BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபடித்ததில் பிடித்தது - 7 Button10

 

 படித்ததில் பிடித்தது - 7

Go down 
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

படித்ததில் பிடித்தது - 7 Empty
PostSubject: படித்ததில் பிடித்தது - 7   படித்ததில் பிடித்தது - 7 Icon_minitimeTue Mar 23, 2010 7:07 am

வணக்கம் இனிய BTC நண்பர்களே, தம்பி, தங்கைகளே. இன்னுமொரு படித்ததில் பிடித்தது பகுதியில் உங்களைச் சந்திப்பதில் மிக மகிழ்ச்சி.
இன்றைய பகிர்வு உங்கள் வாழ்க்கைக் குறிக்கோள் பற்றியது,
Dr. எம்.ஆர். காப்மேயர் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம்.

மகத்தான நதி போல் செயற்படுங்கள்..!

மகத்தான நதி தன்னுடைய புகலிடம் நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறது. அது அங்கு நிச்சயம் சென்றடையும். அது தன் வழியை வகுத்துக் கொண்டுவிட்டது.

நீங்களும் அது போல் செயற்படுங்கள்.

நீங்கள் போய் சேர வேண்டுய இடம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக் குறிக்கோளை அடைய ஒரு வழியும் உங்களுக்குப் புலப்பட வேண்டும்.

மகத்தான நதியைப் போல் அந்த வழியிலேயே உங்கள் பயணம் முன்னேறட்டும்.

வெள்ளம் வந்து நதியின் போக்கை இலேசாக மாற்றலாம். ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் நதி தன் வழியாகவே செல்லும். அது தன் இலக்கை நோக்கி ஓடிய வண்ணமே இருக்கும்.

நீங்களும் அவ்வாறே செயல் படுங்கள்.

உங்கள் வழியிலும் பல பிரச்சினைகள் தோன்றலாம். மகத்தான நதியைப் போல் மீண்டும் உங்கள் வெற்றிப் பாதைக்கு வந்து சேருங்கள். உங்கள் குறிக்கோளை நோக்கி நகர்ந்த வண்ணம் இருங்கள்.

நதியின் ஓட்டம் ஒரே சீராக இருக்காது, சில நேரம் வேகமாகவும், சில நேரம் மெதுவாக அமைதியாகவும் ஓடும். ஆனால் தன் புகலிடம் நோக்கி எப்போதும் ஓடியவாறே இருக்கிறது.

நீங்களும் அவ்வாறே செயல் படுங்கள்.

மெல்ல நகர்வது நதியின் ஓட்டத்தைப் பாதிப்பதில்லை, வேகம் முக்கியம் இல்லை. தொடர்ந்து உங்கள் குறிக்கோள் நோக்கிய பயணம் தான் முக்கியம். உங்கள் முன்னேற்றத்தை நதியின் ஓட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தொடர்ந்து முன்னேறும் இயக்கத்தை உணருங்கள்.

உங்கள் வாழ்க்கை குறிக்கோள் நோக்கி வழிநடக்கட்டும். திட்டமிட்ட வழியிலிருந்து திசை திரும்பாதீர்கள். மகத்தான தடுத்து நிறுத்த முடியாத சக்தியை உங்களுக்குள் உணருங்கள்.உங்கள் குறிக்கோளை அடைவதில் உறுதி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கட்டும்.

தொடர்ந்து ஓடுவதான, தடுக்க முடியாத மகத்தான ஓர் இயக்கம் உங்கள் வாழ்க்கை சென்றடையும் வழி என்று உணருங்கள்.

இந்த அசையும் நதியின் உணர்வு சதா உங்களுக்குள் இருக்கட்டும்.

நன்றியுடன் …… ப்ரியமுடன்
Back to top Go down
 
படித்ததில் பிடித்தது - 7
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» படித்ததில் பிடித்தது..
» படித்ததில் பிடித்தது - 14
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது..
» படித்ததில் பிடித்தது - 15

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: