பிறப்பின் முன்பும் அறியோம், இறந்த பின் ஆவதும் அறியோம், இருப்பது சொற்ப நாளே அது மட்டும் திண்ணமாகும். இன்று கொட்டி நாளை அள்ளி இன்று முறுகி நாளை சிரித்து, வதை படும் மனங்களுடன் எதற்கிந்த நோக்காடு, வார்த்தைகளைச் சிந்தாதீர், பின் சிந்தித்துப் பயனில்லை, நாளை என்பது நிச்சயமாய் நம் கையில் இங்கில்லை, இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம்