குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு
Author
Message
Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
Subject: குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Wed Apr 14, 2010 8:21 pm
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு
சில வேளைகளில் தாய்மார் தனது நாம் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனக் குறைவாக சில தவறுகளை மேற்கொள்வதுண்டு . இந்த தவறுகளை மேற்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகமாகும் இதைதடுக்க சில ஆலோசனைகள்.....
சில வேளைகளில் நாம் மருந்துகளை உணவுடன் கலந்து கொடுப்பது உண்டு இதனால் அக்குறிப்பிட்ட மருந்தினது செயல் திறன் இழந்துவிடுகிறது.எனவே மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு கொடுப்பது நல்லது. அப்படியே கொடுப்பதானாலும் குழந்தைக்கு உணவு கொடுத்த பின்னர் கொடுக்கலாம் அல்லது மருந்தையும் உணவையும் கலந்து வைக்காமல், சாப்பிடக் கொடுப்பதற்கு முன் கலந்து கொடுக்கலாம்.
சிலர் தேவைப்படாத நேரங்களை மருந்துகளை கொடுபப்துண்டு அதாவது சாதரண தும்மல், இருமல் போன்றவற்றுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டியதில்லை. நோய் தீவிரமாகிவிடுமோ என்ற பயத்தில் மருந்துகளைக் கொடுப்பது பக்க விளைவுகளையே ஏற்படுத்தும்.
சில குழந்தைகளுக்கு ஏற்கவே ஏற்பட்ட நோய் மீண்டும் ஏற்படலாம் எனவே ஏற்கவே கொடுத்த மாத்திரையை மீண்டும் கொடுப்பது ஆபத்தை ஏற்படுத்தும்.அத்துடன் பெரியோர்கலுக்கு கொடுக்கும் மருந்து மத்திரையை அளவுகளை குறித்து குழந்தைகளுக்கு கொடுப்பது ஆபத்தானது. குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின் பிரகாரம் மருந்துவகைகளை கொடுப்பது சிறந்ததாகும்.
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு