பிரியன் :
மழை பொழிகிறது குடை இல்லை!
உயிர் கரைகிறது விடை இல்லை !
இலவம் பஞ்சாய் இதயம் வெடிக்கிறது !
இந்த இளமை தாண்டி உயிர் துடிக்கிறது !
உன் வெட்கம் தானடி,நான் எழுதும் காகிதம்,
உன் பார்வை தானடி, எனை வெல்லும் ஆயுதம்!
உன் அழகிய நினைவுகள் தானடி,
இந்த உலகின் சிறந்த ஓவியம்!
இதய கோப்பையில் காதல் ஊற்றினாய்!
என் இயந்திர வாழ்கையில்
இளம் பூக்கள் நீட்டினாய் !
இரவின் உறக்கத்தில் கனவுகள் வீசினாய்!
உன் நியாபகம் தின்றே பசி தீர்க்கின்றேன்.
என் நிழல்களில் உனக்கு குடை பிடிக்கின்றேன் !
இன்னும் ஏனடி என்னை கொல்ல பார்க்கிறாய்!
நீ வானவில்லாய் வந்து செல்லும் சில நொடிகளில்
என் உயிர் மீண்டும் இந்த உடலில் சேர்க்கிறாய்!
பூகம்பம் ஆனாய்! புயலாய் சென்றாய் !
எப்போது நீ திரும்பி வருவாய்
தென்றலாய் என் இடத்தில்....