“தண்ணீர் வெறும் தண்ணீரல்ல
நீல வானத்தின் ஆனந்தக் கண்ணீர் இந்த தண்ணீர்
பூமித்தாய் சுரக்கும் தாய்ப்பால் தண்ணீர்
தண்ணீர் வெறும் தண்ணீரல்ல
வானம் பூமிக்கு வீசி எறிகிற வைரக் கற்கள் தண்ணீர்
விண்ணுக்கும், மண்ணுக்கும் இயற்கை அமைத்த பாலம் இந்த தண்ணீர்!
தண்ணீர் வெறும் தண்ணீரல்ல
குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று
குடங்களைச் சுமந்து அலைவது ஏனோ
குடமே குழந்தையாய் மாறியதால் தானோ!
பனிக்குடம் உடைத்த மனிதா – உனக்கு
மண்குடம் உடைக்க தண்ணீர் உண்டா?
முடிந்த போருக்கே கண்ணீரில்லை
தண்ணீருக்காக இன்னொரு போரா?”
என்று அசத்திய விஜயனின் ஹைக்கூ கவிதைகள்,
“முத்தமிடாத காவிரி
ஏக்கத்தில் பெருமூச்சு விடும்
வங்கக்கடல்”
“காவிரிப்பிரச்சனை
காவிரிப்பபிரச்சனை
இப்படிப் பேசிப்பேசியே
வறண்டுபோகும் நாக்கு”