BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Button10

 

 உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்

Go down 
AuthorMessage
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:09 pm

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்



நவீன வாழ்க்கைச் சூழலில் மிகப்பெரும் சவாலாய், பூதாகரமான பிரச்சனையாய்
எழுந்துள்ளது ‘உடல் பருமன்’. இது எந்த வயதிலும் எவருக்கும் வரலாம்.
பருவமடைந்த பின் ஆண்களை விடப் பெண்களிடம் பரவலாக அதிகளவு உடல் பருமன்
ஏற்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்குப் பின் அல்லது கர்ப்பத்திற்குபின்
அல்லது மாத சுழற்சி முற்றுப்பெற்றபின் உடல் பருமன் உண்டாகிறது.

மனிதரைத் தவிர பிற உயிரினங்களில்.... எலி, பூனை, நாய், ஆடு, மாடு, செடி,
கொடி, மரம்... அனைத்திலும் அவற்றின் இயற்கையான உடல் அமைப்பு மற்றும்
எடையைக் கடந்து மிதமிஞ்சி உடல் கொழுத்து நடக்க இயலாமல், மூச்சுவிட இயலாமல்
அவதிப்படுவதைப் பார்க்கமுடியாது. மனிதர்கள் மட்டுமே தம் அளவுக்கு மீறி
யானைகள் போல, மாமிசக் குன்றுகள் போல மாறுகின்றனர்.

அதிக எடையும் உடல் பருமனும்

‘அதிக எடை’ என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் ‘அதிக பருமன்’ என்று கூற
முடியாது. உடற்பயிற்சியாளர்கள், விளையாட்டு வீஜ்ர்கள் சராசரி எடையைவிடச்
சற்று அதிகமாக இருப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் அதிகக் கொழுப்புச்சத்தி
இருப்பதில்லை. அது சதை வளர்ச்சி. கொழுப்பின் அளவும் அதிகரித்து, உடலின்
சராசரி எடையும் அதிகமிருந்தால் அது உடல் பருமனின்றி வேறில்லை.

மனித எடையை தோராயமாகக் கணக்கிடும் முறை

ஒருவரின் உயரம் சென்டிமீட்டர் கணக்கில் எவ்வளவோ அதில் 100ஐக் கழிக்க
வேண்டும். பின் அதிலிருந்து 90 சதவீத அளவை அறியவேண்டும். ஒருவர் 170 சென்டி
மீட்டர் உயரமிருந்தால் 100ஐக் கழிக்கும்போது 70 வருகிறது. அதில் 90
சதவீதம் கணக்கிட்டால் 63 வருகிறது. 170 செ.மீ. உயரமுள்ளவருக்கு 63 கிலோ
எடைதான் ஏறத்தாழ சரியான எடையாக இருக்கும். இந்த எடையில் பத்து சதவீதம்
அதிகரித்தால் கூட ‘உடல் பருமன்’ என்று கூற முடியாது. மாறாக, அதற்கும் மேல்
தொடர்ந்து எடை அதிகரிக்குமானால் உடல் பருமன் ஏற்பட்டே தீரும்.

சராசரி எடையில் 10 முதல் 15 சதம் அதிகரித்தால் அதனைச் சிறிதளவு பருமன் எனக்
கருதலாம்.. 15 முதல் 20 சதம் அதிகரித்தால் நடுத்தர பருமன் எனக் கருதலாம்.
20 சதவீதத்திற்கும் மேல் எடை அதிகரித்தால் அதிக பருமன் என அறியலாம்.

சிறிதளவு பருமனாக இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க உடல் தொந்தரவுகள்
இல்லாமலிருக்கலாம். இருப்பினும் தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்ற
அழகுக் கோணத்திலிருந்து பார்ப்பவர்கள் உடல் எடையை குறைக்க
விரும்புகின்றனர்.

நடுத்தர பருமனாளிகளும் அதிக எடையுள்ள குண்டர்களும் உடல் செயல்பாடுகள்
கட்டுப்படுத்தப்படுவதாலும், எடையைச் சுமக்க முடியாமலும், மூச்சு
வாங்குவதாலும், இதர கடும் நோய்களாலும் அவதிக்கு ஆளாகின்றனர்.

உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன?

உடலில் அன்றாட இயக்கங்களுக்கு வேண்டிய சக்தியளிப்பதற்குத் தேவையான அளவைவிட
அதிகளவு உணவு உண்பதால் தேவைக்கு அதிகமான கலோரிகள் கொழுப்பாகச்
சேமிக்கப்படுகிறது. தேவையைவிட ஒருவர் தினம் 50 கலோரி அதிகம் எடுத்தால் ஒரே
ஆண்டுக்குள் 2 கிலோ எடை அதிகரித்துவிடும்.

கலோரி என்பது ஒன்றரை லிட்டர் நீரை 15 டிகிரி செண்டிகிரேடிலிருந்து 160
டிகிரி வரைச் சூடாக்கத் தேவையான உஷ்ணசக்தி. இக்கலோரியை (எரிசக்தியை)
உணவுகள், காய்கறிகள், பழங்கள் மூலம் நாம் பெறுகிறோம். வெவ்வேறு உணவுப்
பொருட்களில் வெவ்வேறு அளவு கலோரிகள் கிடைக்கின்றன.

வசதியாக, உட்கார்ந்தே பணிபுரியும் சொகுசுப் பேர்வழிகளுக்கு அவர்களின் உடல்
எடைக்கு ஒரு கிலோவிற்கு 20 கலோரிகள் தேவைப்படலாம். ஓரளவு உடலுழைப்பு
உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 25 கலோரிகள்
தேவைப்படலாம். அதிகம் உடற்பயிற்சி, உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களது
எடையில் ஒரு கிலோவிற்கு 30 கலோரிகள் தேவைப்படலாம்.

மேலும் உண்ணும் உணவின் அளவைவிட தரத்தையும் கலோரிகளையும் கொள்ளவேண்டும். 100
கிராம் வெள்ளரியில் 16 கலோரி சத்தும் 100 கிராம் வறுத்த நிலக்கடலையில் 600
கலோரி சத்தும், 1 கிராம் புரதத்தில் 4 கலோரி சத்தும், 1 கிராம்
கார்போஹைட்ரேட்டில் 4 கலோரி சத்தும், 1 கிராம் கொழுப்பில் 9 கலோரி சத்தும்,
1 சப்பாத்தியில் 100 கலோரிகளும், 1 பிஸ்கட்டில் 40 கலோரிகளும், 75 கிராம்
சாதத்தில் 100 கலோரிகளும், 1 அவுன்ஸ் ஆட்டுக்கறியில் 500 கலோரிகளும், 1
அவுன்ஸ் மீனில் 360 கலோரிகளும் கிடைக்கின்றன. வயது வந்த ஒரு நபருக்கு ஒரு
நாளுக்கு 1400 முதல் 1900 வரை கலோரிகள் தேவைப்படக்கூடும். இதில் குறைவு
ஏற்பட்டாலும், அதிகம் ஏற்பட்டாலும் உடலின் அமைப்பு, செயல்பாடுகள்
பாதிக்கப்படும்.

ஒழுங்கற்ற உணவுப் பழக்கமும், அதிகக் கொழுப்பு உணவுகள் உண்பதும் குறிப்பாக
எண்ணெய் பண்டங்கள், பால் பொருட்கள், அசைவ உணவுகள், சாக்லேட் இனிப்புகள்,
ஐஸ்கிரீம், மது, நெய், வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு போன்றவைகளால் உடல் எடை
அதிகரிக்கிறது. வாயுப் பண்டங்களாலும் (பருப்பு, உருளைகிழங்கு) எடை
கூடுகிறது. இருவேளை உணவுகளுக்கு இடையில் நொறுக்குத்தீனிகள் மெல்லும்
பழக்கமும், டிவி பார்த்தபடி அல்லது வேறு வேலையின்போது நொறுக்குத்தீனிகள்
தின்னும் பழக்கமும் உடல்எடையை அதிகரிக்கச் செய்கின்றன.

உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ இல்லாததால், பகலில் அதிகளவு சாப்பிட்டுவிட்டு
அதிகம் நேரம் தூங்குவதால், பொதுவாக அதிக ஓய்வும் உறக்கமும் கொள்வதால்
உடல்பருமன் ஏற்படுகிறது. சில குடும்பங்களில் பாரம்பரிய தன்மை காரணமாக
பருமனான பெற்றோருக்கு பருமனான குழந்தைகள் பிறக்கின்றனர்.

ஹார்மோன் இயக்கக் கோளாறுகளாலும், அடிக்கடி பிரசவங்கள், கருச்சிதைவுகள்,
அறுவைச் சிகிச்சைகளைத் தொடர்ந்தும், NSAID போன்ற சில ஆங்கில மருந்துகள்,
உடலில் நீர் திரவத் தேக்கங்கள் உண்டாக்கும் ஸ்டீராய்டுகள், கருத்தடை
மாத்திரைகள் போன்ற காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது. மேலும், இவை
உடல் பருமனை உண்டாக்குவதில் முக்கியக் குற்றவாளிகளாகவும் உள்ளன.

உடல் பருமனால் பல பிரச்சனைகள் :

உடல் பருமனால் ஒரு மனிதனுக்கு உடல்ரீதியாக மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும்
சமூக ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அதிக பருமனால் உயிராபத்தை
விளைவிக்கக் கூடிய பல நோய்கள் தாக்குகின்றன. மாரடைப்பு, உயர்ரத்த அழுத்தம்,
நீரிழிவு, ஆஸ்துமா, ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை, இடுப்பு எலும்புகள்,
முதுகுத்தண்டு, முழங்கால் மூட்டுகள் தேய்மானம், குடலிறக்கம், அசுத்த ரத்த
நாளப் புடைப்பு... போன்ற பல மோசமான நோய்கள் முற்றுகையிடுகின்றன.

மந்த இயக்கம், சோர்வு, பலவீனம் காரணமாக அடிக்கடி கீழே விழ நேரிடலாம் அல்லது
விபத்து நேரிடலாம். வீட்டில், வயலில், தொழிற்சாலையில், இதரபணியிடங்களில்
நிற்பது, நடப்பது, பணியாற்றுவதும், உடல் சுகாதாரம் பேணுவதும் மிகச்சிரமம்.
உடல் பருமன் ஒருவித நரம்பியல் நோயை ஏற்படுத்துகிறது. உளவியல் ரீதியாக
மனச்சோர்வு, தன்னம்பிக்கை குறைவு, பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற
பிரச்சனைகள் பாதிக்கின்றன. தனது பருமன் தனக்கு மட்டுமின்றி குடும்பத்
திற்கும், உலகத்திற்கும் சுமை எனும் உணர்வு ஏற்பட்டு விரக்தியும் மன
அழுத்தமும் மேலோங்கும்.

என்ன செய்யவேண்டும்?

ஓரளவு மட்டுமே எடை அதிகமிருப்பவர்கள் அதிக மாவுப் பொருள், கொழுப்பு பொருள்
உண்பதைக் குறைக்கவேண்டும். ஓரளவு உடற் பயிற்சி அல்லது யோகா
மேற்கொள்ளவேண்டும்.

அதிக எடை எனில், உணவில் அதிகக் கட்டுப்பாடுகள் தேவை. உபவாசம், பழவகைள்,
வாரம் 1 நாள் திரவ உணவுகள் மட்டும் அருந்துதல் எனப் பழக்கப்படுத்தினால்
பசியின் அளவு குறையும். குறைந்தது மாதம் 1 கிலோ எடையேனும் குறையும்.
கொழுப்பு மற்றும் மாவு உணவுகளுக்குப் பதிலாக கணிசமான அளவு பழங்கள் உண்ண
வேண்டும். திறந்த வெளிக் காற்றில் அன்றாடம் உடற்பயிற்சி, யோகா,
சுறுசுறுப்பான நடை போன்றவற்றை அவரவர் எடை, வயது, உடற்தகுதிக்கேற்ப
எதுவாகவும் மேற்கொள்ளலாம்.

நிலையில் எடை குறையலாம். அடுத்தடுத்து பயன்படுத்தும்போது அவை பயனற்றவை
என்று உறுதியாகும். அடிப்படையாக வாழ்க்கை முறையை, உணவு முறையை மாற்ற
வேண்டும். உடல் பருமனைக் கட்டுப்படுத்த விரும்பு வோர் மும்முனைப்
போருக்குத் தயாராக வேண்டும். 1. உணவுப் பழக்கங்களை ஒழுங்குப்
படுத்தவேண்டும் 2. வாழ்க்கை நடைமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் 3.
பக்கவிளைவு இல்லாத உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு
ஹோமியோபதி மருந்துகள் சிறப்பாக உதவுகின்றன.

உடல் பருமனுக்கு ஹோமியோபதி சிகிச்சை :

ஹோமியோபதியில் நோயாளியின் உடலமைப்பிற்கேற்ற மருந்து மிக முக்கியம். அதனுடன்
பருமனைக் குறைக்க ஹோமியோ மேதைகள் சில மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

‘Prescriber’ நூலில் Dr. ஒ.ஏ. கிளார்க் ‘Phytoberry’ தினம் 3 வேளை வீதம் 1
மாதம் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கிறார். பலனளிக்காவிட்டால் Ammonium
Brom 3x, Cal.carb30, Cal.ars30 ஒன்றன் பின் ஒன்றாய் முயற்சிக்குமாறு
கூறுகிறார்.

போயரிக் அவர்கள் ‘Fucus ves Q அல்லது 1 x மருந்தினை (5 முதல் 60 சொட்டுகள்
வரை) உணவிற்கு முன் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார். அபானவாயு,
அஜீரணம், பிடிவாதமான மலச்சிக்கல் குறிகளுடன் உள்ள உடல் பருமனுக்கு
இம்மருந்து மிகவும் பொருந்தும் என்கிறார். போயரிக் சுட்டிக்காட்டும் பிற
மருந்துகள் Am.brom, Antim crud, Capsicum, Graph, Thyroidene,
Lodothyrene.

T.P. சாட்டர்ஜி அவர்கள் ‘Hight hights of Homeo Practice’ நூலில் J.H.
கிளார்க் பரிந்துரை என்று கூறி Calotropis மருந்தினை 3 மாத காலம்
எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். வயிறு பெருத்த ஆண்களுக்கு Nuxvomica
10m, வயிறு பெருத்த பெண்களுக்கு Nuxvmomica 200 மருந்தினை சாட்டர்ஜி
பரிந்துரை செய்கிறார்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: உடல் கட்டுப்பாடு Bariatrics என்றால் என்ன?   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:10 pm

Bariatrics என்றால் என்ன?





அதிகமான உடல் பருமன், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப்
பற்றிய மருத்துவப்பிரிவிற்கு Bariatrics என்று பெயர். உடலில் உள்ள கொழுப்பு
செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண
உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான
உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால்
செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு
முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது.

அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனைக் குறைப்பதற்காக சிறுகுடலின் ஒருபகுதி,
அல்லது வயிற்றுப்பகுதி நீக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சாப்பிடும்
உணவின் அளவு குறைக்கப்படுகிறது. சிறுகுடலை மாற்றி அமைப்பதன்மூலம் உடல்
எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் மாற்றி அமைக்கப்படுகிறது.

சாதாரணமாக ஒருவரின் உடல் எடை 220 கிலோவிற்கு அதிகமானால் இதுபோன்ற அறுவை
சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவரின் உடல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக
பருமனாக இருந்து ஆல்கஹால் உபயோகிக்காதவராக இருந்தால் இந்த அறுவை சிகிச்சை
செய்யலாம். மேலும் அவரது மனநலம் திருப்திகரமாகவும் வயது 18 வயதிற்கும் 65
வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

உடல் பருமன் BMI (Body Mass Indx) என்னும் குறியீட்டால் கணக்கிடப்படுகிறது.
இந்தக் குறியீட்டு எண்ணைக் கணக்கிட (1) உடல் எடையை கிலோகிராமில்
கண்டறிந்து கொள்ளவேண்டும் மேலும் (2) உடலின் உயரத்தை மீட்டரில் அளந்து அதன்
வர்க்கத்தை கணக்கிட்டுக்கொள்ளவேண்டும். (1) ஐ (2) ஆல் வகுத்து வரும்
எண்தான் BMI என்பது.

BMI ன் மதிப்பு 20 க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவானவர் என
தீர்மானிக்கலாம். 20 முதல் 25 வரை இருந்தால் சராசரி எடை எனவும், 25 முதல்
30 வரை இருந்தால் அதிக எடை எனவும், 30 முதல் 40 வரை இருந்தால் உடல்
பருமனானவர் எனவும் 40 க்கு மேல் இருந்தால் மிகப்பருமனானவர் எனவும்
வகைப்படுத்தலாம்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: ஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:12 pm

ஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை







இதயத்திற்கு சுகம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு அரிசியைவிடச் சப்பாத்தி
சிறந்தது. இத்துடன் நார்ச்சத்து மிகுந்த காய்கறி, கீரை வகைகளைச் சேர்த்துக்
கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு முதலியவற்றை நீக்கிவிட்டு, காரட், தக்காளி
ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கோதுமையைக் கஞ்சியாகவோ, சாதமாகவோ
சேர்த்துக் கொள்ளலாம். ராகியைக் கஞ்சியாகச் சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சித்
துவையல், கொள்ளு ரசம், முருங்கைக்கீரை, தூதுவளைக்கீரை முருங்கைக்காய்,
கண்டங்கத்திரி, அரைக்கீரை ஆகியவை ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.

முந்திரி, மணிலா, பலா, வாழை, பேரீட்சை முதலியவை சாப்பிட்டால் இழுப்பும்,
இருமலும் அதிகமாகும். வாழைப்பழம் ஆஸ்துமா நோயாளிகளின் எதிரியாகும். பச்சைத்
தக்காளி சாப்பிட்டால் இழுப்பு, திணறல் ஏற்படும். எலுமிச்சைச் சர்பத்
ஆகாது. ஆனால் இனிப்பான ஆரஞ்சுப் பழம் சிறந்தது. தேங்காய் ஏற்றது. பால்,
தயிர், மோர், கூல்டிரிங்குகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வாயுவை
உண்டாக்கும் பருப்பு, பூசணி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஆஸ்துமா நோயாளிகள் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது அரை வயிறு சாப்பிட்டால்
போதும். சாப்பிடுவதையும் முறையாகச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று
கூழாக அரைத்து உமிழ் நீரில் கரைத்து விழுங்க வேண்டும். உண்ணும்போது உடலோ,
மனமோ பதற்றம் அடையக் கூடாது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் உண்ண வேண்டும்.




Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு    உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:13 pm

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு



கொழுப்பு என்றாலே உடலுக்குத் தீமையைத் தருவது என்றொரு எண்ணம் இருக்கிறது.
ஆனால் ஒமேகா-3 என்றொரு கொழுப்புவகை பலவகையான நோய்களில் இருந்து நம்முடைய
உடலைப் பாதுகாக்கிறது என்கிற உண்மையை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Omega_3_400
நாம் உட்கொள்ளும் உணவுவகைகளில் இரண்டு வகையான கொழுப்புகள் இருக்கின்றன.
ஒமேகா-3 கொழுப்பு, ஒமேகா-6 கொழுப்பு என்பவைகள்தான் அவை. நாம் அன்றாடம்
உபயோகப்படுத்தும் தாவர எண்ணெய்களிலும், மாமிச வகைகளிலும் ஒமேகா-6
வகைக்கொழுப்பு இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களில், முக்கியமாக மீன்களில்
காணப்படுவது ஒமேகா-3 வகைக்கொழுப்பாகும். ஒரு சில தாவரங்களிலும் இந்த
ஒமேகா-3 வகைக்கொழுப்பு காணப்படுகிறது. எந்த வகையான கொழுப்பு நம்முடைய
உடலில் உள்ளது என்பதைப் பொருத்து உடல் நலம் அமைகிறது.

ஒமேகா-6 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:

இரத்தத்தின் ஒட்டும்தன்மை அதிகமாகிறது.
இரத்தக்குழாய்கள் கடினமாகி அவற்றின் மீள்தன்மை குறைகிறது.
இரத்த அணுக்களின் செல்சுவர்கள் கெட்டியாகி, நெகிழ்வுத்தன்மை குறைகிறது.
இந்தக் காரணங்கள், மூளை மற்றும் இதயப்பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில்
அடைப்புகளை ஏற்படுத்த வழி செய்கின்றன.

ஒமேகா-3 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:

இரத்தத்தின் ஒட்டும் தன்மை குறைந்து, மீள்தன்மை அதிகரித்து,
இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இரத்த
சிவப்பணுக்களின் செல்சுவர்களில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதால்
இரத்தக்குழாய்களில் சிறிய அடைப்பு இருந்தால்கூட சிவப்பு அணுக்களின்
நெகிழும்தன்மையினால் இரத்தஓட்டம் உறுப்புகளைச் சென்றடைகிறது.

மனிதன் தோன்றிய காலத்தில் அவனது முக்கிய உணவாக கடல் உணவுகளே இருந்தன. தாவர
எண்ணெய்கள் அனைத்தும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையே. ஒர் ஆராய்ச்சி
முடிவின்படி அமெரிக்க ஆண்களுக்கு இதய நோய்கள் மிக அதிகமாகவும்,
கிரீன்லாந்து எஸ்கிமோக்களுக்கு மிகக்குறைவாகவும் வருவதாக கண்டறியப்பட்டது.
இரத்தத்தில் ஒமேகா-6 ன் அளவு அமெரிக்கர்களுக்கு 80%, பிரெஞ்சுக்கார்களுக்கு
65%, ஜப்பானியர்களுக்கு 50%, எஸ்கிமோக்களுக்கு 22% என்று புள்ளிவிவரம்
கூறுகிறது. மேலும் ஒமேகா-3 க்கு புற்றுநோய், பக்கவாதம் இவற்றையெல்லாம்
கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மீன் குறைவாக உண்ணும் விவசாயியைக்
காட்டிலும், மீன் அதிகமாக சாப்பிடும் மீனவருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு
30% குறைவு என்பது சரியான ஆதாரம் இல்லையா?
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: அருகம்புல் மருத்துவம்    உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:15 pm

அருகம்புல் மருத்துவம்


உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள்
என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை
எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற
சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும்
அருகம்புல்லுக்கு உண்டாம்.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை
உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக்
குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள்
கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: ஃபாஸ்ட் புட் விபரீதம்   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:16 pm

ஃபாஸ்ட் புட் விபரீதம்


உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Fast_food_350
இந்தியாவில் துரித உணவை சாப்பிடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
காய்கறிகள் சிப்ஸ்களாகவும், ப்ரெஞ்ச் ஃபிரையாகவும் உட்கொள்ளப்படுகின்றன.
இதனால் சிறுவயதிலேயே உடல்பருமன் நோய் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து
ஆண்டுகளில் கூல்டிரிங்க்ஸ்களின் உபயோகம் முந்நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

சிறுவர்கள் தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட நூற்றுபத்து முதல்
நூற்று எண்பது கலோரிகள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் பத்து ஆண்டுகளில்
இவர்களது எடை இருபத்தைந்து கிலோ அதிகரித்து விடுகிறது. ஒரு தலைமுறை
இடைவெளியில் இருபது சதவீத அளவிற்கு அதிகமாக கலோரிகள் உட்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் உடற்பருமன், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, இருதயநோய்கள் என பல நோய்கள்
சிறுவயதிலேயே ஏற்படுகின்றன. இந்த உடற்பருமனை உடற்பயிற்சியாலும்
பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதே உண்மை.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் பூண்டுநீரிழிவு நோய்க்கு மருந்தாகும் பூண்டு Garlic நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் பூண்டுக்கு இருக்கிறது. பூண்டில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வேதிப்பொருளை மாத்திரை வடிவில் உட்கொண்டபோது முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீர   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:17 pm

நீரிழிவு நோய்க்கு
மருந்தாகும் பூண்டு


உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Garlic_400
நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் பூண்டுக்கு இருக்கிறது. பூண்டில்
இருந்து தயாரிக்கப்படும் ஒரு வேதிப்பொருளை மாத்திரை வடிவில் உட்கொண்டபோது
முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் குணமடைகிறார்கள்.
எலிகளிடம் நடத்திப் பார்த்த சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக
ஜப்பானின் சுஷுகா மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஹிரோமு சாக்குராய்
கூறுகிறார்.

பூண்டில் காணப்படும் வெனேடியம் மற்றும் அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில்
இருந்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறதாம்.

இதற்கு முன்பாக வெனேடியம்-அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து
தயாரிக்கப்பட்ட ஊசிமருந்து 1ம் வகை 2ம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு
குணமளித்தது. இந்த புதிய ஆராய்ச்சியின் விளைவாக வாய்வழி மருந்து
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் கணையநீரில் உள்ள பீட்ட செல்கள் கணைய நீரை சுரக்காமல் இருந்தால்
அது முதல்வகை நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இந்த நோயாளிகள் இன்சுலினை
தினந்தோறும் ஊசிமூலம் உடலுக்குள் செலுத்திக் கொள்ளவேண்டும்.

தசைகள், கொழுப்பு, கல்லீரல் இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப கணையத்தில்
இன்சுலின் அதிகமாக சுரக்கப்படுகிறது. நாளடைவில் தேவை பெருக்கிக்கொண்டே
போகும்போது தேவைக்கேற்ப இன்சுலினை சுரக்கும் சக்தியை கணையம்
இழந்துவிடுகிறது. இந்தவகை நோயாளிகள் மருந்துடன், உடல் எடையைக் குறைக்கவும்
பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். இது இரண்டாம் வகை நீரிழிவுநோய்
எனப்படும்.

இவர்கள் சாப்பிடும் மருந்துகளால் பக்கவிளைவை எதிர்கொள்ளுகிறார்கள். இந்த
மருந்தை மனிதர்களுக்கு பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடந்து
கொண்டிருக்கின்றன.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: விரைவு நடைப் பயிற்சிகூட ஒரு மருந்துதான்   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:19 pm

97 சதவீத பெண்களும், 68 சதவீத ஆண்களும் இயல்பிலேயே நொறுக்குத்தீனி
பிரியர்களாக இருக்கிறார்கள். இந்த நொறுக்குத்தீனிகள் அதிக கலோரிகளைக்
கொண்டவை. கொழுப்பும் சர்க்கரையும் இவற்றில் அதிகமாக உள்ளன.
நொறுக்குத்தீனிகளின் பட்டியலில் முதல் இடம் பெறுவது சாக்லேட்டுகள்தான்.

எப்போதாவது சாக்லேட்டுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான்.ஆனால்
சாக்லேட்டுகளை அடிக்கடி சாப்பிடுகிறவர்கள் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற
நேரங்களில் சாக்லேட்டுகள் கிடைக்காதா என்று ஏங்கத் தொடங்குவார்கள்.
இதுபோன்ற ஏக்கங்கள் தீவிரமடையும்போதுதான் மனிதன் சாக்லேட் பைத்தியமாகிப்
போகிறான்.

பதினைந்து நிமிட விரைவான நடைப்பயிற்சியால் சாக்லேட் பைத்தியங்களை
குணப்படுத்த முடியும் என்று எக்சீட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு, அடிக்கடி தின்பண்டங்களைக் கொறிக்கும்
இயல்புடையவர்களுக்கு அந்த பழக்கத்தில் இருந்து விடுபடவும், அதன் மூலம் உடல்
எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Chocos_250
25 சாக்லேட் பைத்தியங்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். மூன்று
நாட்கள் சாக்லேட் பட்டினிக்குப்பிறகு பதினைந்து நிமிட விரைவு நடை.
அதற்கப்புறம் ஒரு சாக்லேட் கட்டி திறந்து நீட்டப்பட்டது. விரைவு
நடைக்குப்பிறகு சாக்லேட்டின் மீது நாட்டம் பத்து நிமிடங்கள் தாமதமாக
காணப்பட்டது.

ஆனால் ஓய்வில் இருந்த சாக்லேட் பிரியர்களின் முன்பாக இந்த சாக்லேட்கட்டி
நீட்டப்பட்டபோது, உடனடியாக விரும்பி வாங்கிக் கொண்டனர்.

அன்றாட வாழ்க்கையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் சிகரெட் பிடிக்கும்
பழக்கத்தில் இருந்து விடுபடமுடியும். ஆனால் உடற்பயிற்சி மூலமாக சாக்லேட்
பைத்தியங்களை குணப்படுத்த முடியுமென்பது முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளது.

நம்முடைய மூளையில் மனநிலைக்கேற்ப பழக்கங்களைத் தூண்டும் ஒரு
நரம்பணுத்தொகுதி உள்ளது. உடற்பயிற்சியின் மூலம் மூளையின் இந்தப்பகுதியில்
சுரக்கும் இரசாயனப்பொருள் கட்டுப்படுத்தப்படுகிறது. உடற்பயிற்சிகள்
நம்முடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகின்றன. சோம்பலான வாழ்க்கை முறையால்தான்
தின்பண்டங்களில் நாட்டம் ஏற்படுகிறது.

நாளொன்றுக்கு பதினைந்து நிமிடங்கள் விரைவான நடைப்பயிற்சியை
எடுத்துக்கொள்கிறவர்கள் சாக்லேட் பிரியர்களாக இருந்தாலும்கூட, கொஞ்சம்
கொஞ்சமாக சாக்லேட்டை வேண்டாம் என்று சொல்கிறவர்களாக மாறிவிடுகிறார்கள்
என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இன்றைய நகர வாழ்க்கை முறையில் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி குறைந்துகொண்டே
வருகிறது. அவர்கள் தின்பண்டங்களைக் கொறிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி
நாளடைவில் தொந்திபெருத்த குண்டுக் குழந்தைகளாகிப் போய்விடுகின்றனர்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:20 pm

என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல்
தடுக்கிறது?



இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம்
மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி
நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை
உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள்
நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள்
இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.


ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல்
தடுக்கும்.

திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து
பாதுகாக்கும்.

ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும்
குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.

மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல்,
புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.

வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி

பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை
தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.

நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை,
உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: உடல் பருமனா? உங்களுக்கான டயட்   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:21 pm

உடல் பருமனா?
உங்களுக்கான டயட்

20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்லியான உடலுக்கு அதிக
முக்கியத்துவம் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலைக் குறைப்பதற்காக
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொண்டு, பட்டினி கிடக்கின்றனர்.
பட்டினி கிடந்தால் உடல் குறைந்து விடும் என்பது தவறான கருத்து. இது உடலை
பலவீனமாக்கி விடும். மாத்திரைகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உடல்பருமனை
குறைக்க முறையான உடற்பயிற்சியோடு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Diet_food_320
ஒருநாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

காலை 6 மணி : டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.)
அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

9 மணி : 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப்
பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

11 மணி : மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப்
இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு
கலந்து பருகலாம்.

மதியம் 1 மணி : எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை,
காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி
நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.

மாலை 4 மணி : காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.

மாலை 5.30 மணி : ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன்
வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.

இரவு 8 மணி : காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ்
பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம்
சாப்பிடலாம். வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து
விடலாம்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: பிட்னஸ் என்றால் என்ன?    உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:23 pm

பிட்னஸ் என்றால் என்ன?

பிட்னஸ் என்பதை முழுநலம் என்று பொருள் கொள்ளலாம்.

முழுநலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல. வேலை செய்யும் திறமை,
தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை
அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப்படுகிறது.

அன்றாட வேலைகளைச் செய்யும்போது சோர்வின்றி செய்வதற்கான திறன் இருத்தல்
வேண்டும். சுவாச உறுப்புகளும், இதயமும் நன்றாக இயங்கும்போது இந்த திறன்
அதிகரிக்கும். மூச்சு வாங்குதல், படபடப்பு, அதிக வியர்வை, மயக்கம் போன்ற
அடையாளங்கள் வேலை செய்யும் முழுநலனுக்கு எதிரானவை.

ஒரு தசை அல்லது பல தசைகள் இணைந்து வலிமையை வெளிப்படுத்தலாம். அசையாத
பொருளின்மீது சக்தியை செலுத்துவது ஐசோமெட்ரிக் உறுதி என்றும் அசையும்
பொருளின்மீது சக்தியை வெளிப்படுத்துவது ஐசோடோனிக் உறுதி என்றும்
வகைப்படுத்தலாம்.

நம் உடலின் எளிதான இயக்கங்களுக்கு மூட்டுகள் அவசியமானவை. மூட்டுக்களைச்
சுற்றியுள்ள தசைகளின் உறுதியைப் பொறுத்து மூட்டுக்களின் அசைவுகள்
அமைகின்றன. உடற்பயிற்சி மூலம் இந்த தசைகளுக்கு உரமேற்றலாம். உறுதியான
உடலுக்கு ஈடாக அமைதியான மனம் அவசியம். எண்ணங்கள், உணர்ச்சிகள் இவையெல்லாம்
கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும்.

ஒரு தூண்டுதலுக்கு நம்முடைய உடல் எவ்வளவு வேகமாக, எவ்வளவு சக்தியுடன்
வினைபுரிகிறது என்பதும் கூட முழுநலனின் ஒரு கூறுதான். நம்முடைய உடலின்
முழுநலன் சிறுவயதில் குறைவாகவும், வாலிபத்தில் உச்சத்திலும், 60
வயதிற்குமேல் குறைவாகவும் இருக்கும். 10முதல் 14 வயதுகளில் முழுநலன் வேகமாக
இருக்கும்.20 வயதுகளில் உறுதி இருக்கும்.30 முதல் 40 வயதுகளில்
வேலைசெய்யும் திறன் உச்சத்தில் இருக்கும்.40 வயதுக்கு மேல் வேகம், உறுதி
ஆகியவை குறையும்.

ஆண்களுக்கு வேகமும், உறுதியும் அதிகம்.பெண்களுக்கு தொடர்ந்து வேலை செய்யும்
திறன் அதிகம்.ஆண்களின் உடல் உறுதி பெண்களின் உடல் உறுதியைக் காட்டிலும் 30
முதல் 50 சதவீதம் அதிகமாக இருக்கும். நோய்களாலும், சரிவிகித உணவு
இன்மையாலும், எடை குறைவுபடுவதாலும், எடை அதிகமாக இருப்பதாலும் முழுநலம்
பாதிக்கப்படுகிறது. நிம்மதியான தூக்கம் உடல்திறனை அதிகமாக்குகிறது.
தூக்கத்தினால் தசைகளின் திசுக்களில் தேங்கிவிட்ட கழிவுகள் நஞ்சுகள்
வெளியேற்றப்படுகின்றன. பழுதுபட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: தினமும் காப்பி குடித்தால்... புற்றுநோயும் வராதாம்...! சர்க்கரை நோயும் வராதாம்!   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:24 pm

தினமும் காப்பி குடித்தால்... புற்றுநோயும்
வராதாம்...! சர்க்கரை நோயும் வராதாம்!


புற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ
நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக
காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது
காப்பி குடிக்க வேண்டுமாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் “ஆண்டி ஆக்சிடென்ட்” காய்கறிகள் மற்றும்
பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த “ஆண்டி
ஆக்சிடென்ட்ஸ்” உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள்
கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது
என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக
காப்பியிலும் உள்ளது என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில், பென்சில்வேனியா நகரில் உள்ள ஸ்க்ராண்டன் பல்கலைக்கழக
பேராசிரியர் ஜோ வின்சன் இதுபற்றி ஆராய்ந்து சில உண்மைகளை
கண்டுபிடித்துள்ளனர். “மற்ற உணவுகளில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு
போதுமானதாக இருந்தாலும், அவை உடலில் கழிவாக ஓரளவு போய்விடுகிறது. ஆனால்
காப்பியில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு, உடலில் எந்த சூழ்நிலையிலும்
கரையாமல் அப்படி பலன் தருகிறது.” என்று கூறினார்.

“புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இரண்டாம் வகை சர்க்கரை நோய், பர்கின்சன் நோய்
போன்றவை வராமல் தடுக்கவும் காப்பி பயன்படுகிறது. ஒரு நாளைக்கு நாலைந்து
முறை முறை காப்பி குடிப்பது நல்லது தான். ஆனால் காப்பி பிடிக்காதவர்கள்
பலர் உள்ளனர். அவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி
குடிப்பது நல்லது. காப்பின் எடுத்த காபியாக இருந்தாலும் சரி, காப்பின்
அகற்றாத காப்பியாக இருந்தாலும் சரி, அதில் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது.”
என்றும் பேராசிரியர் வின்சன் கூறினார்.

பிரிட்டிஷ் காபி தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், “காபி குடிப்பது
என்பது கெடுதல் இல்லை. அப்படி சிலர் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். ஒரு
நாளைக்கு நான்கு, ஜந்து முறை காப்பி குடித்தால் கூட நல்லது தான் என்று
நிபுணர்களே கூறிவிட்டனர். பழம், காய்கறிகளை உணவில் சரிவர சேர்க்க
விரும்பாதவர்கள், குறைந்த பட்சம் காப்பி குடித்தாவது நோய்களை தவிர்க்கலாம்”
என்று கூறியுள்ளது.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: பசியும் உணவுப் பழக்கங்களும்    உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:25 pm

பசியும் உணவுப் பழக்கங்களும்

நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை
இயங்கிக் கொண்டே உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின்
மூலமே கிடைக்கின்றன. தாயின் வயிற்றில் கருவாக, உயிர்பெற்று, கரு
வளர்ச்சிக்குக் காரணமான உணவு, கருப்பையில் குழந்தையோடு வளரும் ‘நஞ்சு’
(உண்மையில் அது நஞ்சல்ல, உணவுச் சேமிப்பு கிடங்கு) மூலம் தாய் உட்கொள்ளும்
உணவு குழந்தைக்கும் செல்கிறது. நஞ்சிலிருந்து வெளிப்படும் தொப்புள் கொடி
மூலம் குழந்தைக்கு உணவு செல்கிறது. கரு உருவாகும் பொழுது ஏற்படும் உணவுத்
தேவை மரணம் வரை நிகழும் ஒரு தேவையன்றோ!

நம் மூளையின் ஒரு பகுதியான கீழ்முகுளம் நம் உணவுத் தேவையை
கட்டுப்படுத்தும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உறுப்பாகும். உடலிற்கு
சத்துத்தேவை ஏற்படும்பொழுது இப் பகுதி அதை உணர்ந்து வயிற்றிற்குச் செல்லும்
நரம்புகளை தூண்டிவிடுகின்றன. உடனே நமக்கு பசி உணர்வு ஏற்படுகிறது. நாமும்
உணவை நாடுகிறோம். எல்லா உயிரிகளுக்கும் பொதுவான ஒரு நிகழ்வாக உள்ளதே இந்த
நிலைதான். பொதுவாக ‘பசி’ என்ற நிலை இல்லாவிடில் நாம் உண்ண வேண்டும் என்றே
நினைக்க மாட்டோம்’. ‘பசித்தபின் புசி’ என்ற பழமொழியும் நாமறிவோம். பொதுவாக
‘பசி உணர்வு’ என்பது மகிழ்ச்சியான உணர்வல்ல.

கீழ்முகுளத்தால் உடல் சோர்வு உணரப்படும் பொழுது, மேல்வயிற்றிற்குச்
செல்லும் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இந்த நரம்புகள் தூண்டுதல்,
மனச்சோர்வு, உடல் சோர்வு ஆகியவற்றை அதிகரிப்பதுடன், எரிச்சல், கோபம்,
ஆத்திரம் போன்றவற்றையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் தலைவலி, குமட்டல்
போன்றவையும் ஏற்படும். வயிறுபுரட்டல், மேல் வயிற்று வலி போன்றவையும் கூட
சிலருக்கு உண்டாகும். இந்த நரம்புத் தூண்டுதலால் வயிறு சுருங்கி விரியும்.
இதனால் வயிற்றுப் பகுதி மட்டுமல்லாது, வயிற்று குடல் இணைப்புப் பகுதியும்
சுருங்கி விரியும். இதை ‘பசி சுருங்கல்’ என்று அழைப்பர். இது நிகழும்
போழுது பசி உணர்வு மேலும் அதிகப்படும்.

சற்று நேரத்தில் தானாகவே இந்த சுருங்கல்கள் அடங்கிவிடும். கான்சர் போன்ற
நோய்களில் இந்த சுருங்கல்கள் முழுமையாக நிகழாது. இதனால் பசி உண்டாகாது.
சிலவகை நோய்களில் ‘பசியின்மை’ ஏற்படுவது மட்டுமன்றி உணவின் மீது வெறுப்பும்
கூட உண்டாகும். இவ்வகை நோயாளிகள் உணவு எடுத்துக்கொள்ள மிகவும்
தொல்லைப்படுவர். ஆக பசியுணர்வு நம் உடலின் ஓர் அவசியத் தேவையெனில்
மிகையாகாது.

உண்ணும் விருப்பம்: பசி உணர்வு ஒரு தொல்லையான உணர்வெனில் உண்ணும்
விருப்பம் ஒரு மகிழ்ச்சியான உணர்வாகும். பசி உணர்வு வயிற்றில் ஏற்படும்
என்றால் உண்ணும் விருப்ப உணர்வு வாயிலும், அன்னத்திலும் தூண்டப்படும் ஓர்
உணர்வாகும். சில நேரங்களில் இந்த விருப்ப உணர்வு பசியை தூண்டும் ஓர்
உணர்வாகவும் இருக்கும். “அந்த உணவை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது”
என்பது நாம் அடிக்கடி நினைக்கும், கேட்கும் ஒரு வாக்கியமாகும். சில
நேரங்களில் உணவு சமைக்கும் பொழுது உண்டாகும் மணம் கூட உணவு விருப்ப உணர்வை
தூண்டக் கூடியதாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் உணர்வு
உட்கொள்பவர்களுக்கு, குறிப்பிட்ட அந்த நேரத்தில் உணவு விருப்ப உணர்வையும்,
பசி உணர்வையும் தானாக வாயும், வயிறும் உண்டாக்கி விடுவதையும் நாமறிவோம்.

உணவுப் பழக்கங்கள்:

உணவுப் பழக்கங்களை பொருத்தளவில், இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். சிலர்
சைவ உணவுப் பிரியர்கள். சிலர் அசைவ உணவுப் பிரியர்கள். அதிலும் கூட
சிலருக்குக் கீரைபிடிக்கும், சிலருக்கு காய்கள் பிடிக்கும். சிலருக்கு
ஆட்டிறைச்சி பிடிக்கும், சிலருக்குக் கோழி இறைச்சி பிடிக்கும். தனிப்பட்ட
உணவு விருப்பங்களுக்கு ஏற்ப, வயிறும் அவ்வகை உணவுகளுக்குப் பழகிவிடும்.
சமீபத்தில் தொலைக் காட்சிகளில் ஒரு காட்சி பார்த்திருப்பீர்கள். சென்னை
பொது மருத்துவமனையில் ஒரு நோயாளியின் வயிற்றிலிருந்து ஏராளமான ஆணிகள்,
கத்தரி, இரும்புச் சாமான்களை எடுத்ததாக மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
உணவுப் பழக்கம் என்பது நாம் எந்த உணவுகளை வயிற்றிற்குக் கொடுத்துப்
பழகுகிறோமோ, அதைப் பொருத்தே வயிற்றின் தாங்கும், செரிக்கும் சக்தியும்
உண்டாகும்.

“ஒருவேளை உணவை ஒழியென்றால் ஒழியாய்,
இருவேளை உணவை ஏளென்றால் ஏளாய்,
இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: மசாஜ் சிகிச்சை ஆபாசமா?   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:27 pm

மசாஜ் சிகிச்சை ஆபாசமா?

கி.மு., 1000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மசாஜ் சிகிச்சை இன்று ஐரோப்பிய
நாடுகளில் நோய் தீர்க்கும் கலையாக பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. தசைகளில்
இறுக்கத்தை நீக்க, தசை வலியைக் குறைக்க, தசை திசுக்களை மென்மையாக்க உதவும்
கலையே மசாஜ் ஆகும்.

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Massage_340
பியூட்டி மசாஜ் எனப்படும் அழகு மசாஜ், தெரபிக்மசாஜ் எனும் நோய் சிகிச்சை
மசாஜ் என இரண்டு வகையான மசாஜ்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் இந்த இருவகையான
மசாஜ்களுமே பிரபலமடைந்து வருகின்றன. அங்குள்ள ஆஸ்பத்திரிகளில்,
ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளும் ஒன்றாக மசாஜ் சிகிச்சை முறையும் உள்ளது

கைகளைக் கொண்டு செய்யும் மசாஜ் கை மசாஜ், கருவிகளைப் பயன்படுத்தி செய்யும்
அதிர்வு மசாஜ் ஆகிய இருவகை மசாஜ்களுமே ஐரோப்பிய நாடுகளில் வழக்கத்தில்
உள்ளன.

தோல் நோய்கள், இதய நோய்கள், குடல் நோய்கள், ஈரல் வீக்க நோய், ஒவ்வாமை நோய்
கொண்டோர் ஆகியோருக்கு ஐரோப்பிய நாடுகளில் மசாஜ் பரிந்துரை
செய்யப்படுவதில்லை. மேலும் ஆபரேஷனுக்கு 6 மாதங்களுக்குப் பின்னரும் மசாஜ்
தவிர்க்கப்படுகிறது.

மசாஜ் அவை பின்பற்றப்படும் நாடுகளைப் பொறுத்து, அக்குபிரஷர் மசாஜ்,
கியாட்கு மசாஜ், ரிப்லெக்ஸ் லோஜி மசாஜ், ரால்பின் மசாஜ், சுவீடிஸ் மசாஜ் என
பலவகைகளில் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் மசாஜ் என்பது, மென்மையாக தட்டுவது,
விரைந்து தட்டுவது, தேய்த்துவிடுவது, அழுத்திவிடுவது, கைகளைத் தட்டுவது,
உருட்டிவிடுவது போன்ற திறன்களுக்குள் அடங்குகிறது.

மசாஜ் செய்வதினால் ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்த வெள்ளை அணுக்களின்
எண்ணிக்கை கூடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. லேக்டிக்
அமிலம் ஒரே இடத்தில் குவிவது தடுத்து நிறுத்தப்படுவதால் உடலில் ஏற்படும்
சோர்வு அல்லது களைப்பு நீக்கப்படுகிறது.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: உடல் பருமனைக் குறைப்பது எப்படி?   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:27 pm

உடல் பருமனைக் குறைப்பது எப்படி?

1. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை
உங்கள் உணவில் அதிகப்படுத்தவும்.

2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள்
தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும்.

3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே
பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய்,
நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம்
உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.

4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும்.

5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை
உங்களுக்குத் தேவையான அளவு வைட்டமின்களையும், தாதுச் சத்தையும் நார்
சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல்
பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

6. உப்பின் அளவையும் குறைக்கவும்

7. ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை உடலுக்குள் திணிக்க வேண்டாம்

8. அதே நேரத்தில் சாப்பிடாமலும் இருக்க வேண்டாம்.

9. உணவு உட்கொள்ளும் நேரத்தை சீராக கடைபிடிக்கவும்.

10. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேயும் சமைத்துக் கொண்டேயும் சாப்பிடும்
பழக்கத்தை விடவும்.

11. ஒரு நாளில் 6 முதல் 8 தம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

12. சீரான உடற்பயிற்சியில் ஈடுபடவும். தினமும் 20-40 நிமிடம் நடை பழகவும்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: உடல் பருமன் திடீரென குறைவதால் உடல் முழுதும் ஏற்படும் கோடுகளை நீக்குவது எப்படி?    உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:29 pm

உடல் பருமன் திடீரென குறைவதால் உடல் முழுதும்
ஏற்படும் கோடுகளை நீக்குவது எப்படி?

திடீரென உடல் குறைதல் இம்மாதிரியான விளைவுகளையே ஏற்படுத்தும். உடலில் உள்ள
கோடுகளை நீக்க குறிப்பிட்ட க்ரீமைப் பயன்படுத்தினால், 6 முதல் 10
மாதங்களில் கோடுகள் முழுமையாய் நீங்கி விடுகின்றன. மசாஜ் மற்றும் யோகா
பயிற்சிகள் உங்களை சாந்தப்படுத்திக் கொள்ள உதவும். உங்கள் சதைகளை
உறுதிப்படுத்த விரும்பினால், நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.


Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: குடியை நிறுத்த...   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitimeSat Jun 26, 2010 1:30 pm

குடியை நிறுத்த...


மது (ஆல்கஹால்) என்றால் என்ன?

ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும்
போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால்
ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும். ஆல்கஹால் பல்வேறு
விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால்
போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது
தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம்.
புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது
தயாரிக்கப்படுகிறது.

குடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...?

குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி,
இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும்
மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற
பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.


குடிநோய் எந்தளவுக்கு அபாயமானது...?

இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று.
நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான
பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப்
புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக
மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக உள்ளது. போதை
காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை
போன்றவை இதன் உடனடி விளைவுகள். இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும்
தடையாக அமைந்துவிடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப்
பாதிப்படைகின்றன.


ஒருவருக்கு குடிநோய் இருப்பதை எவ்வாறு அறியலாம்...?

பின்வரும் நான்கு கேள்விகளில் ஒன்றுக்கேனும் உங்கள் பதில் “ஆம்”
என்றிருந்தால், நீங்களோ அல்லது சம்பந்தப்பட்டவரோ குடிநோயின்
ஆதிக்கத்திற்குட்படும் வருகிறீர்கள் என்றறியலாம்.

1. நீங்கள் எப்போதாவது குடிப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று
எண்ணியதுண்டா...?

2. உங்களது குடிப்பழக்கத்தின் காரணமாக மற்றவர்கள் உங்களை விமர்சித்து
அதனால் நீங்கள் கோபமடைந்ததுண்டா?

3. நீங்கள் எப்போதாவது குடிப்பது தவறு என்று எண்ணி அதனால் குற்றவுணர்வு
அடைந்ததுண்டோ?

4. நீங்கள் காலையில் எழுந்த உடன் முதல் காரியமாக உங்கள் நடுக்கத்தைக்
குறைக்கவோ முந்தைய தினம் குடித்ததன் விளைவை அகற்றவோ குடிப்பதுண்டா...?

இந்நிலையில் உடனடியாக இந்தக் கொடிய அடிமைப் பழக்கத்திலிருந்து விடுபட
இதற்கென உள்ள மையங்களில் உள்ள மருத்துவர்களைச் சந்தித்தல் அவசியம். அவர்கள்
உங்களுக்குத் தக்க ஆலோசனைகளையும் செயற்திட்டத்தையும் அளித்து உங்களை
மீட்பது உறுதி.


மக்கள் ஏன் குடிக்கிறார்கள்...?

சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் “குறுகியகால
விளைவுகள்” மக்களை வெகுவாக ஈர்த்துவிடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.

1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு
ஏற்படுகிறது.

2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை
ஏற்படுத்துகின்றது.

3. பசி உண்டாகிறது.

4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.

இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்.


குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் “தவறான
கருத்துக்கள்” எவை?


1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த
சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.

2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல்
பாதிப்பும் ஏற்படாது.

3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.

5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்.

6. குடிப்பதால் ஒருவர் தனது மனச்சோர்விலிருந்து விடுபட முடியும்.

7. குடித்துவிட்டால் மற்றவர்களுடன் நட்புடனும் தயக்கமின்றியும்
பழகமுடியும்.

8. குடித்தால் இரவில் நன்கு உறக்கம் வரும்.

9. அலுவலக நேரங்களில் குடிப்பதால் நன்கு வேலை செய்ய முடியும்.

10. மன அழுத்தம் மற்றும் கவலைகள் காரணமாக ஏற்படும் பரபரப்பை அகற்றும்.

11. ஜலதோஷம் மற்றும் இருமலை, விக்ஸ் களிம்பு போன்று போக்கிவிடும்.

12. குடிப்பதால் மனத்திடமும் தைரியமும் ஏற்படும்.

13. தீவிர உடலுழைப்பில் ஈடுபடுவர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கும்.

14. உடற்களைப்பைப் போக்கும்.

15. பிரசவித்த பெண்களுக்கு நல்லது.

16. உணவிற்கு முன்பு குடிப்பது பசியைத் தூண்டும்.

17. குடித்தால் மசாலா சேர்த்த மாமிச உணவு மேலும் ருசியுடையதாக இருக்கும்.

18. நண்பர்களை வருத்தமடையச் செய்வதைக் காட்டிலும் அவர்களின்
வேண்டுகோளுக்கிணங்க குடிப்பதே மேல்.


ஒருவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான் என்பதற்கான
எச்சரிக்கை அறிகுறிகள் எவை...?


1. உடல் ஆரோக்கியம் நலிவடைதல் சிவப்பேறிய கண்கள், சருமம், வெளிறிய தோற்றம்,
எடை மாற்றங்கள் போன்றவை.

2. உடலில் ஒருவித துர்நாற்றம்.

3. பள்ளிக்குச் செல்லாமை, படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளி வேலைகளை சரிவர
செய்யாதிருப்பது, கடைநிலைக்குச் சென்றுவிடுவது.

4. வீடுகளில் கூறப்படும் புத்திமதிகள் பள்ளி வீதிகள் ஆகியவற்றை
எதிர்ப்புணர்வுடன் மீறத் தலைப்படுவது.

5. பள்ளி மற்றும் வீட்டருகே தகாத செயல்களில் ஈடுபடுவது.

6. காரணமின்றி பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லாமல் திரிவது.

7. வழக்கமான நண்பர்களை விட்டகலுதல்

8. புதிய நண்பர்களைப் பற்றி ரகசியமாக வைத்திருப்பது.

9. வீட்டு விவகாரங்களிலிருந்து விலகியிருப்பது, தனது செயல்களை யாருமறியாது
ரகசியமாகச் செய்வது.

10. எதிலும் ஈடுபாடு குறைவு: சோர்வாகவும் வழக்கத்திற்கு அதிகமாக தூங்கிக்
கொண்டும் இருப்பது.

11. உடல் சுத்தத்தில் கவனமின்மை. சரியாக தினசரி குளிக்காமலும் அழுக்கமான
ஆடைகளைத் தொடர்ந்து அணிந்தும் இருப்பது.

12. இரவில் தாமதமாக வருதல். அதற்கு பல கட்டுக் கதைகளைக் கூறுதல்.

13. வீட்டில் யாருடனும் பேசாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது.

14. பணம் காணாமல் போவது, தனது சொந்த உடமைகளை விற்று விடுவது

15. கடைகளில் திருடுவது.


குடிநோயின் உச்சம்:

1. மிகவும் அதிகமாகக் குடிப்பது.

2. ஒரே மூச்சில் குடிப்பது.

3. கடுமையான நடத்தை கோபப்பட்டு கண்டபடி கத்துவது, சண்டையிடுவது.

4. எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை, உணவை உட்கொள்ளாமல் இருப்பது.

5. குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்

6. திடீரென மாறும் மனநிலை.

7. இடையறாது குடித்தல்

8. தனிமையில் குடித்தல்

9. ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்.

10. மயங்கி விழும்வரை குடிப்பது.

11. உடல் பிரச்னைகள் அதிகரிப்பது

12. முற்றிலுமாக மறந்து போதல்

13. மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல்.

14. மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்

மேற்கூறியவற்றில் சில பிரச்னைகள் இருந்தாலே குடிப்பழக்கத்திற்கு
அடிமையாகிவிட்டதை அறிய வேண்டும்.


குடிப்பதற்கு ஆரம்பித்து குடிநோயாளியாக மாறுவதற்குகிடையில் உள்ள
நிலைகள் எவை.?


1. சோதித்துப் பார்க்கும் நிலை...

ஆல்கஹாலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அறிய ஆவலால் சிலர் குடித்துப்
பார்க்க முயல்கின்றனர்.

2. சமூக நிகழ்ச்சிகள் நிலை...

நண்பர்களைச் சந்திப்பது விருந்துக் கூட்டங்கள் போன்ற சமூக நிகழ்ச்சிகளின்
போது மது அருந்துவது.

3. சார்பு நிலை...

குடிக்காமல் இருக்க முடியாது எனும் நிலை. தொடர்ந்து தனியாகக் குடிக்கும்
நிலை.

4. தீவிரமடைந்த நிலை

குடிப்பவர் எப்போதும் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். மேலும்,
குடித்தால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியும் எனக் கருதுகிறார்.


ஆல்கஹால் ஒரு போதைப் பொருளா...?

இதில் சந்தேகத்திற்கிடமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த
ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை
எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால்
ஊக்கமழித்துச் சோர்வை ஏற்படுத்தும் போதை மருந்தாகும்.
Back to top Go down
Sponsored content





உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Empty
PostSubject: Re: உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்   உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம் Icon_minitime

Back to top Go down
 
உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகார அலாரம்
» தமிழரைப் பிரிக்கிறதா இணையம்?
» உடல் நலனை பாதிக்கும் மன நலம்
» உடல் நலத்தில் குடிநீரின் அளவும் அவசியமும்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: