BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபடித்ததில் பிடித்தது - 12 Button10

 

 படித்ததில் பிடித்தது - 12

Go down 
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

படித்ததில் பிடித்தது - 12 Empty
PostSubject: படித்ததில் பிடித்தது - 12   படித்ததில் பிடித்தது - 12 Icon_minitimeMon Jun 14, 2010 4:26 am

அன்புக்குரிய BTC தோழமைகளுக்கு என் வணக்கங்கள்.

இன்றைய பிடித்தது பகுதி டாக்டர் . எம். ஆர் . காப்மேயரின் நூலில் இருந்து பகிரப்படுகிறது. விமர்சனம்..... அதன் நன்மை தீமை, எப்படி அவற்றை எதிர் கொள்வது என நூலாசிரியர் என்ன சொல்கிறார் என வாசியுங்கள்.... வழமை போலவே உங்களிடம் நான் கேட்டுக் கொள்வது, ......... மெய்ப் பொருள் காண்பதறிவு” , மனதுக்கு சரியெனப்படும் கருத்துக்களை உள்வாங்குங்கள், யாவருடைய வாழ்வும் சிறக்க என் அழியா அன்புடனான வாழ்த்துக்கள்.

விமர்சனத்தால் பாதிக்கப்படாமல் வெற்றி பெறுவது எப்படி ?

உணர்வு பாதிக்கப்படும் போது நாம் உணர்ச்சி வசப்படுகிறோம். விமர்சனத்தை உணர்ச்சி பூர்வமாய் அணுகாமல் இருப்பதே இத்தகைய பாதிக்கப்பட்ட உணர்வு நிலைக்கு ஆளாகமல் இருக்கும் வழி. எரிச்சலோ கோபமோ கொண்டு உங்களையே நீங்கள் வருத்திக் கொள்ளாதீர்கள்.
விமர்சனம் உங்கள் அகந்தயை நொறுக்கியது என்றால் அகந்தை இன்னும் கெட்டிப்பட வேண்டும் என்று பொருள். விமர்சனம் சரியானது என்று கூடச் சொல்லலாம்.

விமர்சனம் கீழ்கண்ட விஷயங்களில் ஏதேனும் ஒரு காரணத்தினாலோ அல்லது எல்லாம் சேர்ந்தோ உருவாகிறது.

1.உங்களை விமர்சிப்பவர் தனக்குள் சேர்த்து வைத்திருக்கும் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறார். எரிச்சல், கோபம், பயம், பொறாமை ஏதேனும் ஒன்றை.
அதை நீங்கள் ஒதுக்கித் தள்ளுங்கள். அத்தகைய விமர்சனங்களை அவர்கள் வெளிப்படுத்துவதன் மூலம் அவர்கள் தங்களைச் சுத்தமாக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்து ஒதுக்குங்கள்.
உங்களைக் குறியாய் வைத்த்தில் அவர்களுக்கு ஏதோ மனோதத்துவ ரீதியான சந்தோஷம் கிட்டியிருக்கிறது. அதை அலசி ஆராயாமல் மறந்துவிடுங்கள்.

2.உங்களை விமர்சித்து சுக்குநூறக்குவதன் மூலம் விமர்சகர் தன்னை உயர்த்திக் கொள்ள விரும்புகிறார் போலும். உங்களைக் கிழிப்பது மட்டுமே அவருடைய நோக்கமாகவும் இருக்கலாம். தன்னை மிக முக்கியமானவராக, தாக்க முடியாதவராக அவர் விமர்சனத்தின் மூலம் தோற்றம் கொடுக்க விரும்புகிறார் போலும்.

சிலபேர் விமர்சனத்துடன் கீழ்கண்ட வரிகளையும் சேர்ப்பார்கள். “நான் சொல்வது உன் நன்மைக்கே, அவர்களிடத்தில் எச்சரிக்கையாய் இருங்கள்” , “ நான் உன்னை நேசிப்பதால் தான் விமர்சிக்கிறேன்”, சரி நேசிப்பது உண்மையெனில் வலி ஏற்படுத்தாமல் உதவலாம், வழி காட்டலாம் தானே?

உங்களை ஏதோ ஒரு காரணத்திற்காகக் கீழே தள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் விமர்சிப்பவர் உங்கள் விரோதி – நீங்கள் அவரை அப்படியே நினைத்துப் பழக வேண்டும். இவர்கள் வாயையே ஆயுதமாகப் பயன்படுத்தி பிறரை வீழ்த்தும் நபர்கள்.

ஆனால் விரோதியின் விமர்சனம் நண்பனின் விமர்சனத்தை விட நேரடியாக, ஒளிவு மறைவில்லாமல், சரியாய்க் கூட இருக்கும். உங்கள் சுயவிமர்சனத்தை விடக் கூட சரியாக இருக்கும். “ நம்முடைய அபிப்ராயங்களை விட நம் விரோதிகளின் அபிப்பிராயங்கள் நம்மைப் பற்றிய உண்மைகளை உள்ளடக்கியவை”. நம் விரோதிகள் நம் தவறுகளைக் கண்டுபிடிக்கத் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

“ விரோதியிடம் நீ ஒதுங்கி இரு ; ஆனால் உன்னைப்பற்றிய அவர் விமர்சனத்தைக் காது கொடுத்துக் கேள்”.


(இதன் தொடர்ச்சி .........விரைவில்)


- ப்ரியமுடன்
Back to top Go down
 
படித்ததில் பிடித்தது - 12
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» படித்ததில் பிடித்தது - 17
» படித்ததில் பிடித்தது - 3
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது - 9
» படித்ததில் பிடித்தது

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: