Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: மடந்தை கனிமொழி Thu Apr 01, 2010 1:13 pm | |
| வழக்கமான ஆழ் உறக்கம் வெடித்து அதிர்ந்தது மௌனம் மெல்ல அசைந்தது பூமி கடல்கோளா நிலக்கோளா ஜன்னலின் வெளியே தீப்பூக்களாய் தகதகத்தது வானம் சில்லிட்ட தரையில் கூசிய பாதம் பதித்து நடந்தேன். திருவிழா அணிந்திருந்தது நகரம் வீதியில் கசகசத்தது பாலும் தேனும் புத்தாடை உடுத்திய மனிதர்கள் பட்சணங்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள். எமது தளபதிகள் பவ்யமாய் பூத்துப் பஞ்சடைந்த பாட்டியின் காரைபெயர்ந்த வீட்டுக் கதவைத் தட்டினார்கள். சுருங்கித் தேய்ந்த அவளது காலடியில் பட்டயங்களை அர்ப்பணித்தார்கள் சில்லிட்ட தகட்டின் குறுகுறுப்பு கூச நகர்ந்துகொண்டாள். மருண்டு சிறுத்த விழிகள் மிரண்டு விழித்தன நீண்டு கனத்த தாரைகள் முழங்கின. முரசுகள் ஆர்ப்பரித்தன பற்றப்படாத அப்பேரிளம் பெண்ணின் மெலிந்து கருத்த விரல்கள் நடுங்கின. தனையர்கள் திரும்பினர் கொடிகளும் உதிர்ந்த இதழ்களும் எச்சமிருந்தன கிழவியின் மந்த செவிகளில் தூரத்து கோஷங்கள் கரைந்தன அவளது குறுகிய தாழ்வாரத்தில் இருந்த பெரும் இருளை விடியலின் மஞ்சள் கதிர்கள் தாண்டவில்லை. | |
|