Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: புது நாளினை எண்ணி உழைப்போம் பாரதிதாசன் Thu Apr 01, 2010 1:09 am | |
| சும்மா கெடந்த நிலத்தைக் கொத்திச் சோம்பலில்லாமே ஏர் நடத்தி கம்மாக் கரையை ஒசத்திக்கட்டி கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி சம்பாப் பயிரைப் புடுங்கி நட்டுத் தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு
மண்ணைக் கிளறிக் குழியமைச்சு வாழைக் கன்னுகளை ஊடாலே வச்சு தண்ணி பெற அக்களை பறிச்சுச் சந்திர சூரியர் காண ஒழைச்சு ஒண்ணுக்கு பத்தாக் கிளைவெடிச்சு கண்ணுக் கழகா நிண்ணு தழைச்சு
இலை விரிஞ்சிருக்கு - காய்க் குலை சரிஞ்சிருக்கு
பெண்:
வாழை நிலைக்குது சோலை தழைக்குது ஏழைகளுக்கதில் என்ன கிடைக்குது?
கூழைக் குடிக்குது; நாளைக் கழிக்குது ஓலைக் குடிசையில் ஒட்டிக் கிடக்குது காடு வெளைஞ்சென்ன மச்சான் - உழைப்போர்க்கு கையுங்காலுந்தானே மிச்சம்?
ஆண்:
நாடு செழிச்சிட மாடா ஒழைச்சவன் நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன் மூடாத மேனியும் ஓடா எளச்சவன் போடா விதைகளும் போட்டு வளர்த்தவன் அரை வயித்து கஞ்சி குடிக்கிறான் - சிலநாள் அதுவுங் கிடைக்காமத் துடிக்கிறான்
பெண்:
மாடா உழைச்சவன் வீட்டினிலே - பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?
ஆண்:
அவன் தேடிய செல்வங்கள் சீமான் வீட்டினிலே சேர்ந்ததினால் வந்த தொல்லையடி
பெண்:
பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு - இனிப் பண்ண வேண்டியது என்ன மச்சான்?
ஆண்:
தினம்- கெஞ்சிக் கிடப்பதில் பஞ்சந் தெளியாது தஞ்சம் துணிஞ்சிட வேணுமடி
பெண்:
சிறும் புயலால் மெலிந்தவருக்குச் - சர்க்கார் செஞ்ச உதவிகள் என்ன மச்சான்?
ஆண்:
அங்கு- நாளும் பிணத்தைப் புதைப்பதற்கு - நம்ம நாணய சர்க்கார் உதவுமடி
பெண்:
தங்கவும் வீடின்றித் திங்கவும் சோறின்றித் தத்தளிப்போர்கெதி என்ன மச்சான்?
ஆண்:
நாட்டில்- எங்கும் தொழிலாளர் கூட்டமடி - அவர் பங்காளி போன்றோரைக் காப்பாரடி
பெண்:
ஏழைகள் ஒன்றாய் இணைந்து விட்டால் - இங்கு எஞ்சியுள்ளோர் நிலை என்ன மச்சான்?
ஆண்:
சில- பேழை வயிற்றுப் பெருச்சாளிகள் - எதிர் காலத்தை எண்ணித் தெளிவாரடி
பெண்:
நாளை விடிஞ்சாப் பெரும் பொங்கல் - அதில் நாமும் கலந்திட வேணும் மச்சான்
ஆண்:
மிக- நல்லது வள்ளி கலந்திடுவோம் - புது நாளினை எண்ணி வணங்கிடுவோம்
இருவர்:
வல்லமையாலே வளம் பெறுவோம் - பசித் தொல்லை அகலத் தொழில் புரிவோம்! | |
|