மௌன மொழிகள் !!!
மனம் வெதும்பிய தருணங்களில்
கண் கலங்கிய நிமிடங்களில்
வார்த்தை ஏதும் உதிர்க்கவில்லை நீ
வள வளவென்று உரையாடவில்லை நீ
உன் விழிகள் பிரதிபலித்த
காதல் பாஷைகள்
என் விரல்களை இறுக பற்றிய
நின் கரங்கள்
எனக்கான ஆதரவை
ஆறுதலை அடக்கமாக அம்சமாக
அழகாக அரவணைப்பாக உறுதிப்படுத்திய
நின் மௌன புன்னகை ,
பேசாமல் கடலளவு காதல் பேசிய
இவை போன்ற
உன் மௌன மொழிகள்
ஒவ்வொன்றும் கணப்பொழுதில்
பறக்கடித்துவிடுமே
நெஞ்சுக்குள் கனமாய்
உணர்ந்த பொழுதுகளை.
நட்புடன்............
அருண் @ நான் அவன் இல்லை