மதியின் கவிதைகள்
!!!! கார்கால காதல் காத்திருப்பு !!!!!
பாருக்கே குளிர்மை தரும்
கார்காலமொன்றின் கருமை
நிற முகில்களை நோக்கி
நோட்டம் விட்டுகொண்டிருந்தேன்
என் காதலியின் வருகைக்காய் .
கண்ணை வெட்டும் மின்னல்
ஆங்காங்கே தோன்றி மறைகிறது
என் இதயம் வெட்டிய அவள்
பார்வையாக .. படீர் படீர் என
வெடிக்கும் இடியோசை என் காதில்
அவள் கோப பேச்சாக ...
நேரமோ செல்கிறது . நெடுந்தொலைவில்
கூட தெரியவில்லை அவளின்
உருவம்... மழைதுளிக்காய்
ஏங்கும் மண்ணாய் என் மனம் .
சோவென வீசிடும் குளிர் தென்றலில்
ஆடிடும் மரகிளைகளின் குதூகலம்
என் ஏக்கம் பார்த்து சிரிப்பதாய்
தோன்றியது ..
காதலியின் வருகைக்காய்
காத்திருந்து காதலன் ஆகிவிட்டேன்
இயற்கைக்கு ... அடடடா எத்தனை
ரம்மியம் இந்த இயற்கையிலே .
என்னவளோடு ஒப்பிடுகையில்
இயற்கை காதலி தான் எத்தனை
அழகு ...
காத்திருந்து காத்திருந்து
கவிஞன் ஆகிவிட்டேன் .
காதலினால் மட்டுமல்ல
என் புது காதலியாலும் தான்
காத்திருப்பதில் கூட எத்தனை
சுகம் ... அதுவும் காதலிக்காக
என்றால் ..
மன ஓட்டங்களின் மகிழ்ச்சியால்
மெய் மறந்த என்னை
மழை துளி அழைத்தது ...இன்னொரு
மகிழ்வின் அடையாளமாய் ..
சின்ன சின்ன தூறல் என்னை
தீண்டி சிலிர்க்க வைக்கையிலே
ஏங்கிய மண்ணின் ஆசையை
தீர்த்ததாய்.. எங்கும் மழை
வியாபித்த போது ..ஏங்கிய என்
மனதின் குளிர்வுக்காய் .. எதிரே
சாலையில் எனக்காய் என் காதலி
மழை கூட காதலித்திருக்குமோ
முத்தமிட்டே நனைக்கிறதே
என்னவளை .. எத்தனை மகிழ்வுதான்
என் மனதில் . என்னவளும் என்னை
போலவே இன்று ..இப்பாருள்ளுவரை
மறக்க மாட்டேன் .. இக் கார்கலத்தின்
காத்திருப்பை .. ஏன் என் காதலிகளையும்
தான் .. காதலையே காதலிக்க வைக்கும்
கார்காலம் ...எதனால் ஈடு செய்ய முடியும்
என் கார்கால காதல் காத்திருப்பை !!