என்னை பார்க்கும் போதெல்லாம்
வேகம் குறைக்கும் கால்கள்
ஒளிந்து பார்க்கும் கண்கள்
கோர்க்கத் துடிக்கும் கைகள்
பிய்த்து எறியும் பாதி நகம்
கீழே விழும் கூந்தல் ரோஜா
தலை கோதும் தாவணி நுனி
எனக்குப் பிடித்த கொலுசு
உனக்கான ஒவ்வொன்றும்
எனக்கான காதலை
சொல்லாமல் சொல்கையில்
உன் உதடுகள் மட்டும்
இன்னும் ஏன்..
சொல்லாமலே சென்றுவிட்டாய்
என் காத்திருப்பில்
நம்பிக்கை வைத்து
ஐந்து வருடம் கழித்து
அதே சந்தில் பார்த்து
வேகம் கூட்டி
பக்கமே பாராமல்
நடுங்கும் விரல்கள்
வெண்ணிற புடவை
வெறும் நெற்றி
வெடித்த பாதம்
நடந்ததே நடந்தது
எல்லாமே எதிர்மறையாய்
அவள் மௌனம் மட்டும் மாறாமல்
இன்னும் என்னைக் கொன்றுகொண்டும்
விதியின் வழியில் சென்றுகொண்டும்!