வாழ்க்கை பாடம் 1
சொர்கமும் நரகமும்
ஒருநாள் நல்ல பக்தியுள்ள போர்வீரன் கௌதம புத்தரிடம் சென்று , குருவே என் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் . புத்தரும் அவனை உட்கார சொல்லி அவனை நோக்கி காரசாரமாக திட்ட ஆரம்பித்தார் , அந்த போர் வீரனுக்கு கோபம் வந்து விட்டது , உடனே தன் உடை வாலை உருவி புத்தரை நோக்கி கையை ஓங்கினான் , அப்போது புத்தர் சொன்னார் இப்போது நீ நரகத்தை நோக்கி நெருங்கிக்கொண்டு இருக்கிறாய் என்றார் உடனே அந்த போர் வீரன் சற்று சிந்தித்து பின்பு தன் உடைவாளை தன் உரையில் போட்டன், உடனே புத்தர் அவனை பார்த்து சொன்னார் இப்போது நீ சொர்கத்தை நெருங்கி விட்டாய் என்று சொன்னார் .
இந்த கதை எதை நமக்கு சுட்டி காட்டுகிறது என்றால் நாம் எப்போதெல்லாம் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அப்போதெல்லாம் நம்முடைய வாழ்கை நரகம் ஆகிறது , எப்போதெல்லாம் அறிவுக்கு முதலிடம் கொடுக்கிறோமோ அப்போதெல்லாம் நம் வாழ்க்கை சொர்க்கம் ஆகிறது . அறிவு மற்றும் உணர்ச்சி இவற்றில் எதை நாம் பயன் படுத்துகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது .
எனவே சொர்க்கம் அல்லது நரகம் என்றோ ஒருநாள் பார்பதற்கு முன்பாக நாம் ஏன் அனுதினமும் அதை பின் பற்றி நடக்க கூடாது , ஆகவே உணர்ச்சிக்கு முதலிடம் தராமல் அறிவுக்கு முதலிடம் கொடுத்தல் நம் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் சொர்க்கம் தான்.
வாழ்கை சொர்க்கமா அல்லது நரகமாக வேண்டுமா முடிவு நம்முடைய கையில் தான் .
இப்படிக்கு
Anand