தேவையான பொருட்கள்
* இட்லி 20 சதுரமாக வெட்டி பொரித்து எடுக்கவும்.
* சீரகம் 1ஸ்பூன்
* வெங்காயம் 2 பொடியாக நறுக்கவும்.
* மஞ்சள் பொடி 1/2ஸ்பூன்
* ரசப்பொடி 1ஸ்பூன்
* சாம்பார் பொடி 2ஸ்பூன்
* கரம் மசாலாபொடி 1ஸ்பூன்
* தக்காளி 4 பொடியாக நறுக்கவும்
* இஞ்சி,பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
* மல்லி தழை சிறிது
* உப்பு தேவைக்குயேற்ப்ப
* நெய் 2ஸ்பூன்
செய்முறை
* வாணலியில் நெய் விட்டு சீரகம்போட்டு, தாளிக்கவும். பின்பு இஞ்சிபூண்டு விழுது, நறுக்கியவெங்காயத்தைபோட்டு வதக்கவும். பின்பு மஞ்சள்பொடி, ரசப்பொடி,சாம்பார் பொடி,கரம் மசாலா பொடி போட்டு ,கிளறவும். அடுத்து நறுக்கிய தக்காளியையும்,உப்பையும் போட்டு சிறிது நீரையும் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் பொரித்த இட்லியை போட்டு 1கொதி வந்ததும் இறக்கி மல்லிதழைதூவி பரிமாறவும்.
குறிப்பு:
சிறிய கிண்ணங்களில் வைத்து மேலாக சிறிது நெய்விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவும்.