நட்புக் கவிதை !!!
" நட்பின் வெளிப்பாடு "
அமைதியான இரவு..
சில்லென்ற காற்று..
அலைகளின் தாளம்..
படகு மறைவில் காதல் ஜோடிகள்..
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் தோளில் அவள் தலை சாய்ந்து
விசும்பி கொண்டு இருக்கிறாள்..
சமூகம் அவர்களை கேலி செய்தது
கள்ளக்காதல் என்று..
எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணீர்
ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!
" அறிமுகம் "
அம்மாஅப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்குஅழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
''எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்''
உன்குரல்...
" நட்பின் மொழி "
தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்
" தேடுகிறேன் "
உன் கவிதைகளில்
நிறைந்திருக்கும்
அந்தக் காதலி யாரடா? என்ற*
தோழி உன் கேள்விகளுக்கு
பதில் சொல்வதற்காகவே
விரைவாகத் தேடுகிறேன்
எங்கோ மறைந்திருக்கும்
என் காதலியை!
" மாறாத நட்பு "
காலம் மாறினாலும்
நேசம் மாறாது!
நேரம் குறைந்தாலும்
பாசம் குறையாது!
நான் மறந்தாலும் - என்
நட்பு மறையாது...
,
இப்படிக்கு
நட்புடன் .......
அருண் @ நான் அவன் இல்லை