anbuselvi20052000: அழுகின்ற குழந்தைக்கு ஆறுதல் அளிப்பதும்,
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுவதும்,
இலங்கை தமிழருக்கு இங்கிருந்து வருந்துவதும்,
சோமாலிய உயிர்களுக்கு சோறில்லை என்றபோதும் ,
விழுந்து எழதுடிகும் விதைகளுக்கு நீர் ஊற்றுவதும் ,
குளிரில் நனையும் குட்டிபூனையை அரவணைப்பதும் ,
போர்களத்தில் விழுந்த எதிரிக்கும் மருத்துவம் பார்ப்பதும், பசித்துவரும் உறவினர்க்கு உணவினை பகிர்வதும்,
மக்களுக்கு உணர்வினை பகர்வதும்,
புவினடுக்கதில் புதையுண்ட மக்களுக்கும்,
சுனாமியில் சுருண்டுவிட்ட எல்லா உயிர்களுக்கும் .
எரிமலையின் தீ நாக்குகளில் எறிந்துவிட்ட எல்லா உயிர்க்கும் ,
அனுதாப படுவது மட்டும் மனிதநேயம் அல்ல,
அனைவர்க்கும் உதவ ஓடி வருவதே மனிதநேயம் !!
எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாத
மனித பண்பே மனிதநேயம்!!!