பச்சை மை கையெழுத்தும்,பணப்பட்டுவாடாவும்
சமீபத்தில் ஒரு தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தேன்..விண்ணப்ப படிவத்திலும்,விண்ணப்பம் அனுப்ப கேட்டிருந்த சான்றிதழ் களிலும் பச்சை மையினால் கையெழுத்து போடும் அதிகாரமுள்ள அதிகாரியின் சான்றிதழ் சரிபார்ப்பு கையொப்பம் கேட்டிருந்தார்கள்.. சான்றிதழ் சரிபார்ப்பு கையொப்பம் பெறுவதற்காக சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை சென்று அங்கு அரசு மருத்துவர் ஒருவரை அணுக முயற்சித்தபோது உதவியாளர் குறுக்கிட்டு சொல்கிறார்.. கையெழுத்து போட ரூ 50 எடுத்து வச்சுக்கோங்க..மேடம் கு கொடுக்கணும்னு..அப்போதான் கையெழுத்து போடுவாங்கன்னு..ஓகே..நான் மேடம் கிட்ட பேசிக்கிறேன் படிப்புக்கான விண்ணப்பம் தானே.அவர்களுக்கு பச்சை மையினால் கையெழுத்து போடும் அதிகாரம் இருக்கவே இங்கே வருகிறோம்..
இதற்கு போய் பணம் கேட்கிறீர்களே என்றபோது,மருத்துவர், இங்க நிறைய கூட்டம் இருக்கு..எனக்கு இப்போ கையெழுத்து போட நேரமில்ல..வேற டாக்டர் அ பாருங்க என்று பதில் சொல்கிறார்.. அது உண்மையோ என்றெண்ணி பக்கத்துக்கு மருத்துவரை அணுக முயன்ற போது,உதவியாளர் சொன்ன பதில்.. படிச்சவங்க தானே நீங்க? மேடம் சொல்றது புரியலையா ரூ 50 கொடுங்க..கையெழுத்து போட்டு கொடுத்துடுவாங்க..எந்த டாக்டர் அ நீங்க பார்த்தாலும் பணம் கொடுக்காம நடக்காது சார்..எந்த காலத்துல இருக்கீங்க நீங்கன்னு.. எவ்வளவு செலவு பண்ணி படிச்சிருக்கோம்..சும்மா கையெழுத்து போட்டு தரனுமான்னு மருத்துவர் கேட்க்கிறார்.
எவ்வளவோ முயற்சித்தும் நேரம் போனதே தவிர கையெழுத்து பெற இயலவில்லை..பணம் கொடுத்தால் ஒரிஜினல் சான்றிதழ் களை பாராமலே கையெழுத்து போட்டு கொடுக்க தயாராய் இருக்கிறார்கள்..பணம் கொடுக்க இயலாது என்றால் ஒரிஜினல் சான்றிதழ் இருந்தாலும் வேலைக்காகாது என்கிற நிலை.. எல்லா அதிகாரிகளும் இப்படி நடந்துகொள்வதில்லை..பெரும்பான்மையானவர்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்..
அப்போ ரூ 50 கொடுக்க இயலாத ஏழை மாணவனின் நிலை..??? ரூ 50 கூட கொடுக்க இயலாதவன் ஏன் படிக்க வேண்டும்.காசில்லாம வேணும்னா நீங்க படிச்ச பள்ளி,காலேஜ் ல போய் வாங்கிக்கோங்க.. பொறுப்பிலுள்ள அரசு அதிகாரிகளின் பதில் இதுதான்