BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in இந்த வார கவிதை துளிகள் Button10

 

  இந்த வார கவிதை துளிகள்

Go down 
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

 இந்த வார கவிதை துளிகள் Empty
PostSubject: இந்த வார கவிதை துளிகள்    இந்த வார கவிதை துளிகள் Icon_minitimeTue Jul 10, 2012 5:50 am

Aargeebha:
பொறாமையே இல்லாத
மனிதர்களை காண பொறாமை !!!
பொறாமை இல்லாத மனிதர்களை
காணததால் ஏமாற்றம்.. !!

queen_bee:

கோடை கால வெயிலில் ,
அவள் கொலுசு மட்டும் தான் என்னை குளிர வைக்கிறது ..அவள் நடந்து செல்லும் பொது சல்... சல்.... என்று
எனக்கு பொறாமையாக இருக்கிறது
உன் கால்களை நினைத்து …
AruNesh:
நீ ஆறு அடித்து , நான் நாலு போட்டால் , எனக்கு ஏமாற்றம், நான் ஆறு அடித்து நீ நாலு போட்டால் மட்டும் எதுக்கு உனக்கு பொறமை !!!


ramKL:


ரம்யா பாட்டு பாடி நாங்க அற்புதம்!!
என்று போட்டால் ரம்யாவுக்கு சந்தோசம்… நாங்க mute போட்டது வெளிய தெரிஞ்சா ரம்யாவுக்கு ஏமாற்றம்!!!


sindhu:


என் "கண்களுக்கு"என்
"இதயத்தின் " மேல் பொறமை
ஏனென்றால் "நீ " என் "இதயத்திற்கு "
"நெருக்கமாகவும் " "கண்களுக்கு "
'தூரமாகவும் ' இருப்பதால்

sindhu:

உனக்காக காத்திருந்து,,,என் விழிகள்,, கண்ட ஏமாற்றத்தைவிட, என் இதயம் ,,, உணர்ந்த ஏமாற்றம் அதிகம் ...,, ஏமாற்றத்தை காண்பதை விட , உணருதலில் வலி அதிகம்


karthis:


பாடகர்களே!மற்றவர்கள்பொறமைபடும்
அளவிற்கு பாடுகிறீர்கள் என்பதனால் அல்ல…நீங்கள் பாடாவிட்டால் வேறு யாரோ ஒலிவாங்கி எடுத்து பேசியே அறுப்பார்கள் என்றுதான் பொறுமையோடுகாத்திருக்கிறேன்!

AruNesh:
என்னுள் பல மாற்றங்கள்
ஏற்படுவதற்கு காரணம் உன்னால்
நான் அடைந்த ஏமாற்றம் தான் ...

AruNesh:

ஏமாற்றம் -காதலித்தேன் அலைபேசியில் ,
என்னை தேடிய காதலனுக்கு கிடைத்தது RECHAGE BOY என்னும் பெயர் தான்!!



Madhan:

பொய் நிறைந்த உலகம் .... ஏமாற்றம்
மட்டுமே தரும் chat room நட்பு ...

AruNesh:

மீன்களுக்கு பொறாமை
உன் கண்களை பார்த்து ,
மயிலுக்கு பொறாமை
உன் கூந்தலை பார்த்து ,
ஆப்பிளுக்கு பொறாமை
உன் கன்னங்களை பார்த்து ,
சங்குக்கு பொறாமை
உன் கழுத்தை பார்த்து
நிலவுக்கு பொறாமை
உன் முகத்தை பார்த்து ,
நானும் உன்னை பார்க்கலாம்
என்று சென்றால் ஆனால்
எனக்கு மட்டும் ஏமாற்றம்
மணகோலத்தில் , நீ


PaTTaaSU:


ஏமாற்றம் வெறும்
வார்த்தையே,இதை மனதில்
எடுத்துக்கொள்ளவில்லைஎன்றால்!
மனதினுள் விதைத்தால்
பொறாமையாக மாறி
நம் வெற்றியை தகர்க்கும்


karthis:

இடியுடன் கூடிய மழை
இன்னும் சிலமணிநேரத்தில்
வானிலை அறிக்கை
ஏமாற்றமே மிஞ்சியது


.
RamKL:

BTC யில் தந்தார்கள் கவிதை தலைப்பு
அதை தேடி ஓடினேன் கூகிள் தளத்துக்கு
ஆனால் கவிதை கிடைக்காமல் கிடைத்ததோ பெரிய ஆப்பு ...
இதற்கு பெயர்தான் ஏமாற்றமோ ...


karthis:

உன்னுள் மாற்றம்
என்னுள் ஏமாற்றம்

AruNesh:

என்றும் வாடாத உன்
புன்னகையை கண்டு பொறாமை
படுகிறது பூக்கள்




PaTTaaSU:

ஏமாற்றத்தின் வலி
உள்ளத்தினுள் நுழைந்து
கண்களின் வழியாக
வெளியானது
கண்ணீராய்.........

greentamilan:

நான் கவிதை சொல்றேன் சொல்லி
கடமையா சொன்னா கேட்கிறவங்களுக்கு
ஏமாற்றம் ......அதையே அருமையா சொன்னா
கேட்கிறவங்களுக்கு பொறாமை !!!


lavanya:

முயன்றால் கிடைக்கும் முன்னேற்றம்
முயலா விட்டால் மிஞ்சும் ஏமாற்றம்

lavanya:


சிந்தித்தேன் ...யோசித்தேன் ..
.காப்பி அடிக்க முயற்சி செய்தேன் ...
கவிதை கிடைக்கவில்லை ...
மிஞ்சியதோ ...ஏமாற்றமே





PaTTaaSU:

நீ உதிர்த்த புன்னகையின் வெளிப்பாடு.
அழகான பூக்கள் உதிர்ந்தது பொறாமையினால்


AruNesh:


மணிகணக்கில் என்னை , மகிழ்ச்சியாய்
இருக்க வைத்திருக்கும் உன்னை கண்டு
பொறாமைபடுகிறேன் BTC யே




AruNesh:

முயல் -ஆமை கதையில் முயலின்
முயலாமை கண்டு , காட்டுவிலங்குகளுக்கு
ஏமாற்றம் ....


aBBy:

நீ என்னை விட்டு மற்றவள் உடன் ..
சென்றால் .... எனக்கு உன்மேல் வருவது பொறமை அல்ல
உன்மேல் எனக்கு வருவது என் உயிரினும்
மேலான காதல் ...


silentspectator_dxb:


ஏமாற்றம் -விடியும் வரை
தெரிவதில்லை கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்


rulespuchandi:

பொறாமைக்கு ஓராயிரம் நன்றி !!
ஏன் என்றல் இந்த தீ எரிப்பது என்
எதிரியை தானே !!!

anbuselvi20052000:

ஏமாற்றம் எப்போது வரும் நம் பாராட்டில்
மகிழும் நண்பன்.... குறை சொல்லும் போது
புரிந்துகொள்ளாத போது ..
அன்பான காதலி அண்ணா என்று சொல்லும்போது
நண்பனாக இருந்தவன் நேசிக்கிறேன் எனும்போது
பார்த்தபோது அழகாக தெரிந்தவள்
பழகிய பின் அழகில்லை எனும்போது
நாம் பாசம்வைக்கும் சுற்றத்தார்
நம்மை பாரபட்சமாக நடத்தும்போது
தனிமைதுயரில் தவிக்கும்போது
தாங்கும் தோள்கள் இல்லாதபோது
திறமைக்கு பாராட்டு மறுக்கப்படும்போது
ஏமாற்றம் வரும் …. ஆனால்
நம் திறமையினால் பிறரை வெல்லும்போது
ஏமாற்றம் மறைந்து மகிழ்ச்சி வரும்
மற்றவர்க்கு நம் மீது பொறமை வரும்
நம் திறமைகளை பார்த்து ....

new_dust:


பொம்மைக்கு நான் அழுத போதும் .,
மத்தாபூக்கு நான் சிலிர்த்த போதும் .,
வெம்மைக்கு பயந்து மழையில்
நனைய ஓடிய பொழுதும் ,
என்னோட ஆசைகளின் மீது பெற்றவர்களின் விருப்பங்கள் !!
மாற்றம் இல்லாமல் வாழ்வில் கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே
new_dust:
உன்னை நான் பார்த்த பொழுது
நீ மண்ணை பார்த்த நேரத்தில்
மண்ணை பார்த்து எனக்கு பொறாமை !!
உன் கண்ணை பார்த்து நான் பேச
நினைத்த பொழுது பக்கத்தில் நிற்கும் பெண்ணை பார்த்து நீ பேசி
நகன்ற நேரத்தில் ,அந்த
பெண்ணை பார்த்து எனக்கு பொறமை !!
உன்னிடம் எனக்கு காதல் என
எனக்கு கற்று தந்தது இந்த பொறாமை






Back to top Go down
 
இந்த வார கவிதை துளிகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இந்த வார கவிதை துளிகள்
» சிந்தனை துளிகள்
» அதிசய தகவல் துளிகள்
» யார் இந்த தேவதை யார் இந்த தேவதை....
» இந்த மண் எங்களின் சொந்த மண்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC ANNOUNCEMENT & WISHES-
Jump to: