BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஆட்டுக்கறி Button10

 

 ஆட்டுக்கறி

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

ஆட்டுக்கறி Empty
PostSubject: ஆட்டுக்கறி   ஆட்டுக்கறி Icon_minitimeSat Apr 03, 2010 4:09 am

தேவையான பொருட்கள்

தாளிக்க தேவையானவை
எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
கொத்துமல்லித்தழை - கால் கட்டு
புதினா - சிறிது

வேகவைக்க தேவையானவை
ஆட்டுக்கால் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2 (பெரியது)
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 மேஜைக்கரண்டி
தேங்காய்ப் பால் - அரை குவளை (டம்ளர்)
பாதாம் - எட்டு
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி (கடைசியில் சேர்க்க)
உப்பு - தேவையான அளவு


செய்முறை

1. ஆட்டுக்காலை சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2. பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து தேங்காய்ப் பாலுடன் சேர்க்கவும்.

3. சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் வேகவைக்க தேவையான பொருள்களைச் சேர்க்கவும்.

4. ஆட்டுக்காலை அனைத்து மசாலாக்களுடனும் சேருமாறு நன்கு பிசறி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

5. குக்கரில் நான்கு குவளை (டம்ளர்) தண்ணீர் அல்லது ஆட்டுக்கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி கொதிக்க விடவும்.

6. கொதி வந்ததும் குக்கர் மூடியைப் போட்டு வெயிட் போட்டு தீயை நடுத்தரமாக எரியவிடவும். இல்லையென்றால் குழம்பு தெறிக்கும். நான்கு அல்லது ஐந்து விசில் வரை வேகவிடவும். பிறகு தீயை குறைத்து (சிம்மில்) வேகவிடவும். ஆட்டுக்கால் இளசானதாக இருந்தால் 20 நிமிடத்திலும் இல்லையென்றால் 30 நிமிடத்திலும் வெந்துவிடும்.

7. வெந்தபிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் பாதாம் கலவையை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும். பிறகு ஒரு கரண்டி மிளகு தூள் சேர்க்கவும்.

8. தனியே தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்கால் குழம்பில் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு

1. காலில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் ஆகையால் எண்ணெய் கொஞ்சமாக ஊற்றினால் போதும்.

2. இதை முட்டு வலிக்கு மாதம் இருமுறை செய்து சாப்பிடலாம். மூட்டு பலம் பெறும்.

3. குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது இதை சூப்பாகவும் வைத்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தகுந்தமாதிரி காரம் குறைத்து நெய்யில் கூட தாளிகலாம். செய்து முடித்து வடிகட்டி கொடுக்கவும்.

4. குளிர் காலங்களில் இது போல் மிளகு சேர்த்து செய்து சாப்பிடலாம். காரம் தேவைப்படுபவர்கள் இன்னும் கூட்டிக் கொள்ளலாம்.

5. இந்த ஆட்டு காலில் குருமாவும், சூப்பும் செய்யலாம்.

6. சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா, இட்லி, இடியாபம், தோசை, ஆப்பம், நெய் சோறு ஆகிய அனைத்திற்கும் இதை தொட்டு கொள்ளலாம்.


ஆட்டுக்கறி (மட்டன்) வெண்டைக்காய் குழம்பு
************************************

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி - 1/4 கிலோ
வெண்டைக்காய் - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
தேங்காய் - 2 பத்தை (துண்டு)
முந்திரி - 5
பட்டை - ஒரு சிறிய துண்டு
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக் கரண்டி
புதினா - 6 இதழ்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

1. ஆட்டுக்கறியை சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

3. தேஙகாய், முந்திரியை நன்கு மையாக அரைக்கவும்.

4. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி, பட்டை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

6. பிறகு கொத்தமல்லித்தழை, புதினா போட்டு இரண்டு நிமிடம் குறைந்த தீயில் (சிம்மில்) வேக விடவும்.

7. அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

8. இப்போது மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, மட்டனை சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் குறைந்த தீயில் (சிம்மில்) வேக வைக்கவும்.

9. எல்லா மசாலாவும் நன்கு கலந்தவுடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி முன்று நான்கு விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.

10. ஆட்டுக்கறி வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் முந்திரியை ஊற்றி தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

11. வெண்டைக்காயை கொண்டையையும் வாலையும் கிள்ளிவிட்டு இரண்டாக அரிந்து சேர்த்து இரண்டு நிமிடம் மட்டும் வேக விட்டாலே போதுமானதாகும்.

12. அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லித்தழை (அ) புதினாவை கொண்டு அலங்கரிக்கவும். சுவையான கம கம மட்டன் வெண்டைக்காய் குழம்பு தயார்.

குறிப்பு

1. ஆட்டுக்கறியுடன் எல்லா வகையான காயையும் போட்டு செய்யலாம். முக்கியமாக முருங்கைக்காயை உபயோகிக்கலாம்.

2. வெண்டைக்காய் நறுக்கும் போது கழுவி விட்டு நறுக்க வேண்டும் இல்லையென்றால் காய் குழ குழப்பாக ஆகிவிடும்.

3. உணவுக் கட்டுப்பாட்டில் (டயட்டில்) இருப்பவர்கள் குழந்தைகளுக்கு ஆட்டுக்கறியைக் கொடுத்து விட்டு, குழம்பும் வெண்டைக்காயும் தொட்டு சப்பாத்திக்கு சாப்பிடலாம்.


கிட்னி கூட்டு
***********

தேவையான பொருட்கள்

ஆட்டு கிட்னி - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தனியாதூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முக்கால் முக்கால் தேக்கரண்டி (தேவைக்கு)
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி தழை - சிறிது
எண்ணை - நான்கு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு


செய்முறை

1. ஆட்டு கிட்னியை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2, வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. ஓரு வாயகன்ற பிரஷர் பேனில் (அல்லது வாணலியில்) எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய பட்டை போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கருகாமல் நன்கு பொன் முறுவலாக வதக்கவும்.

4. இஞ்சி பூண்டு வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

5. பிறகு கிட்னி, எல்லா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில் (சிம்மில்) ஐந்து நிமிடம் வேகவிடவும்.

6. நன்கு வெந்து கூட்டானதும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொத்துமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. கிட்னி கழுவும் போது மஞ்சள் தூள் அல்லது வினிகர் சேர்த்து ஊறவைத்து கழுவவும்.

2. பிளையின் சாதம், ரொட்டி, பரோட்டா, சப்பாத்தி, தக்காளி தால், பிளெயின் தாள், போன்றவற்றிற்கு ஏற்ற பக்க உணவாகும்.



கிட்னி ஃபிரை
************

தேவையான பொருட்கள்

ஆட்டு கிட்னி - கால் கிலோ
உப்பு தூள் - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - முக்கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - சிறிது
புதினா - முன்று இதழ்
பச்சை மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பட்டை - சிறிய துண்டு (கால் இன்ச் அளவு)
கரம் மசாலா தூள் - ஒரு சிட்டிகை
தக்காளி ஒன்று - சிறியது
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி


செய்முறை

1. முதலில் கிட்னியை நடுவில் இருக்கும் கொழுப்பை மட்டும் அகற்றி விட்டு இரு முறை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

2. பிறகு மறுபடி இருமுறை கழுவி தண்ணீரை வடிய விடவும்.

3. கிட்னியில் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். தக்காளியை நான்கு துண்டாக வெட்டி அதில் போடவும்.

4. அவற்றை ஐந்து நிமிடம் ஊறவைத்து, குக்கரில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல், முன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

5. இப்போது அதில் நிறைய தண்ணீர் நிற்கும் அதை வற்ற விடவும்.

6. தனியாக ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி பட்டை, வெங்காயம் மீடியமாக அரிந்து சேர்த்து தாளிக்கவும்.

7. வற்றிய கிட்னியை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, பச்சை மிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து, கொத்துமல்லி, புதினா, நெய், சேர்த்து, கரம் மசாலா, தூவி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. கிட்னியை சரியாக கழுவ வில்லை என்றால் செய்யும் போது ஸ்மெல் வரும். ரொம்ப நேரம் வேக விட்டால் ரொம்ப கல்லு மாதிரி ஆகிடும்.

2. இதை குக்காரில் வேக வைத்து செய்வதால் குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட சுலபமாக இருக்கும். குழந்தைகளுக்கு இதை ஸ்மால் சிக்கன் என்று சொல்லி கொடுங்கள்.

3. காஷ்மீரி சில்லி பொடி என்பது நல்ல கலராக இருக்கும் காரம் அவ்வளவாக இருக்காது. அது கிடைக்க வில்லை என்றால் சாதா மிளகாய் தூளே போதுமானது. இதே போல் மிளகு சேர்த்தும் செய்யலாம்.

4. குழந்தைகளுக்கு, பிள்ளை பெற்றவர்களுக்கு நெய்யிலேயே கூட செய்து கொடுக்கலாம்.





[b]
Back to top Go down
 
ஆட்டுக்கறி
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: