முகவரி தொலைந்துவிட்டதா..
மலர்களிடம் விசாரிக்கிறதே வண்டு.!
--------------------------------------
நடமாடும் கோலம்
காலில் மருதாணி..!
--------------------------------------
உடைக்க விருப்பம்
பாஸானால் தேங்காய்
பெயிலானால் பிள்ளையார்.
--------------------------------------
தீயிட்டவரையும்
பார்த்து சிரித்தது
மத்தாப்பூ
-------------------------------------
காட்டிக் கொடுப்பதில்
முதல் பரிசு
கண்ணாடிக்கு
-------------------------------------
விலகினால் சுடுகிறது
நெருங்கினால் குளிர்கிறது
காதல் நெருப்பு
-------------------------------------
ஓட ஓட விரட்டினார்கள்
திரும்பியதும் ஓடினார்கள்
புரிந்து கொண்டது நாய்
-------------------------------------
விட்டில் பூச்சிகளின்
நிரந்தரக் கல்லறை
விளக்குச் சுடர்
-------------------------------------
வானில் கண்ணீரைத் துடைக்கவா
மனிதனின் கரம் நீளுகிறது
மரத்தை வெட்ட
-------------------------------------
காக்கும் கடவுளின்
கோயிலில்
கொள்ளை
-------------------------------------
அறிவியல் யுகத்து
மூட நம்பிக்கை
அரசு வேலை
-------------------------------------
காற்றில் பயனித்தது
செவியைச் சேரும் விருந்தாளி
வானொலி
-----------------