lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: # யூதர்களின் புனித நூலாகக் கருதப்படுவது ‘தோரா’ எனப்படும் நூல். # சுனில் காவஸ்கரைத் தெரியாத சுட்டிகளே கிடையாது. அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் தெரியுமா? டைம் டு கால் இட் எ டே (Time to call it a day). # ஐஸ்கட்டி சாப்பிடும்போது லேசாக கண்வலி வருவதை உணர்ந்திரு Sat Jun 26, 2010 4:06 pm | |
| v அட்லாண்டிக் பெருங்கடல்தான், உலகில் அதிக உப்பு நிறைந்த பெருங்கடல் (உலகிலேயே உப்பு அதிகமுள்ள இடம் Dead Sea. இது சற்றுப் பெரிய ஏரி போல அலைகளற்று காணப்படும்!)
v இங்கிலாந்து நாட்டில் அதன் அரசரோ, அரசியோ போகக்கூடாத இடம் House of Commons. இந்தியாவின் லோக்சபாவுக்கு இணையான இடம் அது.
v தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ் பெர்க்கில்தான், உலகின் மிக ஆழமான சுரங்கம் உள்ளது.
v கேலிபோர்னியாவில் உள்ள ‘டெத் வேலி’ (Death Valley) தான் உலகிலேயே மிகவும் வறண்ட பகுதி.
v மிகப்பெரிய கால்வாயான பனாமா கால்வாயின் மொத்த நீளம் 64 கிலோ மீட்டர்.
v பண்டைய ஏழு அதிசயங்களுள் ஒன்று ‘ஜீயஸ்’ (Zeus) கடவுளின் சிலை. கிரேக்கக் கடவுள்களில் மிகவும் சக்திவாய்ந்தவராகக் கருதப்பட்டவர் இந்த ‘ஜீயஸ்’!
v வடதுருவத்தை அடைந்த முதல் மனிதனின் பெயர் ராபர்ட் பியரி (Robert Peary).
v அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ். அதற்குப் பெயர் கொடுத்தவர் அமெரிக்கோ வெஸ்புகி.
v பெருங்கடல்களுள் சிறியது ஆர்டிக் பெருங்கடல்.
v உலகின் மிகப் பரந்த தெரு, நியூயார்க்கில் உள்ள ‘பிராட்வே’.
v இரான் நாட்டின் பழைய பெயர் ‘பெர்ஸியா’.
v வெட்டுக்கிளியின் காதுகள், அவற்றின் கால்களில் இருக்கின்றன.
v பேரரசர்அக்பரின்நினைவிடத்தின்பெயர்‘சிக்கந்த்ரா’ (Sikandra).
v ‘கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுவது காஞ்சிபுரம்.
v எகிப்திய பிரமிடுகளில் பழங்கால ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது, குலூவின் பெரிய பிரமிடு (Great Pyramid of Khulu).
******************************************************************** | |
|