Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: பொது அறிவு வினா-விடை Sat Apr 03, 2010 9:45 pm | |
| 161. எந்த குப்த மன்னன் காலத்தில் பாகியான் இந்தியாவிற்கு வந்தார்?
அ. குமாரகுப்தர் ஆ. ஸ்கந்தகுப்தர் இ. முதலாம் சந்திரகுப்தர் ஈ. இரண்டாம் சந்திரகுப்தர்
162. சதி என்னும் உடன்கட்டையின் தொடக்க கால நடைமுறை கி.பி. 510ல் குப்தர்கள் காலத்தில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. இது எங்கு காணப்பட்டது?
அ. விதிஷா ஆ. மால்வா இ. உஜ்ஜயின் ஈ. எரான்
163. பின்வரும் கலை வடிவங்களில் எது குப்தர்களின் காலத்தோடு அடையாளம் காணப்படுகிறது?
அ. மெக்ரவுலியில் உள்ள இரும்பு தூண்கள் ஆ. சுல்தான்கஞ்சில் உள்ள புத்தன் வெண்கலச் சிலை இ. புமாரா, பிடார்காவுன், பிரிட்டா, தியோகல் உள்ள செங்கல் கோவில்கள் மற்றும் அஜந்தா ஓவியங்கள் ஈ. இவை அனைத்துமே
164. ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காளிதாசன் படைப்பு எது?
அ. துசம்ஹாரம் ஆ. மேகதூதம் இ. சகுந்தலம் ஈ. ஹவம்சம்
165. யாத்திரிகர்களின் இளவரசர் என அழைக்கப்படுபவர் யார்?
அ. பாகியான் ஆ. யுவான்சுவாங் இ. இட்சிங் ஈ. இவர் அனைவருமே
166. பொருளாதார மற்றும் கலாச்சாரம் தொடர்பானவற்றில் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் பாலமாக விளங்கியது யார்?
அ. ராஷ்டிரகூடர்கள் ஆ. பாலர்கள் இ. பல்லவர்கள் ஈ. சோழர்கள்
167. சோழப் பேரரசை நிறுவியவர் யார்?
அ. விஜயாலயா ஆ. முதலாம் ராஜேந்திரர் இ. ராஜராஜன் ஈ. விஜயேந்திரர்
168. வர்த்தமானர்களின் தலைநகரம்
அ. தானேஸ்வரம் ஆ. தட்ச சீலம் இ. அவந்தி ஈ. எதுவுமில்லை
169. 'சாக்கியமுனி' என்று பாராட்டப்படுபவர்
அ. பாகியான் ஆ. மகாவீரர் இ. ஹேமச்சந்திரர் ஈ. யுவான் சுவாங்
170. கீழ்க்கண்ட எது ஹர்ஷரால் எழுதப்பட்டது?
அ. இரத்னாவளி ஆ. காதம்பரி இ. சுலோகபாரதி ஈ. ஹர்ஷ சரிதம்
விடை: 161. ஈ 162. ஈ 163. ஈ 164. இ 165. ஆ 166. அ 167. அ 168. அ 169. ஈ 170. அ | |
|