சில பழமொழிகள்
1. ‘பந்திக்கு முந்து, படைக்கு பிந்து’
2. ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே’
3. அடியாத மாடு படியாது
4. ஆசைஅறுபது நாள்
மோகம் முப்பது நாள்
5. நாய் விற்ற காசு குறைக்காது
பூ விற்ற காசு மணக்காது
6. தை பிறந்தால் வழி பிறக்கும்
7. காலத்தே பயிர் செய்
8. பாத்திரம் அறிந்து பிச்சை இடு
9. உரலில் தலையை கொடுத்துவிட்டு
உலக்கைக்கு பயந்தா ஆகுமா?
10. ஆசையிருக்கு தாசில் பண்ண
அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
11. அதிஷ்டம் தபாலில் வந்தா
தரித்திரம் தந்தியில் வருது.
12. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல மணிதனுக்கு ஒரு சொல்
13. ஆலை இல்லாத ஊருக்கு இளுப்பை பூ சர்க்கரை
14. ‘’இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்’’
15. யானைக்கும் அடி சறுக்கும்.
16. அறிந்தறிந்து செய்த பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.
17. உயிர் காப்பான் தோழன்
18. யானையானய நண்பரைக் கழிக்கொளல் வேண்டும்
நாயனைய நண்பரைத் தழிக்கொளல் வேண்டும்.
19. தேன் எடுப்பவன் புறங்கை நக்காமல் இருப்பானா
20. குப்பையிலே கிடந்தாலும்
ண்டு மணி நிறம் மாறாது.
21. தூக்கி விட்ட பூனையா எலி பிடிக்கும்?
22. அரைக்காசுக்கு மொட்டை போட்டாளாம் அடுத்த வீட்டம்மா.
23. ’தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’’
24. வாத்தியார் பிள்ளை மக்கு
வைத்தியன் பிள்ளை சீக்கு
25. பந்திலேயே இடமில்லை இவன் இலை கிழிசல் என்றானாம்.
26. இலவு காத்த கிளி
27. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
28. தீரா கோபம் போராய் முடியும்.
29. பொருமை கடலைன் பொறியது
30. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலே
31. காலைச் சுத்தின பாம்பு கடிக்காமல் விடாது.
32. பாப்பாத்தியம்மா! மாடு வந்தது
கட்டுனா கட்டு கட்டாட்டிப் போ!
33. ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கணும்
பாடிக்கறக்கிற மாட்டை பாடித்தான் கறக்கனும்
34. கொலையும் செய்வாள் பத்தினி
35. துள்ளுகிற மாடு பொதி சுமக்குமா
36. வாயாலயே வானத்தை அளப்பான்,
37. குலைக்கிற நாய் கடிக்காது,
38. அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்
39. எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றிணால் போல
40. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்
41. பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது
42. பாக்கை மடியில் கட்டலாம் தோப்பை கட்ட முடியுமா?
43. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும்
மரம் ஏறிக் கைவிட்டவனும் ஓண்ணு
44. கிளி மாதிரி பொண்டாட்டி இருத்தூம்
கொரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி இவனுக்கு.
45. விடிஞ்சா கல்யாணம்
புடிடா பாக்கு வெத்திலை
46. நக்குற நாய்க்கு
செக்கு என்ன? சிவலிங்கம் என்ன?
47. ‘’சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’’
48. ஆடமாட்டாத தேவடியா
கூடம் போதாதுன்னாளாம்
49. ஆடத் தெரியாத தேவடியா
முத்தம் கோணல் என்றாளாம்
50. ‘வந்துதடியக்கா சண்டை
வையடி கட்டுச் சோத்தை
51. குதிரை குப்புறவும் தள்ளி
குழியும் பறிச்சுதாம்!
52. ஆறுவயசுல அண்ணன்-தம்பி
பத்து வயசிலே பங்காளி.
53. தாயும் பிள்ளையும் என்றாலும்
வாயும் வயிறும் வேறு வேறு
பேதுமென்ற மனமே
பொன் செய்யும் மருத்து’’
54. தினை விதைத்தான் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
55. எண்ணெயை தடவிகிட்டு குப்பர விழுந்து புரண்டாலும்
ஒட்டற மண்தான் ஒட்டும்
56. பாம்பின்கால் பாம்பறியும்
57. நாய்க்கு வேலையில்லையாம், ஆனால் நிற்பதற்கு நேரமில்லையாம்
58. வச்சா குடுமி
செரச்சா மொட்டை
59. அரக்கப்பறக்க சம்பாதிச்சாலும்
படுக்க பாய் இல்லே
60. உழுதவன் கணக்குப் பாத்தா
ஒழக்கும் மிஞ்சாது
61. அரைப்படி அரிசி அன்னதானம்
விடிய விடிய மோள தாளம்
62. எறியிற வீட்டில்
புடுங்கினது லாபம்
63. சும்மா இருந்த சங்கை
ஊதிக் கெடுத்தாணாம் ஆண்டி
64. சும்மா இருந்த சிட்டுக்குருவியின் முதுகில் குத்துவானேன் அது கொண்டையை கொண்டையை லாத்திக்கிட்டு கொத்த வருவானேன்?
65. உழிகிறநாளில் ஊருக்குப் போய்யிட்டு
அறுக்கிறநாளில் அரிவாள் எடுத்துட்டுப்
66. தினை விதைத்தான் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
67. சாணி சட்டியும் சருவச் சட்டியும் ஒன்றா?
68. துடைக் முடியாவற்றை தட்ட வேண்டும்
69. அக்கரைக்கு இக்கரை பச்சை
70. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
71. அரசனை நம்பி புருஷனை கைவிட்டார்
72. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
73. அரண்மனையை பகைத்தாலும் அண்டை வீட்டை பகைக்காதே.
74. அகப்பையில் குறைந்தால் கொழுப்பும் குறையும்
75. அவசரம் ஆபத்தில் முடியும்
76. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’
77. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
78. ஆபத்திற்க்கு பாவம் இல்லை
79. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
80. ஆழமறியாமல் காலை விடாதே
81. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
82. இறைக்கிற கிணறுதான் சுரக்கும்
83. இருந்து கொடுத்ததை நடந்து வாங்கு
84. இரவல் சோறு பஞ்சம் தீர்க்குமா?
85. மாமியார் ஓடச்சா மண்குடம்
மருமகள் ஓடச்சா பொன்குடம்
86. ஊரான்வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன்பிள்ளை தானே வளரும்
87. ஆடையில்லாத ஊர்ல
கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
88. சாகாமல் கற்பதே கல்வி
பிறரிடம் ஏகாமல் உண்பதே ஊன்.
89. சிந்தின வீட்டில் சேராது மங்கின வீட்டில் வராது.
90. அரண்மனையைப் பகைத்தாலும் அண்டைவீட்டை பகைக்காதே
91. அகப்பையில் குறைந்தால் கொழுப்பும் குறையும்
92. அடிக்கிற கைதான் அணைக்கும்
93. அருகங்கட்டையும் ஆபத்தில் உதவும்
94. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
95. ‘உழுகிற நாளில் ஊருக்கு போனால்
அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை’
96. உறவு போகாமல் கெட்டது
97. கடன் கேட்காமல் கெட்டது
98. உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா ?
99. உரலுக்கேத்த உலக்கைதான் பலன் தரும்
100. உலை வாயை முடினாலும்
ஊர் வாயை முட முடியாது
101. ஊரார் பண்டம் உமிபோல
தன் பண்டம் தங்கம் போல
102. ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து,மனுசனையா கடிக்கத் தொடங்கி விட்டான்
103. ஆண்டியின் சொல் அம்பலம் ஏறாது.
104. ஆற்றில் குளிக்கப் போய் சேற்றை பூசிக் கொண்டான்
105. ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை
106. ஆடு மாடு இல்லாதவன் அடை மழைக்கு ராஜா
பொண்டாட்டி பிள்ளை இல்லாதவன் பஞ்சத்திற்கு ராஜா
107. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு.
108. இருக்கை தட்டினால்தான் ஓசை வரும்
109. இளமையில் குற்றம் கண்ணுக்கு தெரியாது.
110. இல்லை என்கிற விட்டில் பல்லி கூட சேராது
111. இட்டதெல்லாம் பயிராகுமா.
112. இளமையில் முயற்சி முதுமையில் காக்கும்
113. ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கினான்
114. ஈனர் சகவாசம் இறுதியில் தெரியும்.
115. ஊரோடு ஒத்து வாழ்.
116. ஊர்கூடித்தான் தேர் இழுக்க முடியும்
117. ஏரி உடைவதற்கு முன் அனை போட வேண்டும்
118. ஒருவனாய் பிறந்தால் தனிமை
இருவராய் பிறந்தால் பகைமை