சென்னை: தமிழக காவல்துறையினரின் ஓவர்டைம் ஊதியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 4 ஆயிரத்து 783 போலீசார் பணிபுரிகிறார்கள். இதில் 10 ஆயிரத்து 130 பெண் காவலர்களும் பணியாற்றுகிறார்கள். இவர்கள் வார விடுமுறையின்றி உழைக்கிறார்கள். தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் கூட போலீசார் பணியாற்றுகிறார்கள்.
கால நேரம் பாராமல் பணியாற்றிடும் போலீசாருக்கு இதுவரை மிகை நேர (ஓவர் டைம்) நாள் ஊதியம் ரூ.150 வழங்கப்பட்டு வந்தது.
தற்போது போலீசாரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, மிகை நேர ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.200 ஆக உயர்த்தி கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை வரும் ஜுலை 1-ந் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.