புரையோடிய காயங்கள்
விட்டுச் சென்ற தளும்புகள்
மறையும் என
சற்றேனும் நினைக்கவில்லை
கீறிக் கொண்டிருந்த
நகங்களைக் களைந்தெறிந்து
இயல்பாயிரு என நீ
சொல்லும் வரை...!!!
தான் சுமந்த பனித் திவலை
அழகு சேர்ப்பதாய்
இறுமாந்த பூவின் காதில்
தென்றல் சொன்னது
புதிதாய்ச் சேதி
“உனக்கெதற்குப் பாரம்
உதறி விட்டு இயல்பாயிரு
அது மேலும் சிறப்பென"....!!!
பல அலைகளின்
தழுவலுக்கும்
அசையாதவோர் கரையோரக்
கிழிஞ்சலின் காத்திருப்பு,
எங்கிருந்தோ வந்த
பேரலையால் ஏற்கப்பட
இயல்பாய்க் காணாமல்
போனது அலையுடன் அதுவும்....!!!
- நன்றியுடன்.......ப்ரியமுடன்
(நான் ரசித்த கவிதைக்காக)