமென !!
சிந்து :
முதலில் பார்த்தது உன்னை அல்ல பொய் சொல்லாத உன் கண்களை ..முதலில் தெரிந்தது உன்னை அல்ல ..
உன்னை மறைத்து வைத்த உன் வெட்கத்தை ..
இபோழுது கேட்கிறேன் உன்னை அல்ல ..
உன் கைகளில் இருக்கும் என் இதயத்தை ...
சோபனா:
உன் இதயமாக நான் இருப்பேன் என்றும்
என் வழிகாட்டியாக நீ இருப்பாய்
அனுராகா :
உயிரின் உயிர் இதற்குள் அடக்கம்
உணர்வின் பொருள் இதன் துவக்கம்
செல்கள் இயங்க துடிக்கும்
இவன் நின்றால் நிற்கும் மனிதனின் இயக்கம்
காதலும் காவியமும் இவனுள் அடக்கம்
இவன் இல்லையென்றால் என் தமிழ் சினிமாவின்
பாடல்கள் முடக்கம் ... இதயம் இது துடித்து துடித்து
என்னை இயக்கும் இவன் துடிக்க தான் . என் குருதியின் ஓட்டமின்றி நான் இல்லை போதுமா என் இதயமே நீ ஆகிப்போனதால் நீ இன்றியும் நான் இல்லை
காஞ்சனா சுகி :
உண்மையான அன்பை
சுமக்கும் இதயம்
அடிக்கடி ஏமாறலாம்...
ஆனால் அது யாரையும்
ஏமாற்றது …என்னை போல
new_dust:
வருவோரும் போவோரும்
உன்னை தேடி.,வந்த வழி அறிவர்,
செல்லும் வழி புரிவர்..!!
இருக்குமிடத்தில் நகராமல்..,
நீ ஊருக்கே வழிகாட்டி ..!
சில இடங்களில் உன்னை
மறைத்து சுவரொட்டி !!
Ok ok:
எனக்கு இதயம் இல்லை என்று சொன்னார்கள் ..
லப் டப்.... லப் டப் .... லப் டப்.... லப் டப்....
என்று துடித்து நான் இருக்கிறேன்
என்று சொன்னது என் இதயம் ...
abi.s:
முகம் இல்லாத எனக்கு முகவரியாய்
வந்து , வாழ்கை பாடங்களை கற்று தந்து
என்றும் என் வழிகாடியாக என்னுடன் என் தந்தை ...
சிந்து :
யாரையும் புரிந்து கொண்டு நேசி ,
நேசித்த பின் புரிந்துகொள்ள முயற்சிகதே …
வலி உனக்கு மட்டும் இல்லை , நீ நேசித்த
இதயத்துக்கும் தான்
காஞ்சனா சுகி :
முதலில் பார்த்தது உன்னை அல்ல ..
பொய் சொல்லாத உன் கண்களை ..
முதலில் தெரிந்தது உன்னை அல்ல ..
உன்னை மறைத்து வைத்த உன் வெட்கத்தை ..
இபோழுது கேட்கிறேன் உன்னை அல்ல ..
உன் கைகளில் இருக்கும் என் இதயத்தை
சிந்து :
காதலன் காதலிக்கு இதயம் ஒரு
வழிகாட்டியாக இருக்கும்
anbuselvi20052000:
திசை தெரியாமல்
திணறும் வழிபோக்கருக்கு திசைகாட்டி
அதுபோல வாழ்கை பாதையில்
பின்பற்ற பலர் நமக்கு
வழிகாட்டி முகவரி கேட்போருக்கு
கேட்காமல் உதவுவதும்
தம்மால் இயன்றதைபிறர்க்கு வழங்குவதும்
நம் உணவின் ஒரு
பங்கினை மற்றவர்க்கு பகிர்வதுவும்
உயிர்மூச்சாய் கொண்ட
நல்லவர்களின் நற்செயல்கள்
நம் வாழ்வின் வழிகாட்டி
ramKL:
நானும் சிந்தித்து சிறகடிச்சு ...
சிதறடிச்சு .... ஒரு கவிதை எழுதிருக்கேன் ...
அழகியே ...உன் வாசத்தை என் சுவாசமாக்கி உயிர் வாழ்கிறேன்
உன் நினைவுகளை இதயத்துக்குள் பதியமிட்டு
பாதுகாக்கிறேன் ...
Jack_always_rock:
இதயமே !!!
உருவத்தின் இடை மேல் உள்ளங்கை அளவு எடை போல்
நெஞ்ச பள்ளத்தில் ஒளிந்துகொண்டு
படை சூழ்ந்திருக்கும் அரண்மனை கிளி போலே
இருக்காள் இந்த இதயராணி
உள்ளம் என்பது உடைந்து போவதற்கு அல்ல
என்று சொல்லி சொல்லி -
என்னை கள்ளம் கபடம் இல்லா வாழ
சொல்லும் கவிதையே ,
நீதான் என் கடவுளோ !...
சொல்லிவிடு சொர்க்கத்தில் இடம் உண்டு என்று என்னை
சோதித்து பாராமல் ..
நான் தேடும் இடங்களுக்கு ...
சிரமப்படாமல் சென்று சேர ...என்றும்
என் வழிகாட்டி ...GPS தான் ...ramkl
new_dust: உதயத்தின் வலி..,
மேகத்தில் இருட்டு..!!
இதயத்தின் வலி..,
சோகத்தின் ஊற்று..!!!
மேகத்தின் ஊற்று மண்ணுக்குள் வளமாய்
சோகத்தின் ஊற்று கண்ணுக்குள் குளமாய் !!
new_dust: என் இதயமே ..,
எபொழுதும் நீ துடித்து ,
என்னை நடக்க வைக்கிறாய் ..!!
எபொழுதாவது நான் நடித்து ,
உன்னை துடி துடிக்க வைக்கிறேன் ..!!