Subject: தூக்கணாங் குருவி !!! Wed Aug 11, 2010 4:14 am
தூக்கணாங் குருவி !!!
சலசலக்கும் அருவிக் கரையில் கைக்கு எட்டா தூரத்தில்..... கட்டிடக் கலைஞன் இல்லாமல் மரத்தில் குட்டி தாஜ்மஹால். சரம் சரமாய் ஒற்றையாய் கற்றையாய்......
திருடி கொணர்ந்த நாணலின் இழையால் கூடு கட்டுது ஆண் குருவி. வருடிக் கொடுத்து வஞ்சனை இல்லாமல் குஞ்சி பொரிக்குது பெண் குருவி. பிஞ்சிக் குஞ்சுகளோடு கூடிக் குடும்பமாய்,குதூகலமாய் கொஞ்சி விளையாடுது மஞ்சள் குருவி.
வம்புகள் ஏதும் இல்லை:வாஸ்து வசதிகள் இல்லை வண்ணாத்திக் குருவியின் வீடு ஊஞ்சலாய்...உல்லாசமாய்!!!!!
ஆடம்பரம் இல்லை:அரண்மனை இல்லை தும்பைக் கொண்டு தூக்கலாய்,காற்றில் தொங்கும் தூளியாய்!!!!!
விஞ்ஞானம் இல்லை:விளக்கொளி இல்லை. மின்மினிப் பூச்சி சிறை பிடிப்பால் ஒளி கொடுக்கும் கைவிளக்காய்!!!!
ஆபத்து மட்டும் உண்டு அயலானிடம் இருந்து ஆனாலும் வாழுது அழகான வாழ்கையை. பஞ்சு மேனி குருவி ...பகட்டில்லாமல், பழுதில்லாமல் . இரவு நேரத்தில் இலவச சங்கீதமாய் !!!!
வியக்க வைக்கிறது:விந்தையாய் இருக்கிறது தோரணமாய் தொங்கும் குருவியின் கூடு மட்டுமல்ல காரணமாய் கூடி வாழும் கூட்டு எண்ணமும் கூட கிறங்கித்தான் போனேன் அதன் அழகான அறிவில் மயங்கி.