Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: பெண்களுக்குப் புற்றுநோய் வராமல் தடுக்கும் அரிய நிவாரணி 'தேநீர்' Thu Mar 25, 2010 2:20 am | |
| தேநீர் குடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. 2 ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களுக்குப் பச்சை தேயிலையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட 'கப்' தேநீர் தினமும் பருக வழங்கப்பட்டது. அவர்களில் 54 சதவீதமானோருக்குப் புற்று நோய் ஏற்படுவது குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கர்ப்பபை புற்று நோய் பாதிப்பில் இருந்து அவர்கள் தப்பித்தனர்.
இதன் மூலம் தேநீர் குடிக்கும் பெண்களுக்குக் கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய ஆய்வுகளின்படி தேநீர் குடிப்பவர்களின் இதயம் பலப்படும், அவர்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும். அதே வேளையில் தேவையற்ற, கேடு விளைவிக்கும் கொழுப்புகளைக் குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் எலுமிச்சை இலைகளின் மூலம் தலைவலியை குணப்படுத்த முடியும் என்றும் புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த இலைகளில் தலைவலியைக் குணப்படுத்தும் ஆஸ்பிரின் மருந்து குணம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .... | |
|