இசுலாமிய சமயப் பின்புலம் கொண்டோர் இயற்றிய தமிழ் இலக்கியம் இசுலாமிய தமிழ் இலக்கியம் எனப்படுகிறது. இசுலாமிய சமயம் தொடர்பான தமிழ் இலக்கியங்களே இவ்வாறு சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன.
தமிழ்நாட்டு மதுரையை தில்லி சுல்தான் படைகள் 1311 ம் ஆண்டு கைப்பெற்றின..[1] நாயக்கர்கள் இவர்களை 1371 ம் ஆண்டு தோற்கடித்தனர்.[2] தமிழ்நாட்டின் பல பகுதிகளை நவாப்புக்கள் 1690 - 1801 காலப்பகுதியில் ஆட்சி செய்தனர். தமிழ்நாட்டில் இசுலாம் பரவ இசுலாமிய ஆட்சி ஒரு முக்கிய காரணமாகும். [3]
தமிழ்நாடு, தமிழீழ வணிகர்களுக்கும் அரபிய, மாலாய் முசுலீம் வணிகர்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக வணிகம் நடந்தது. இவ்வாறு வணிகம் செய்ய வந்த சில அரபிய மாலாய் வணிகர்கள் தமிழ்ப் பென்களை மணந்து இங்கேயே தங்கினர்.
இறுகிய சாதிய அமைப்புக் கொண்ட இந்து சமயத்தில் இருந்து விலகி சகோதரத்துவத்தை கொள்கையாக கொண்ட இசுலாமிய சமயத்துக்கு குறிப்பிடத்தக்க தமிழர்கள் மதம் மாறினர்.
இப்படி பல வழிகளில் இசுலாம் தமிழரிடையே பரவியது.
இலக்கியம்
சீறாப்புராணம்
முகைய்தீன் புராணம்
மோகிதீன் புராணம்
பெண்புத்திமாலை
நெஞ்சில் நிறைந்த நபிமணி
குணங்குடியார் பாடல்கள்
சீறா கீர்த்தனைகள்
இசுலாமிய தமிழ் இலக்கிய வடிவங்கள்
கிஸ்ஸா
நாமா
படைப்போர்
மசலா
முனாஜாத்து
மாலை
கண்ணி
புலவர்
உமறுப் புலவர்
சதக்கத்துல்லா அப்பா
அப்துல் காதர் நயினார் லப்பை
பிச்சை இபுராகிம் புலவர்
முகம்மது கான்
அப்துல் மஜீது
முகமது உசேன்
சீதக்காதி
கண்ணகுமது மகதூம் முகம்மது - நூல் பதிப்பாளர், 70 நூல்களுக்கு மேல்