"இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு
சகோதரன் தன்
சகோதரனைக் கூப்பிடுகிறான்.
தந்தை மகனை
விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது
பசிக் கொடுமை
அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.
ஆனால்
அதே சமயத்தில்
மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம்
எமது ஆத்மாவை
விழுங்கி எமது
குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது
! அதன் கோரப்
பசி மட்டும்
திருப்தி அடைவதே
இல்லை !
கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
எனக்குக்
கேட்கிறது நீ
சொல்வது
என்
கண்மணி !
உனது
அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு
அப்பால் !
உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !
இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !
இங்கு நிற்கிறேன்
ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின் அழைப்பைக் கேட்டு !
வாய் திறந்து பேசு
என்னோடு
என் கண்மணி !
லெபனான் மலைப் பகுதியிலிருந்து
(ஈழத்திலிருந்து)
என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை
ஆக்கட்டும் !
பேசு என்னோடு
என் செவியைத் தவிர
வேறு எவர்
காதிலும் விழாது !
எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது இரவு !
வெண்ணிலவின்
வெண்மைத்
துகில் போர்த்தி
லெபனான் (ஈழம் )
நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என்
கண்மணி !
தொழிற்சாலை
வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல்
மூடிப் பரவியுள்ளது
அடர்த்தியாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய் நகர அரங்கு
நாசமாய்ப் போகும்
என் கண்மணி !
இது வார்த்ததைகள் இல்லை
வாழ்க்கையை தொலைத்தவர்
விடும் சோகக்காற்று,
இதை உணர்ந்தவர்களுக்கு தான்
வலி தெரியும்.
உங்கள் வழி தெரியவில்லை என்றலும்
வலி புரிகிறது!
நீங்கள் சொன்னது உண்மைதான்!
உண்மையின் ஒலியும் ,அதன் ஒளியும்
கேட்டகவும்,அறியவும்,முடிகிறது.
எப்போது ஒழியும், ஓளிரும் என
ஏக்கம் பிறப்பது தெரிகிறது .