Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: வேறு காசி ஆனந்தன் Thu Apr 01, 2010 12:51 am | |
| கேட்பீர் தமிழ் மக்காள்... விதிக் கிழவி மிகக் கொடியாள்! ஆட்சி தர மறுப்பாள்! உமை அலைப்பாள்! துயர் கொடுப்பாள்! நாட்கள் சில போனால் இவள் நலிவாள்... உடல் மெலிவாள்! மிட்சி வருமொரு நாள்.. அது வரைக்கும் இவள் திருநாள்!
வையம் பெறும் இன்பம் ஒரு வல்லோன் கொடை யாகும்! தெய்வம் ஒரு நாளும் அட தீங்கிழைப்ப தில்லை! எய்தும் துய ரெல்லாம் விதி இவளின் விளையாட்டே! ஐயம் இதில் வேண்டாம்... இறை ஆற்றல்தனை யுணர்வீர்!
ஆண்டிலொரு நூறா? இலை அதிலே ஒரு பாதி தாண்டு முனம் தமிழர்க்கொரு தனிநா டுருவாகும்!
ஈண்டிதனை இறைவன் உமக் கெடுத்தருளச் சொல்லி வேண்டின தால் செப்புகிறேன்.. விடுக துய ரென்றான்!
காலமுனி உரைத்தான்! படை மறவர் களிப் புற்றார்! நீல நெடு வானம் வரை பாய்ந்தார் நிலம் வீழ்ந்தார்!
நாலுதிசை யதிரக் கரம் அடித்தார்! நகை வெடித்தார்! கோல முகம் படைத்தார்! முனி குளிர்ந்து மொழி தொடர்வான்...
பூத்த மரம் போல் விளங்கும் புதிய தமிழ்க் குலமே! காத்திருந்து கனி பறிப்பீர்... அதுவரைக்கும் இமைகள் சாத்தி உறங்காதீர்! படை வரிசை சரி பார்ப்பீர்!
கூத்து வருமொரு நாள்.. உயிர் கொடுத்து முடி கொள்வீர்!
போர் நாள் வரு முன்னே... இடை நாளில் தமிழ் மண்ணில் கூர் வாளிலும் கொடியோர் சிலர் குடி கொன்றிடப் பார்ப்பார்! சோர்வால் மனங் குலையா நிலை கொண்டே செயல் புரிவீர்! ஓர் நாள் வரும்... அந்நாள் தமிழ் உய்யுந் திருநாளே!
சாதி யெனுந் தீமை... மதச் சண்டை தலை தூக்கும்! வீதி குடி ஊர்களென வேற்றுமைக ளோங்கும்! நீதி நெறி சொன்ன தமிழ் நிலம் இழிவு தேடும்! மோதி விதிக் கிழவி செயல் வென்று முர சார்ப்பீர்!
பிச்சை யுண வொன்றே பெரி தென்பான் வயிறுடையான்! எச்சில் வரு மெனினுந் தமிழ் இனத்தை விலை வைப்பான்! நச்சு மகன் குடி கேடன் நன்றியிலாப் பாவி.. உச்சி பிளந்திடுவீர்! இவன் ஒழிந்தால் விடிவுண்டே!
தீனி முத லென்பான் வயி றுடையான்! இவன் தோழன் ஈன மகன் தன்ன லத்தான் இனத்தை மதிப்பானா? தா னுயர்வு பெறுவதெளில் தாள் பிடித்து நிற்பான்! மானம் விலை வைப்பான்! இவன் மனைவியையும் விற்பான்!
இழிவுடையான் தன்னலத்தான் எதுவரினும் அஞ்சான்! அழிவு தமி ழினமடைய அத்தனையுஞ் செய்வான்! மொழியினிலு மழகு தமிழ் மொழி மறந்த கொடியன்! குழி நெருப்பில் இவனுடலகம் கொடுத்து வெறி கொள்வீர்!
என்றுரைத்தான் காலமுனி எனது முகம் பார்த்தான்... நன்று கவிக் குழந்தாய்... ஒரு நாடமைக்க எழுந்தாய்! இன்றுவரை தமிழ்ப்புலவன் ஏடெழுதிக் கெட்டான்! உன்றனைப் போல களத்திலெவன் உலவியவ னென்றான்!
ஏடு படைக் கின்ற குலம் இனிய தமிழ் மொழிக்குக் கேடு படைப்போ ரதிரக் கிளர்ச்சி செயும் பொன்னாள் நாடு படைக் கின்ற திரு நாளென நான் மொழிவேன் ஓடு படையோடு புறம் உணர்ந்த மறத்தமிழா!
நாள் கனியும் நாள் கனிய மனங்கனியும் நாட்டில்! வாள் மறையும்! போர்க்கருவி கொலை மறையும்! அன்பே தோள் கொடுக்கும்! தமிழ்ச்சாதி அறஞ் சுமந்து வெல்லும் ஆள்பவராய்த் தமிழினத்தார் ஆவது மெய் யறிமின்!
என மொழிந்து காலமுனி இருகரமுந் தூக்கி புனல் பொழிந்த தென இதழில் புது முறுவல் சிந்தி இனியபடி வாழ்த்தி வெளி ஏற்றி வழி விட்டான்... முனிவரனின் அடிதொழுது முழங்கு படை பெயரும்.... | |
|