தேவையான பொருட்கள்
* ஜவ்வரிசி (சிறியது) - 1/2 கப்
* பச்சரிசி ரவை - 1 1/2 கப்
* தயிர் - 1 1/2 கப்
* ஊறவைத்த கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
* துருவிய தேங்காய் - 1 கப்
* சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
* கடுகு - 1 தேக்கரண்டி
* பச்சை மிளகாய் - 4
* எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
* உப்பு - தேவையான அளவு
* முந்திரி - 2 தேக்கரண்டி
* கருவேப்பிலை - 1/4 கப்
* கொத்தமல்லி இலை - 1/4 கப்
செய்முறை
* ஜவ்வரிசி, அரிசி ரவா, உப்பு அனைத்தையும் தயிரில் ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
* கடுகு, முந்திரி, பச்சை மிளகாய் தாளித்து ஊறவைத்த கலவையில் கொட்டவும்.
* ஊறவைத்த கடலை பருப்பு, துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை ஊரவைத்ததில் கொட்டி நன்கு கிளறவும்.
* சமையல் சோடா சேர்த்து கலக்கி இட்லி தட்டில் இட்லியாக ஊற்றி எடுக்கவும்.
* தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.